Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மழைநீர் சேகரிப்பு மேளா

Print PDF

தினமணி 18.03.2010

மழைநீர் சேகரிப்பு மேளா

பெங்களூர், மார்ச் 17: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பெங்களூரில் மார்ச் 20-ம் தேதி, மழைநீர் சேகரிப்பு மேளாவை பெங்களூர் குடிநீர் வாரியமும், ஆர்கயம் அறக்கட்டளையும் இணைந்து நடத்துகின்றன.

இது குறித்து பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரிய முதன்மைப் பொறியாளர் கெம்பராமையா நிருபர்களிடம் புதன்கிழமை கூறியது:

மார்ச் 20-ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தண்ணீர் சிக்கனம் மற்றும் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கப்பன் பூங்காவில் மழைநீர் சேகரிப்பு மேளா நடத்தப்படுகிறது. குடிநீர் வாரியம், ஆர்கயம் அமைப்பு, பெங்களூர் ஜலமண்டலி அபியந்தரா சங்கம் மற்றும் கர்நாடக அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் ஆகியவை இணைந்து விழாவை நடத்துகின்றன.

Last Updated on Thursday, 18 March 2010 11:35
 

மின் மோட்டார் மூலம் குடிநீர் பிடித்தால் இணைப்பு துண்டிக்கப்படும்

Print PDF

தினமணி 18.03.2010

மின் மோட்டார் மூலம் குடிநீர் பிடித்தால் இணைப்பு துண்டிக்கப்படும்

சிவகாசி, மார்ச் 17: சிவகாசி நகராட்சிப் பகுதியில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் பிடித்தால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என, நகர்மன்றத் துணைத் தலைவகர் ஜி. அசோகன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து, அவர் புதன்கிழமை கூறியதாவது:

சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வெம்பக்கோட்டை அணைக்கட்டில் தற்போது 1.80 மீட்டர் தண்ணீரே உள்ளது. அதிலிருந்து தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.

மின்தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் தற்போது 4 நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பலர் குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் பிடிப்பதாகப் புகார்கள் எழுகின்றன.

குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். இதனைக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் இணைப்பு வழங்கப்படமாட்டாது என்றார் அவர்.

Last Updated on Thursday, 18 March 2010 11:23
 

கழிவுநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை: வியாபாரிகளிடம் ஆணையர் உறுதி

Print PDF

தினமலர் 18.03.2010

கழிவுநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை: வியாபாரிகளிடம் ஆணையர் உறுதி

புதுக்கோட்டை:17வது வார்டில் கழிவுநீர் பிரச்னையை உடனே தீர்க்க வேண்டும் என ஆணையரிடம் வியாபாரிகள் வலியுறுத்தி பேசியதால் புதுகையில் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையில் 17வது வார்டில் உள்ள தட்சிணாமூர்த்தி மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக கழிவு நீர்வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால் தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே அடைப்பு ஏற்பட்ட பகுதியில் இடத்தின் உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைக்காததால் புதிய சாலைகள் மற்றும் கழிவு நீர்வாய்க்கால்கள் அமைக்க முடியாத நிலை என நகராட்சி தரப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் ராம்கணேஷ், நகரமைப்பு அலுவலர் பிச்சாண்டி ஆகியோருடன் நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் 17வது வார்டுக்கு ஆய்வு செய்ய வந்தார். உடனே அப்பகுதி வியாபாரிகள் திரண்டனர்.

கழிவுநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அவரிடம் வலியுறுத்தி பேசினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கழிவுநீர் வாய்க்காலில் அடைப்புகள் உடனடியாக சரி செய்து தரப்படும், மீண்டும் இப்பிரச்னை எழாத வகையில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என நேற்று ஆணையர் பாலகிருஷ்ணன் உறுதியளித்ததன் பேரில் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

 

Last Updated on Thursday, 18 March 2010 06:59
 


Page 457 of 506