Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீர் இணைப்பு துண்டிப்பு : மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர் 08.04.2010

குடிநீர் இணைப்பு துண்டிப்பு : மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

திருப்பூர் : திருப்பூர் மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதி களில், குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் வீடுகளில் இணைப்பு நேற்று துண்டிக்கப் பட்டது.திருப்பூர் மாநகராட்சி யில், 2009-10ம் ஆண்டு வரியினங்களுக்கான வசூல், கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந் தது. சொத்து வரியாக ரூ.23.5 கோடி; தொழில் வரியாக ரூ.72 லட்சம்; இதர வரியினங்களில் ரூ.1.90 கோடி வசூலாகி உள்ளது. சொத்து வரி 99 சதவீதம், தொழில் வரி 94 சதவீதம், இதர வரியினங் கள் 98 சதவீதம் வசூலாகி உள்ளன; ஆனால், குடி நீர் கட்டணம் மட்டும் 60 சதவீதமே வசூலானது.திருப்பூர் மாநகராட்சி யில் மொத்தம் 64 ஆயி ரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதன்மூலம், மாநகராட்சிக்கு ரூ.10 கோடி ரூபாய் குடிநீர் கட் டணமாக வசூலாக வேண்டும். ஆனால், ரூ.6.50 கோடி மட்டுமே வசூலான நிலையில், இன்னும் ரூ.3.50 கோடி பாக்கி உள்ளது. மாநக ராட்சி தரப்பில் பலமுறை நோட்டீஸ் தந்து, குடிநீர் கட்டண நிலுவை தொகை களை செலுத்த வலி யுறுத்தியும், பலரும் குடி நீர் கட்டணங்களை செலுத்த முன்வரவில்லை.

இதையடுத்து, கமி ஷனர் ஜெயலட்சுமி மேற் பார்வையில், பில் கலெக் டர்கள், வருவாய் ஆய் வாளர்கள் அடங்கிய 35 பேர் கொண்ட மாநக ராட்சி அதிகாரிகள் குழு, 12 மற்றும் 14வது வார்டு பகுதிகளில் நேரடி வசூ லில் ஈடுபட்டது. கட்ட பொம்மன் நகர், பாப்ப நாயக்கன்பாளையம், முருகசாமி லே-அவுட், டி.எம்.எஸ்., நகர், கொங்கு மெயின் ரோடு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில், குடிநீர் கட்ட ணம் செலுத்தாதவர் களின் வீடுகளுக்குச் சென்றது. நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணம் மற்றும் நடப்பாண்டுக்குச் செலுத்த வேண்டிய கட் டணம் உள்ளிட்டவை களை வசூலித்தது. இதன் படி, நேற்றைய வசூலில் ரூ.10 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது.

அதிகாரிகள் நேரில் சென்ற போதும், குடிநீர் கட்டணங்களை செலுத்த முன்வராத 15 வீடுகளில், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து, வார்டு பகுதி களில் அதிகாரிகள் நேரடி வசூலில் ஈடுபட்டு, பாக்கி யுள்ள குடிநீர் கட்டணங்களை வசூலிக்க உள்ளனர்.

Last Updated on Thursday, 08 April 2010 07:02
 

உள்ளாட்சிகளில் சட்டவிரோத குடிநீர் இணைப்பு காவேரிபுரம் பஞ்.,ல் 10 இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமலர் 08.04.2010

உள்ளாட்சிகளில் சட்டவிரோத குடிநீர் இணைப்பு காவேரிபுரம் பஞ்.,ல் 10 இணைப்பு துண்டிப்பு

மேட்டூர்: உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் மெயின் குழாயில் இருந்து ஏராளமானோர் வீடுகளுக்கு குடிநீர் எடுப்பதால், கொளத்தூர் டவுன்பஞ்., கிராமபுறங்களில் குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவேரிபுரம் பஞ்., அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பத்து இணைப்புகளை துண்டித்துள்ளனர். மேட்டூர் தாலுகா, கொளத்தூர் டவுன்பஞ்., 15 வார்டு உள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 250 பேர் வசிக்கின்றனர். தற்போது டவுன்பஞ்.,ல் 250 பொது குடிநீர் இணைப்புகள், 2,025 வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளது. காவிரியில் இருந்து தினமும் எட்டு லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொளத்தூருக்கு விநியோகம் செய்யப்படுகிறது. கொளத்தூர் ஒன்றியத்தில் 14 பஞ்சாயத்துகள் உள்ளது. 68 ஆயிரத்து 836 பேர் வசிக்கின்றனர். பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வடிகால்வாரியம் மூலம் தினமும் 25 லட்சம் லிட்., காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

குடிநீர்வாரியம் சுத்திகரித்து தரும் குடிநீருக்கு லிட்டருக்கு 3 காசு வீதம் பஞ்சாயத்து நிர்வாகம் கட்டணம் செலுத்துகிறது. ஆனால், கிராம பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் ஏராளமானோர் உள்ளாட்சி அனுமதி பெறாமல், முன்பணம் கட்டாமல் தாங்களாகவே பொதுகுழாயில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் எடுக்கின்றனர். சில இடங்களில் மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் எடுத்து செல்லும் மெயின் குழாயில் இருந்தே வீடுகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளதால், தொட்டிக்கு செல்ல வேண்டிய குடிநீரின் ஒரு பகுதி தனிப்பட்ட நபர்களின் வீட்டுக்கு சென்று விடுகிறது.

