Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு: 12 மின் மோட்டார்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 17.04.2010

மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு: 12 மின் மோட்டார்கள் பறிமுதல்

போடி, ஏப். 16: போடியில் நகராட்சி அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தியதில் குடிநீர் திருடப் பயன்படுத்திய 12 மின் மோட்டார்கள் ஒரு மணி நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

போடி நகராட்சியில் 33 வார்டுகளில் 10 ஆயிரத்து 300-க்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் உள்ளன.

இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 95 லிட்டர் குடிநீர் வீதம், 77 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பல வார்டுகளில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதால், குடிநீர் விநியோகம் சீராக நடைபெறவிûல் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது கோடை காலம் என்பதால், பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் இருந்து வந்தது.

இதனால் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதன்பேரில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் க.சரவணக்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு போடி பஸ் நிலையம் அருகில் உள்ள ஹோட்டல்கள், வீடுகளில் நகராட்சி அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஒரு மணி நேரத்தில் 12 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெள்ளிக்கிழமை இவற்றை நகர்மன்றத் தலைவர் ரதியாபானு, ஆணையர் க.சரவணக்குமார், துணைத்தலைவர் ம.சங்கர், 9-வது வார்டு கவுன்சிலர் ராஜா ஆகியோர் பார்வையிட்டனர். நகர்மன்றத் தலைவர் கூறும்போது, மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். மோட்டார் பயன்படுத்தி குடிநீரை எடுத்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்

Last Updated on Saturday, 17 April 2010 09:19
 

விதிமீறல் கட்டடத்துக்கு சீல் வைப்பு: சி.எம்.டி.ஏ. நடவடிக்கை

Print PDF

தினமணி 17.04.2010

விதிமீறல் கட்டடத்துக்கு சீல் வைப்பு: சி.எம்.டி.. நடவடிக்கை

சென்னை, ஏப். 16: சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்துக்கு சி.எம்.டி.. அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர்.

சென்னை பெருநகர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறியும், முறையான அனுமதியின்றியும் கட்டப்படும் கட்டடங்கள் மீது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்படி பல்வேறு கட்டடங்களை ஆய்வு செய்து நோட்டீஸ்களை வழங்கி தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தியாகராய நகர் பத்மநாபா தெருவில் கீழ்த்தளம் உள்ளிட்ட 4 அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடம் கட்ட கிருஷ்ணன் என்பவர் அனுமதி வாங்கி இருந்தாராம். ஆனால், அனுமதிக்கப்பட்ட விதிகளை மீறி, 5 மாடிகளைக் கொண்ட வணிக வளாகமாக அந்தக் கட்டடம் கட்டப்பட்டுவது தெரிய வந்துள்ளது.

தரைபரப்புக் குறியீடு, இடைவெளி விடாமல் கட்டியது, அடுக்குமாடி விதிகள் ஆகியவற்றை இந்த கட்டடத்தின் உரிமையாளர் மீறியுள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, வீதிமீறல்கள் குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், விதிமீறலை சரி செய்ய வேண்டும் என்றும் கட்டடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டும் கட்டடத்தின் உரிமையாளர் விதிமீறல்கள் குறித்து உரிய விளக்கம் அளிக்காததால், அந்த கட்டட வளாகத்துக்கு சீல் வைக்க சி.எம்.டி.. உறுப்பினர் செயலர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டார்.

இதன்படி, அக் கட்டடத்துக்கு சி.எம்.டி.. அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலையில் சீல் வைத்தனர். விதிமீறலை சரி செய்து புதிதாக ஒப்புதல் பெறும் வரை இந்த கட்டடத்தை எந்த விதத்திலும் பயன்படுத்துவது தடை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சி.எம்.டி.. அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Saturday, 17 April 2010 09:08
 

குடிநீர் கோரி சாலை மறியல் செய்ய தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை : மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 17.04.2010

குடிநீர் கோரி சாலை மறியல் செய்ய தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை : மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

சேலம்: 'சேலம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை காரணம் காட்டி சாலை மறியல் செய்ய பொதுமக்களை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டர் சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இயல்பான மழை அளவை விட குறைவாகவே பருவமழை பெய்தது. அதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பது இயல்பானதாகவே இருந்து வந்தாலும், குடிநீர் பற்றாகுறையை போக்க பல்வேறு கட்ட நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. குடிநீர் பற்றாகுறையை சமாளிக்க மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சேலம் மாவட்டத்துக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குடிநீர் பற்றாகுறையுள்ள பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், வீணாக்காமல் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பொதுமக்கள் குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்களில் சேதமடைந்திருந்தாலோ, குடிநீர் முறையாக விநியோகிக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டாலோ கலெக்டரிடம் மனுக்கள் கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். அதை தவிர்த்து சேலம் மாநகர மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் போராட்டம் நடத்துவது போன்ற செயல்கள் தவறான அணுகுமுறை என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை காரணம் காட்டி பொதுமக்களை சாலைமறியல் செய்யவும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்திடவும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கவும் தூண்டுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

Last Updated on Saturday, 17 April 2010 06:51
 


Page 441 of 506