தினகரன் 20.12.2013
திருச்சி மாநகரில் 4 பூங்கா சீரமைப்பு மேயர் ஆய்வு
திருச்சி, : திருச்சி மாநகராட்சியில் இ.பி. ரோட்டில் உள்ள லூர்துசாமி பூங்கா, கள்ளத்தெருவில் உள்ள திரவியம் பிள்ளை பூங்கா, பீரங்கி குளத்தெருவில் உள்ள டாக்டர் வீ.கே. ரங்கநாதன் பூங்கா, மேலப்புலிவார்டு சாலையில் அமைந்துள்ள இப்ராகிம் பூங்கா ஆகியவை புனரமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இருந்த பழுதான விளையாட்டு சாதனங்கள் மாற்றப்பட்டும், சேதமடைந்திருந்த பகுதிகள் செப்பனிடப்பட்டும் வருகின்றன. இந்த பணிகளை மேயர் ஜெயா நேற்று ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுமாறு அறிவுறுத்தினார். மேலும் மைதானமாக உள்ள ரங்கநாதன் பூங்காவின் ஒரு பகுதியில் உடற்பயிற்சி நிலையம் அமைக்கவும் உத்தரவிட்டார்.ஆய்வின்போது நகர பொறியாளர் சந்திரன், செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி ஆணையர் ரங்கராஜன், கவுன்சிலர்கள் சுதாகர், லாவண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.