அதனால், போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். மேலும் பலர் தங்கள் வீடுகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதாலும், கிராம புறங்களுக்கு போதுமான அளவு குடிநீர் விநியோகம் செய்ய முடிவதில்லை. கொளத்தூர் ஒன்றிய பஞ்சாயத்துகளில் பல ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வீடுகளுக்கு சட்ட விரோதமாக எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட இதர மக்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். கொளத்தூர் டவுன் பஞ்., குடிநீர் பற்றாக்குறையால் பாதித்த அண்ணாநகர் மக்கள் கடந்த 5ம் தேதி மாலை பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலைமறியலில் ஈடுபட்டனர். நேற்று காலை 4வது வார்டு மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டவுன்பஞ்., தலைவர் நடராஜன், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்து மறியலை கைவிட செய்தனர்.

இந்நிலையில், குடிநீரை சட்டவிரோதமாக பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுக்க முதல் கட்டமாக காவேரிபுரம் பஞ்.,ல் நேற்று முன்தினம் பஞ்., தலைவர் பாலசிங்கம், குடிநீர் வாரிய உதவி பொறியாளர் மாணிக்கம், போலீஸார் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற் கொண்டனர்.

அப்போது கோவிந்தபாடியில் இருந்து அரிசிபாளையம் மேல்நிலை தொட்டிக்கு செல்லும் மெயின்குழாயில் இருந்து சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட நான்கு குடிநீர் இணைப்புகள், சத்யாநகரில் இருந்து மாமரத்துக்காடு தொட்டிக்கு செல்லும் குழாயில் இருந்து எடுத்த 5 குடிநீர் இணைப்பு, கத்திரிப்பட்டி மெயின் குழாயில் இருந்து எடுத்த ஒரு இணைப்பு உள்பட 10 இணைப்புகளை குழுவினர் துண்டித்தனர்.

இதுபோன்ற சட்டவிரோத குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதால், அனைத்து மக்களுக்கும் தேவையான அளவு குடிநீர் கிடைக்கிறது. கொளத்தூர் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் சட்டவிரோத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Thursday, 08 April 2010 06:54
 

சென்னை மாநகராட்சி விரிவாக்க பணிகள் தீவிரம்

Print PDF

தினமலர் 08.04.2010

சென்னை மாநகராட்சி விரிவாக்க பணிகள் தீவிரம்

சென்னை : சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும், பூர்வாங்க பணிகள் முடியும் நிலையில் உள்ளது.சென்னை புறநகர் பகுதிகளான ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், 25 'ஊராட்சிகளை ஒருங்கிணைத்து சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விரிவாக்கத்திற்கு அமைக்கப் பட்டுள்ள அதிகாரிகள் குழுவினர் பல நிலைகளில் ஊராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத் தினர்.மத்திய அரசு மூலம் கிடைக்க பெற்ற, சென்னை மாநகரின் செயற்கைகோள் வரைபடத்தை வைத்து, வார்டுகள் பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சி வார்டுகளில் சாதாரணமாக மக்கள் தொகை 40 ஆயிரம் வரை இருக்கும் வகையில் வார்டுகள் பிரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநகராட்சியில் தற்போதுள்ள 155 வார்டுகளில் ஏறத்தாழ 50 வார்டுகள் குறைய வாய்ப்புள்ளதாகவும், பழைய சென்னை மாநகராட்சியில் 105 முதல் 110 வார்டுகள் இருக்கும்படி வார்டுகள் பிரிக்கப்பட உள்ளது.புதிதாக இணைக்கப்படும் பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு வார்டுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் மக்கள் தொகை இருக்கும் வகையில் வார்டுகள் பிரிக்கப் பட உள்ளது.அதன்படி, புதிதாக இணையும் பகுதிகளில் 70 முதல் 75 வார்டுகள் உருவாக்கப் பட்டு விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் மொத்தம் 175 முதல் 180 வார்டுகள் இருக்கும் வகையில் பிரிக்கப்பட உள்ளது.இந்த பணிக்கு அனைத்து விதமான குறிப்புகளும் தயார் செய்து வைத்திருப்பதாகவும் எந்தெந்த வார்டுகளை எந்த வார்டில் இணைப்பது, புறநகர் பகுதிகளில் புதிய வார்டுகளை உருவாக்குவது போன்ற பணிகளை உயர்நிலை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.விரிவாக்கப்படும் சென்னை மாநகராட்சியில் 18 மண்டலங்கள் அமைக்கப் படும்.

தற்போது இருக்கும் சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளும் நகரில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்குள் அடங்கி உள்ளது.ஆனால், விரிவாக்கப்படும் சென்னை மாநகராட்சியில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஒரு சில சட்டசபை தொகுதிகளின் சில வார்டுகள் மட்டும் மாநகராட்சியின் எல்லைக்குள் வரும் நிலை உள்ளது.அடுத்து சட்டசபை தொகுதிகள் மாற்றி அமைக்கும் போது மாநகராட்சி எல்லைக்குள் குறிப்பிட்ட சட்டசபை தொகுதிகள் இடம் பெறுவது போல் மாற்றி அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 174 சதுர கிலோ மீட்டர் விரிவாக்கப்படும்.சென்னை மாநகராட்சியின் பரப்பளவு, 426 சதுர கிலோ மீட்டர் தற்போதைய மாநகராட்சியின், மக்கள் தொகை 43 லட்சத்து 43 ஆயிரத்து 645 (2001 கணக் கெடுப்புப்படி). விரிவாக்கப்படும் சென்னை மாநகராட்சியின் மக்கள் தொகை 65 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Last Updated on Thursday, 08 April 2010 06:41
 


Page 445 of 506