வரி செலுத்த அறிவுறுத்தல்
Thursday, 25 March 2010 09:55
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினமலர் 25.03.2010 வரி செலுத்த அறிவுறுத்தல்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை நாளைக்குள் (26ம் தேதி) செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொ) திருமலைவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை போன்றவற்றை நாளைக்குள் செலுத்தவேண்டும். இல்லாவிடில் சொத்துக்களை ஜப்தி செய்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
Last Updated on Thursday, 25 March 2010 09:56
|
பேரூராட்சிகளில் இயக்குனர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு
Thursday, 25 March 2010 09:26
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினமலர் 25.03.2010 பேரூராட்சிகளில் இயக்குனர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு
கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து பேரூராட்சிகளில், பேரூராட்சிகளின் இயக்குனர் அலுவலக அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. ஆண்டிபட்டி, மார்க்கையன்கோட்டை, அனுமந்தன்பட்டி, தேவாரம் மற்றும் ஓடைப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில், பேரூராட்சிகளின் இயக்குனர் அலுவலக அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. பேரூராட்சிகளில் நிதி நிலைமை, வருவாய், செலவுகள், தெரு விளக்குகள் பராமரிப்பு, பொதுச் சுகாதாரம், மக்கள் தொகை, மக்களின் வாழ்க்கைத் தரம், மேம்பாடு செய்ய வேண்டிய விஷயங்கள் போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் பொதுமக்களிடம் நேரடியாக தேவையான வசதிகள், நிவர்த்தி செய்யப்படாத குறைகள் போன்ற விபரங்களை கேடடறிந்தனர். பேரூராட்சிகளின் செயல்அலுவலர்கள் கூறுகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சில பேரூராட்சிகளை தேர்வு செய்து தன்னிறைவு பெற்ற பேரூராட்சிகளாகவும், அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் தன்னிறைவு பெற்றிருக்குமாறு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. குழுவின் அறிக்கை அடிப்படையில் அரசு ஒவ்வொரு பேரூராட்சிக்கும் நிதி ஒதுக்கீடுகள் செய்யும். தேனி மாவட்டத்தில் ஐந்து பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
Last Updated on Thursday, 25 March 2010 09:32
இறைச்சி கடைகளுக்கு விடுமுறை
Thursday, 25 March 2010 08:07
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினமலர் 25.03.2010 இறைச்சி கடைகளுக்கு விடுமுறை
கோவை: கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிக்கை:மகாவீர் ஜெயந்தி மார்ச் 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று, ஆடு, மாடு, கோழி வதை செய்வதையும், இறைச்சி விற் பனை செய்வதையும் அரசு தடை செய்துள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில், ஆடு, மாடு, கோழி,மீன், பன்றி போன்ற இறைச்சி கடைகளை மூட வேண்டும்.மாநகராட்சி நடத்தும், சிங்காநல்லூர், உக்கடம், சத்திரோடு அறுவை வதை மனைகள் செயல்படாது. விதி முறைகளை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.
Last Updated on Thursday, 25 March 2010 08:09
|
|
|
|
Page 453 of 506 |