Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வாணியம்பாடி நகராட்சி அதிரடி திருமண மண்டபத்துக்கு சீல்

Print PDF

தினமலர் 02.03.2010

வாணியம்பாடி நகராட்சி அதிரடி திருமண மண்டபத்துக்கு சீல்

வாணியம்பாடி:வாணியம்பாடி நகராட்சி திருமண மண்டபம் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காததால் அதிகாரிகள் நேற்று போலீசார் உதவியுடன் திருமண மண்டபத்தை நகராட்சி வசம் கொண்டுவந்தனர்.

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகில் சி.என்.., சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனை கடந்த 2004ம் ஆண்டு நகராட்சி சார்பில் முறைப்படி குத்ததைக்கு விடுவதற்காக டெண்டர் வைக்கப்பட்டது. இதில் தில்ஷாத்பேகம் என்ற பெயரில் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த குத்தகை காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

நகராட்சி அலுவலகத்திற்கு தற்போது இடம் தேவைப்படுவதால் மீண்டும் டெண்டர் விடப்படவில்லை. குத்தகைதாரரும் காலி செய்யாமல் இளைஞர் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடத்த 6 நாட்களுக்கு வாடகைக்கு விட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஜினியர் இளஞ்செழியன் தலைமையில் மேலாளர் சுந்தரேசன், நகராட்சி ஆர்.., பழனி, துப்புரவு ஆய்வாளர் ராஜேந்தின் மற்றும் அலுவலர்கள் திருமண மண்டபத்தை நகராட்சி வசம் (சுவாதீனம்) எடுக்க வந்தனர். அப்போது அங்கு இளைஞர் காங்., கூட்டம் நடத்துவதற்காக வந்திருந்த முன்னாள் எம்.பி., ஜெயமோகன் மற்றும் கட்சி பிரமுகர்கள், நகராட்சி அதிகாரிகளிடம் வெங்கடேசன் என்ற பெயரில் 6 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருப்பதாக ரசீதை காண்பித்தனர். இதனையடுத்து, நகராட்சி வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டவுடன் ரசீது போட்டு வாடகைக்கு விடப்படும் என்று அதிகாரிகள் கூறினர். பின்னர், வருவாய் ஆய்வாளர் கிருபானந்தம், வி..., குணசீலன் ஆகியோர் முன்னிலையில் திருமண மண்டபத்தை நகராட்சி வசம் கொண்டு வந்தனர். மேலும் மண்டபத்தின் அலுவலக அறைக்கு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசி, ஏட்டு கோபி மற் றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Tuesday, 02 March 2010 07:06
 

திருவிழா கடை வியாபாரிகளிடம் மாமூல் : பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 02.03.2010

திருவிழா கடை வியாபாரிகளிடம் மாமூல் : பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை

மானாமதுரை: சித்திரை திருவிழா கடைகளில் மாமூல் கேட்டு, வியாபாரிகளை மிரட்டினால், நடவடிக்கை எடுக்கப்படும் என மானாமதுரை பேரூராட்சி தலைவர் ராஜாமணி எச்சரித்தார். பேரூராட்சி கூட்டம் அவர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் சஞ்சீவி முன்னிலை வகித்தனர்.

விவாதங்கள் வருமாறு:

அழகர்சாமி (தி.மு..,): சித்திரை திருவிழாவுக்காக, வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை விரைவில் தொடங்க வேண்டும். வியாபாரிகளிடம் அரசு ஊழியர்,போலீசார், ரவுடிகள் மாமூல் வசூலிக்கின்றனர். இதனால் ராட்டிணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். (இதை தவிர்க்க பேரூராட்சியே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் தெரிவித்தனர்.)

செயல் அலுவலர்: திரு விழாவுக்காக தனியாக வரிவிதிக்கப்படுவதில்லை.

தலைவர்: மக்களிடம் கூடுதல் கட்டணத்தை நாமே சுமத்தக்கூடாது. வியாபாரிகளை மிரட்டி வசூலித்தால், போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

சோமன் (தி.மு..,): புதிய கட்டடங்கள் விதிகளின்படி கட்டப்படுகின்றனவா? என அதிகாரிகள் கண்காணிப்பதில்லை.

துணை தலைவர்: பொது இடத்தையும் ஆக்கிரமித்து கட்டுகின்றனர்.

சந்திரசேகரன் (.தி.மு..,): கழிவுநீர் கால்வாயில் குப்பை தேங்குவதால் கொசு தொல்லை அதிகரித்துள் ளது. பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்.

செயல் அலுவலர்: பாதாள சாக்கடை அமைக்க 25 ஏக்கர் நிலம்; பேரூராட்சியின் பங்காக, மொத்த மதிப்பில் நான்கில் ஒரு பங்கு நிதி தேவைப்படும். உள்ளாட்சி துறை தான் முடிவு செய்ய வேண்டும்.

ஜெயப்பிரகாஷ் (தே.மு.தி..,): "பை பாஸ்' ரோட்டில் தெரு விளக்குகள் அடிக்கடி பழுதடைகின்றன. அவற்றை சரி செய்வதில்லை. ரயில்வே பாலத்தில் கைப்பிடி சுவர் இல்லாததால், விபத்து அபாயம் உள்ளது.

தலைவர்: இதுகுறித்து தேசியநெடுஞ்சாலை அலுவலகத்தில் பல முறை தெரிவித்து விட்டோம், நடவடிக்கை இல்லை.

துணை தலைவர்: பக்கவாட்டு சுவரை நாமே அமைக்கலாம்.

தலைவர்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் சமுதாய கூடம், மயான மேம்பாடு, பூங்கா போன்ற பணிகளுக்கு கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

கணேசன் (தி.மு..,): எங்கள் பகுதியில் மயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.

தலைவர்: மயானத்தை சீரமைக்க, அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தியுள்ளனர். ஏழு வார்டுகளை உள்ளடக்கிய ஆதனூர் மயானத்தை முதலில் சீரமைக்கலாம். தொடர்ந்து மற்றவை சீரமைக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Last Updated on Tuesday, 02 March 2010 07:05
 

கடையநல்லூர் பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணி

Print PDF

தினமணி 26.02.2010

கடையநல்லூர் பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணி

கடையநல்லூர், பிப். 25: கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் உள்ள கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுத்தம் செய்யும் பணிகளை நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

கடையநல்லூர் பகுதியில் பரவிய ஒரு வித காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பாப்பான் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை சீரமைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பாப்பான் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம் பார்வையிட்டார். அவருடன் நகர்மன்ற உறுப்பினர் ராமநாதன், சுகாதார ஆய்வாளர்கள் கைலாச சுந்தரம், பிச்சையா பாஸ்கர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்

Last Updated on Friday, 26 February 2010 09:28
 


Page 461 of 506