Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி 27.04.2010

மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர்

திருச்சி, ஏப். 26: திருச்சி மாநகரிலுள்ள குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் குடிநீர் இணைப்பு மூலம் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோடைக் காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு வராமல் தடுக்க தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாநகராட்சியால் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யும் நேரத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்கப்படுகிறதா என சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும் சில பகுதிகளில் குடிநீர் இணைப்பில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதாக புகார்கள் வருகின்றன. இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கை கண்டறியப்பட்டால், மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 

தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஓசூர் நகராட்சி தலைவர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 26.04.2010

தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஓசூர் நகராட்சி தலைவர் எச்சரிக்கை

ஓசூர்: ''தவறு செய்யும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும், '' என நகராட்சி தலைவர் சத்யா எச்சரிக்கை செய்துள்ளார். ஓசூர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் சத்யா தலைமையில் நடந்தது. கமிஷனர் பன்னீர் செல்வம், துணை தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: ஜெய்ஆனந்த் (தி.மு.., ): ராஜகால்வாய் கால்வாயில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலங்களில் மழை நீர் ஏரியில் இருந்து வெளியேற கால்வாய் இல்லாததால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. நகராட்சி தலைவர் சத்யா: ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். பிரகாஷ் (காங்.,): அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி திட்டப்பணிகள் பணம் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நடக்கும் ஒரு சில பணிகளை அதிகாரிகள் மேற்பார்வையிடுவதற்கு வருவதில்லை. பணிகளில் பல்வேறு முறைகேடு நடக்கிறது.

சத்யா: பஸ்ஸ்டாண்ட் பணிக்கு நகராட்சி பொது நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் எடுக்கப்பட்டது. இதனால், வார்டுகளில் நடக்கும் மற்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் பணி முடிந்ததும், முன்போல் வளர்ச்சி திட்ட பணிகள் தொய்வில்லாமல் நடக்கும். அதுவரை குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய பணிகள் மட்டும் நிறைவேற்றப்படும்.

நகராட்சி துணை தலைவர் மாதேஸ்வரன்: சாந்தி நகர் பிள்ளையார் கோவில் எதிரே உள்ள வணிக வளாகத்துக்கு பில்டிங் 'அப்ரூவல்' வழங்குவதற்கு, அதன் உரிமையாளரிடம் ஒரு பெண், 'நகராட்சி தலைவர், துணை தலைவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்' என கூறி மூன்று லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.இதை போல் எத்தனை கட்டிட உரிமையாளர்களிடம் நகராட்சி பெயரை பயன்படுத்தி புரோக்கர்கள் லஞ்சம் பெற்று உள்ளார்களோ? தெரியவில்லை.நகராட்சி நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் சம்பந்தப்பட்ட பெண் புரோக்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்க பில்டிங் 'அப்ரூவல்' கமிட்டிக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்.

சத்யா: லஞ்சம் கொடுத்ததாக கூறும் வணிக வளாக உரிமையாளரை எழுத்து பூர்வமாக புகார் கொடுக்க சொல்லுங்கள்.தவறு செய்யும் அதிகாரிகள், புரோக்கர்கள் மீது நகராட்சி மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், ஆதாரம் இல்லாமல் வெறும் புகாரை மட்டும் கூற கூடாது.

விஜயகுமார் (தி.மு..,): ராம்நகர் மாரியம்மன் கோவில் திருவிழா 4ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைவசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

சீனிவாசன் (சுயேச்சை): கடந்தாண்டு நகராட்சி வரவு, செலவு கணக்கு இதுவரை தாக்கல் செய்யவில்லை. ஏன் தாமதமாகிறது.

சத்யா: வரும் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Last Updated on Tuesday, 27 April 2010 07:28
 

கட்டணத்தை குறைக்க ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் முறையீடு

Print PDF

தினமலர் 26.04.2010

கட்டணத்தை குறைக்க ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் முறையீடு

