Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கருணை நியமனத்திற்கு மாநகராட்சி கதவடைப்பு : காத்திருப்போர் கவலை

Print PDF

தினமலர் 16.04.2010

கருணை நியமனத்திற்கு மாநகராட்சி கதவடைப்பு : காத்திருப்போர் கவலை

மதுரை : மதுரை மாநகராட்சியில் கருணை அடிப்படை நியமனம் இல்லாததால், நீண்ட ஆண்டுகளாக பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் கல்விப் பிரிவில் இந்நிலைமை உள்ளது. கடந்த அ.தி.மு.., ஆட்சியில், கருணை அடிப்படையிலான நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின் வந்த தி.மு.., ஆட்சியில் அத்தடை விலக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பல துறைகளிலும் கருணை அடிப்படையிலான நியமனங்கள் தொடர்ந்தன. மதுரை மாநகராட்சியின் பிறபிரிவுகளில் 130க்கும் மேற்பட்டோர் கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ளனர்.

ஆனால் கல்விப்பிரிவில் மட்டும் நியமனம் இல்லை. இவர்களில் பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக இவ்வாய்ப்பை எதிர்நோக்கி ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டோரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் நடவடிக்கை இல்லை. சென்னை, கோவை மாநகராட்சிகளில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோ அதைப் போல நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆனால் அங்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளதாக காத்திருப்போர் தெரிவிக்கின்றனர்.

Last Updated on Friday, 16 April 2010 06:35
 

அனைத்து கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ்! : மே 31ம் தேதிக்குள் வைக்க மாநகராட்சி கெடு

Print PDF

தினமலர் 16.04.2010

அனைத்து கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ்! : மே 31ம் தேதிக்குள் வைக்க மாநகராட்சி கெடு

சென்னை : 'சென்னையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வரும் மே 31ம் தேதிக்குள் மாற்றி எழுத வேண்டும்' என்று மேயர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி, சென்னையில் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் பெயர் பலகைகளில், தமிழ் பிரதானமாக இருக்கும் வகையில் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் மேயர் சுப்ரமணியன் அறிவித்தார்.வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் முதன்மையாக இடம் பெறுதல் குறித்து நேற்று, வணிக சங்க பிரதிநிதிகளுடன் தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் கலையரங்கில் கலந்தாய்வு நடந்தது. மேயர் சுப்ரமணியன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வணிகத் துறை கூடுதல் கமிஷனர் முத்துவீரன், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் குமார், தபால் துறை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மற்றும் வணிக சங்கங்களின் பிரதிநிதிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதில், மேயர் சுப்ரமணியன் பேசியதாவது: கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி, சென்னையில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் பிரதானமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத் தப்படுகிறது. வரும் மே 31க்குள், பெயர் பலகைகளில் தமிழ் பிரதானமாக இடம் பெறும் வகையில் எழுத வேண்டும். தேவைப்பட்டால், மற்ற மொழியில் சிறிதாக எழுதிக் கொள்ளலாம். வணிக நிறுவனங்களில் ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழ் படுத்தி எழுதாமல், தூய தமிழில் எழுத வேண்டும். தமிழ்வாணன் போட்டோ ஸ்டூடியோ என்பதை அப்படியே தமிழில் எழுதாமல் தமிழ்வாணன் நிழற்பட நிலையம், மூவேந்தர் டெக்ஸ்டைல்ஸ் என்பதை மூவேந்தர் துணியகம் என்றும் எழுத வேண்டும். இல்லையேல், வரும் ஜூன் 1ம் தேதி முதல், மாநகராட்சி அந்த பெயர் பலகைகளை அகற்றும்.

இவ்வாறு மேயர் சுப்ரமணியன் பேசினார். கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வணிக சங்க பிரதிநிதிகளுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள தூய தமிழ் வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மேயர் சுப்ரமணியன் வினியோகித்தார்.

Last Updated on Friday, 16 April 2010 06:24
 

பெரியாற்றில் குடிநீருக்காக விடப்பட்ட தண்ணீர் திருட்டு: மோட்டார்கள் பறிமுதல்; மின் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி 13.04.2010

பெரியாற்றில் குடிநீருக்காக விடப்பட்ட தண்ணீர் திருட்டு: மோட்டார்கள் பறிமுதல்; மின் இணைப்பு துண்டிப்பு

கம்பம், ஏப்.12: தேனி மாவட்டம், பெரியாற்றில் இருந்து குடிநீருக்காகத் திறந்துவிடப்படும் நீரை,சிலர் திருடப் பயன்படுத்திய மோட்டார் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில், பொதுப்பணித் துறையினர் தலைமையிலான அதிகாரிகள் கூட்டாக மேற்கொண்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் தமிழகத்திற்கு பாசனத்திற்காகத் திறந்துவிடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டத்தில் தேவைக்கேற்ப குடிநீருக்காக மட்டும் இறைச்சல் பாலத்தின் வழியாக குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சிப் பகுதிக்கு சரியாக குடிநீர் கிடைக்கவில்லை என்றும், வரும் வழியில் குடிநீர் திருடப்படுவதாகவும் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பூ. முத்துவீரன் குடிநீரைத் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, பொதுப்பணித் துறையின் உதவிச் செயற்பொறியாளர் தமிழ்செல்வன், உதவிப் பொறியாளர்கள் சந்தனக்குமார், மகேந்திரன் ஆகியோரது தலைமையில், உத்தமபாளையம் வட்டாட்சியர் மனோகரன், மின்சார வாரிய உதவிப் பொறியாளர் சுப்பிரமணியன், லோயர்கேம்ப், கூடலூர் காவல்நிலைய போலீஸôர் கொண்ட குழுக்கள், கூடலூர்- குமுளி சாலையில் குறுவனத்துப் பாலத்தின் மேல்புறம் பெரியாற்றில் 2 மோட்டார்களில் தண்ணீர் திருடப்பட்டதைக் கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, வெட்டுக்காட்டுப் பகுதியில் 3 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரியாற்றில் தண்ணீர் திருடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட உறை கிணறுகள், மோட்டார் பெட்கள் உடைக்கப்பட்டன. இதேபோல, விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் 6 இலவச மின் இணைப்புகளை மின்வாரியத்தினர் துண்டித்தனர்.

புதன்கிழமையும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 13 April 2010 09:47
 


Page 443 of 506