Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தூத்துக்குடி உள்ளூர் திட்டக் குழுமப் பகுதியில் கட்டடம் கட்ட 30 நாள்களுக்குள் அனுமதி

Print PDF

தினமணி 05.05.2010

தூத்துக்குடி உள்ளூர் திட்டக் குழுமப் பகுதியில் கட்டடம் கட்ட 30 நாள்களுக்குள் அனுமதி

தூத்துக்குடி, ஏப். 4: தூத்துக்குடியில் உள்ளூர் திட்டக் குழுமப் பகுதியில் கட்டடம் கட்ட 30 நாள்களுக்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி உள்ளூர் திட்டக் குழுமப் பகுதிக்கு உள்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அய்யனடைப்பு, அத்திமரப்பட்டி, கீழத்தட்டப்பாறை, கோரம்பள்ளம், குலையன்கரிசல், குமாரகிரி, மறவன்மடம், மாப்பிளையூரணி, மீளவிட்டான், மேலத்தட்டப்பாறை, முள்ளக்காடு, முத்தையாபுரம், சங்கரப்பேரி, தெற்கு சிலுக்கன்பட்டி, தூத்துக்குடி ரூரல், வடக்கு சிலுக்கன்பட்டி, சாமிநத்தம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்லாநத்தம், புதூர் பாண்டியாபுரம், மேல அரசடி, கீழ அரசடி, தருவைக்குளம், புதியம்புத்தூர், கோவன்காடு, மாரமங்கலம், பழையகாயல், மஞ்சள்நீர் காயல் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் கட்ட அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 30 நாள்களுக்குள் முடிவெடுக்க அரசு ஆணையிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கட்ட அனுமதி வழங்க காலதாமதத்தைத் தவிர்க்கும்பொருட்டு தேவையான ஆட்சேபனையின்மை சான்றினை விண்ணப்பதாரர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பிக்கும்போது, நகர் ஊரமைப்பு துறை மற்றும் தூத்துக்குடி உள்ளூர் திட்டக் குழுமத்தின் கடிதத்தை கோராமல் உடனடியாக விண்ணப்பதாரருக்கு ஆட்சேபனையின்மை சான்று வழங்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

Last Updated on Monday, 05 April 2010 10:11
 

மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிப்பு

Print PDF

தினமணி 01.04.2010

மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிப்பு

தூத்துக்குடி, மார்ச் 31: தூத்துக்குடியில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோடை காலம் தொடங்கி விட்டதால் தூத்துக்குடி மாநகருக்கு வல்லநாடு ஆற்றுப்படுகையில் இருந்து வரக்கூடிய குடிநீரின் அளவு குறைந்துள்ளது, மேலும், சுழற்சி முறையில் ஏற்பட்டு வரும் மின்தடை காரணமாக நகரில் குடிநீர் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

மேலும், விநியோகிக்கப்படும் குடிநீரானது நகரின் கடைசிப் பகுதி வரை சென்றடையாத சூழ்நிலை காணப்படுகிறது.

எனவே, மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி வரும் நபர்கள் உடனடியாக மின் மோட்டாரை அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தவறும்பட்சத்தில் மாநகராட்சி அதிகாரிகளால் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் குடிநீர் குழாய் இணைப்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படுவதுடன், மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும். மேலும், குடிநீர் விநியோக அரசாணைகளின்படி ரூ. 7000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் விநியோகம் கோடை காலத்திலும் சிறப்பாக நடைபெற ஏதுவாக குடிநீர் பணியாளர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு மூலம் இம் மாதம் 5-ம் தேதி முதல் நகரில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் நேராய்வு செய்து, விதிமுறைகளுக்கு புறம்பாக மாநகராட்சி குடிநீர் பிரதான குழாய்களில் இருந்து மாநகராட்சி அனுமதியின்றி எடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள், மாநகராட்சி அனுமதியின்றி வீட்டு இணைப்பில் இருந்து விதிமுறைகளுக்கு முரணாக குடிநீர் விற்பனை செய்வது

மற்றும் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்து வரும் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் கோடை காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க மாநகராட்சி மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும், கிடைக்கின்ற குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.

Last Updated on Thursday, 01 April 2010 10:30
 

எல்லைகள் விரிவாக்கத்துக்கு தயார்

Print PDF

தினமணி 01.04.2010

எல்லைகள் விரிவாக்கத்துக்கு தயார்

வேலூர், மார்ச் 31: வேலூர் மாநகராட்சியின் எல்லைகள் விரிவாக்கத்துக்கான பணிகள் நிகழாண்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் நகராட்சி கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சிப் பகுதிக்கு அருகிலுள்ள உள்ளாட்சிப் பகுதிகளை இணைத்து, எல்லைகளை விரிவுபடுத்த ஜூலை 2008ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வேலூர் மாநகராட்சியோடு இணைக்கப்படவுள்ள 3 நகராட்சிகள், 3 மூன்றாம் நிலை நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 61 ஊராட்சிகள் குறித்த அறிவிப்பை அரசு அண்மையில் வெளியிட்டது. வரும், 2011ம் ஆண்டில் தற்போதுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததும், மாநகராட்சி எல்லை விரிவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, புதிதாக இணையும் பகுதிகளில் வார்டுகள் அமைத்தல், மண்டலங்கள் பிரித்தல், வார்டு பிரிவினைகளில் பெண்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினத்தவருக்கான இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது போன்ற பணிகள் நிகழாண்டில் மேற்கொள்ளப்படும் என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Last Updated on Thursday, 01 April 2010 10:11
 


Page 449 of 506