கழிவு கொட்டினால் 'ஸ்பாட் பைன்' : மாநகராட்சி அதிரடி முடிவு
Monday, 26 April 2010 06:38
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினமலர் 26.04.2010 கழிவு கொட்டினால் 'ஸ்பாட் பைன்' : மாநகராட்சி அதிரடி முடிவு
திருப்பூர் : பொது இடங்களில் பனியன் தொழிற் சாலை கழிவுகளை கொட்டினால், அபராதம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பனியன் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. இரவு நேரங்களில் நொய்யல் ஆறு, ஜம்மனை பள்ளம் உள்ளிட்ட நீர்வழித்தடங்களிலும், சாலை ஓரங்களிலும் முறைகேடாக பனியன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் நொய்யலில் முறைகேடாக பனியன் கழிவுகளைக் கொட்டிய மினி ஆட்டோவை மேயர் கைப்பற்றி, அபராதம் விதித்தார்.வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தினரும் சில வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இருந்த போதும் முறைகேடாக கழிவுகள் கொட்டப் படுவது தொடர்கதையாகி உள்ளது. இதை யடுத்து, கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அபராதம் விதிக்க மாநக ராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து பனியன் தொழிற்சாலை கழிவுகள், வர்த்தக நோக்கில் பயன் படுத்தப்படும் கட்டடங்கள், நிறுவன உபயோகிப்பாளர்களால் ஏற்படும் கழிவு கள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்களில் ஏற்படும் கழிவுகள், பொது சாலையில் கொட்டப்படும் கழிவுகளை மாநகராட்சி லாரி மூலம் அகற்ற ஒரு டிரிப்புக்கு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பனியன் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை பொது சுகாதாரம் பாதிக்கப்படும் வகையில் கொட்டக்கூடாது. மீறினால், சம்பந்தப் பட்ட நிறுவன உரிமையாளருக்கு சம்பவம் நடந்த இடத்திலேயே அபாரதம் விதிக்கப்படும். முதல் முறையாக இருப்பின் 1,000 ரூபாய்; இரண்டாவது முறையாக இருந்தால் 3,000 ரூபாய் வசூலிக்கப்படும். தொடர்ந்து நிகழ்ந்தால், நிறுவனத்துக்கு 'சீல்' வைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த தீர்மானம், வரும் 29ம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் மன்ற ஒப்புதலுக்கு வைக்கப்படுகிறது.
Last Updated on Monday, 26 April 2010 06:40
|
ஊட்டியில் அனுமதியற்ற கட்டடங்களின் தண்ணீர், மின் இணைப்புகள் துண்டிப்பு
Friday, 23 April 2010 06:41
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினமலர் 23.04.2010 ஊட்டியில் அனுமதியற்ற கட்டடங்களின் தண்ணீர், மின் இணைப்புகள் துண்டிப்பு
ஊட்டி: ஊட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களின் தண்ணீர், மின் இணைப்பை துண்டிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று துவங்கின. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி தாலுகாக்களில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக 1,337 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன; இந்தக் கட்டடங்களை இடிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. விதிமீறி கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், குடியிருப்புகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் படி, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 985 கட்டடங்களை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து முடிக்க 6 மாத அவகாசம் வேண்டும் என ஊட்டி நகராட்சி கமிஷனர், கடந்த பிப்ரவரியில் மனு தாக்கல் செய்தார். கோர்ட் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, அனுமதியின்றி கட்டப்பட்ட 985 கட்டடங்கள் பட்டியலை தயாரித்து 25ம் தேதிக்குள் இந்த கட்டடங்களுக்கான மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என, நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்பணிகளை மேற்கொள்ள போதிய பாதுகாப்பு வழங்க, மாவட்ட போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டது. கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்புகளை துண்டிக்கும் பணி தொடர்பான கூட்டம் நடந்தது. நகராட்சி கமிஷனர் கிரிஜா, நகர திட்ட அலுவலர் சவுந்திரராஜன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலட்சுமி, கமிஷனர் கிரிஜா உத்தரவின் பேரில் பொறியாளர் ராமமூர்த்தி மேற்பார்வையில் அனுமதியற்ற கட்டடங்களில் தண்ணீர் இணைப்பை துண்டிக்கும் பணியை துவக்கினர். ஊட்டி சவுத்விக், குன்னூர் ரோடு, கோடப்பமந்து ஆகிய பகுதிகளில் இளநிலை பொறியாளர் கோபிகா மற்றும் நகராட்சி ஊழியர்கள் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணிகளை மேற்கொண்டனர். டி.எஸ்.பி., அசோக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் திருமேனி, சத்தியநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். மின்வாரிய செயற்பொறியாளர் ஆல்துரை, உதவி பொறியாளர் சிவகுமார் தலைமையில் மின் இணைப்பை துண்டிப்பது தொடர்பான ஆயத்த பணிகள் நடந்தன. 1993ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களின் தண்ணீர் மற்றும் மின் இணைப்பை துண்டிக்கும் பணி நடந்து வருகிறது. குழப்பும் நகராட்சி : கடந்த 1993ம் ஆண்டு முதல் அனுமதியற்ற கட்டப்பட்ட கட்டடங்களின் தண்ணீர் மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்க மின்வாரியத்துக்கு நகராட்சி சார்பில் ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முகவரி உள்ளதே தவிர, மின் இணைப்பு எண் இல்லை. நகராட்சியின் வரி ரசீதின் அடிப்படையில் தான் கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி கொடுத்த பட்டியலால் மின்வாரியத்தினர் குழம்பி போய் உள்ளனர்.
குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யாறு நகராட்சி எச்சரிக்கை
Thursday, 22 April 2010 06:43
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினமலர் 22.04.2010 குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யாறு நகராட்சி எச்சரிக்கை
செய்யாறு:'கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் உடனடியாக மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும்' என செய்யாறு நகராட்சி எச்சரித்துள்ளது.இது குறித்து செய்யாறு நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ராஜா தெரிவித்துள்ளதாவது:இப்போது கடும் வறட்சி நிலவுவதால், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் தடையில்லாமல் இருக்க நகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால், இப்போது பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக ஆங்காங்கே தாங்களாகவே பொதுக்குழாய் அமைத்து குடிநீர் பிடிப்பதாக புகார் வருகிறது. நகராட்சி அனுமதியில் லாமல் பொதுக்குழாய் அமைப்பது குற்றமான செயல் ஆகும்.மேலும், குடிநீர் இணைப்பு களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சப்படுவது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே, குடிநீர் பகிர்மான குழாய்களில் யாராவது பொதுக்குழாய் அமைத்தாலோ அல்லது மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தாலோ உடனடியாக குழாய் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும். மேலும், மின்மோட்டாரும் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்டப்படி காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Last Updated on Thursday, 22 April 2010 06:49
|
|
|
|
Page 438 of 506 |