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி ஆடுவதைக்கூடத்தில் வசூலிக் கப்படும் கட்டணத்தை குறைக்கக் கோரி, ஆட்டிறைச்சி விற்பனை யாளர்கள் சங்கம் சார்பில், கலெக்டரிடம் மனு கொடுக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. ஆட்டிறைச்சி விற்பனையாளர் கள் சங்கம் சார்பில் கொடுக்கப் பட்ட மனு: ஆட்டிறைச்சிக் கடையை நம்பி 300க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வாழ் கிறோம். சென்றாண்டு வரை ஒவ் வொரு இறைச்சிக் கடையிலும் வாரம் 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், திடீரென முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், குத்தகைதாரர் ஆடு ஒன்றுக்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும் என, நிர்ணயித் துள்ளனர். இதுவரை ஆடு ஒன்றுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே செலுத்தி வந்தோம். எங்களுடைய இல்லத்தி லேயே சுகாதார முறைப்படி, பொதுமக்களுக்கும், மாநகராட் சிக்கும் எவ்வித இடையூறும் இன்றி ஆடுவதை செய்து, இறைச்சி விற்பனை செய்து வந் தோம். குத்தகை எடுத்தவர்கள், எங்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர். கோவை, ஈரோடு மாநகராட்சிகளில் ஆடு வதைக் கட்டணம் ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கின்றனர். திருப்பூரில் அதிக கட்டணம் நிர்ணயித்து கட்டாயப்படுத்து கின்றனர். கொடுக்காவிட்டால், இறைச்சியை பறிமுதல் செய்து லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என மிரட்டுகின்றனர். ஆடுவதைக் கூடத்தில் ஒரே நேரத்தில் 30 முதல் 40 ஆடுகள் வரை மட்டுமே வதை செய்ய முடியும். 300 கடைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமையில் ஒரு கடைக்கு 10 ஆடுகள் வரை அறுக்கப்படும். போதிய அளவு ஆடுவதைக் கூடம் இல்லை. 15 கி.மீ., தூரம் ஆடுவதைக்கூடம் வந்து, திரும்பிச் சென்று வியாபாரம் செய்ய இயலாது. இறைச்சியின் தன்மை மாறி விடும்.எனவே, கூடுதலாக எட்டு ஆடுவதைக்கூடங்கள் ஆங் காங்கே அமைக்க வேண்டும். ஐந்து ஏக்கர் பரப்பில் அமைந் துள்ள கோவை ஆடுவதைக் கூடம் 2.62 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 11 லட்சம் ரூபாய் ஏலம் என்கின்றனர். உழவர் சந்தை அருகில் அமைந்துள்ள தால் காலையில் விவசாயி களுக்கும் இடையூறு ஏற்படும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலம்பாளையம் நகராட்சி 21வது வார்டு கவுன்சிலர் சுப்ரமணியம் கொடுத்த மனு: நகராட்சி 21வது வார்டுக்கு உட்பட்ட திலகர் நகர் பகுதியில் 45 குழந்தைகளுடன் எஸ்.எஸ்.., துவக்கப்பள்ளி, கடந்த 2002ல் துவக்கப்பட்டது. தற்போது 120 குழந்தைகள் பயில்கின்றனர்; மூன்று ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். திலகர் நகர் பகுதியில் உள்ள ஒன்றிய துவக்கப்பள்ளி, தண்ணீர் பந்தல் துவக்கப்பள்ளி என்ற பெயருடன் இயங்கி வருகிறது. பள்ளியின் பெயரை திலகர் நகர் எஸ்.எஸ்.., பள்ளி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். பள்ளிக்கு தொடர்பில்லாத நபர் கள் விடுமுறை நாட்களில் புகுந்து விடுகின்றனர். இதைத் தடுக்க, சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னத்தூர் வெள்ளிரவெளி பகுதி மக்கள் கொடுத்த மனு: வெள்ளிரவெளி கிராமம் கல்லா குளம் பாறைபுறம்போக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக 50 குடும் பத்தினர் வசித்து வருகிறோம். இலவச வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்தோம். ஆனால், ஊராட்சி தலைவர் தலையீட்டால் பட்டா வழங்கு வது நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, ரேஷன் கார்டை திரும்பக் கொடுக்கும் போராட்டத்தை அறிவித்தோம். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்துக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது. ஆனால், இதுவரை பட்டா வழங்கப் படவில்லை. வீட்டுமனைப்பட்டா இல்லாததால், மின் இணைப்பு பெற முடியவில்லை. இதனால், அரசு வழங்கிய இலவச கலர் 'டிவி' பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே, உடனடியாக அந்த இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் மே 3ம் தேதி இலவச 'டிவி', ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய வற்றை திரும்பிக் கொடுக்கும் போராட்டம் நடத்துவோம். மே 10ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 27 April 2010 06:10
 


Page 436 of 506