Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

புதை சாக்கடைத் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி 19.02.2010

புதை சாக்கடைத் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர், பிப். 18: பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிகாடு பேரூராட்சியில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதை சாக்கடைத் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து, ஜமாத்தார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களை ஆய்வு செய்தார்.

மேலும், அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, இந்தத் திட்டம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

இந்த ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியர் ச. பாலுசாமி, குன்னம் வட்டாட்சியர் க. தங்கராஜ், பேரூராட்சித் தலைவர் நூர்ஜகான், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கி. கண்ணதாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 19 February 2010 10:58
 

நகராட்சி, மாநகராட்சி சுகாதாரசெவிலியர்களுக்கு சீருடைப்படி உயர்வு

Print PDF

தினமலர் 19.02.2010

நகராட்சி, மாநகராட்சி சுகாதாரசெவிலியர்களுக்கு சீருடைப்படி உயர்வு

திருநெல்வேலி:நகராட்சி, மாநகராட்சி சுகாதார செவிலியர்களுக்கு சீருடை படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின கீழ் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் நகராட்சி மருத்துவ பணி விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டனர். மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் சீருடை படி பொருந்தும் என உத்தரவிடப்பட்டது.இந்த சீருடைப் படி மாநகராட்சி, நகராட்சி நிதியில் இருந்து வழங்கப்படுவதால் அரசுக்கு செலவினம் இல்லை. எனவே, மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் மகப்பேறு உதவியாளர், பல்நோக்கு சுகாதார பணியாளர்கள், .என்.எம் பணியாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு சீருடை படியாக 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்குனர் அரசை கேட்டு கொண்டுள்ளார்.இந்த செயல் குறிப்பை அரசு கவனமாக பரிசீலித்து இதனை ஏற்று நகராட்சி, மாநகராட்சிகளில் பொது சுகாதார துறையில் பணிபுரியும் மகப்பேறு உதவியாளர்கள், பல்நோக்கு சுகாதார பணியாளர்கள், .என்.எம் ஆகிய பணியாளர்களுக்கு சீருடைப் படியாக ஆண்டு ஒன்றுக்கு 500 ரூபாய் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு பாராட்டு:இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், அரசு செயலாளர் நிரஞ்சன் மார்டி மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று தமிழ்நாடு உள்ளாட்சி நகர சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவி விஜயலட்சுமி தெரிவித்தார்.

Last Updated on Friday, 19 February 2010 07:56
 

ரூ.2.25 கோடியில் குடிசை மேம்பாட்டு திட்டம் மத்திய நகர்ப்புற வளர்ச்சி பொறியாளர் ஆய்வு

Print PDF

தினமலர் 18.02.2010

ரூ.2.25 கோடியில் குடிசை மேம்பாட்டு திட்டம் மத்திய நகர்ப்புற வளர்ச்சி பொறியாளர் ஆய்வு

பள்ளிபாளையம்: ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் 2.25 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும், ஒருங்கிணைந்த வீடுகள் மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டப் பணிகளை மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி துறை தலைமை பொறியாளர் கேப்டன் சுப்ரதா முகோபாத்யாயா ஆய்வு செய்தார்.

பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் ஒருங்கிணைந்த வீடுகள் மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.79 கோடி ரூபாய் மதிப்பில் 149 வீடுகள் கட்டுதல், 46.59 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால், சாலை மற்றும் தெரு விளக்குகள் அமைத்தல் என மொத்தம் 2 கோடியே 25 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாதயத்துக்கு உட்பட்ட கிழக்கு தொட்டிபாளையம், காந்திநகர், வெங்கடேசபுரம், கரட்டாங்காடு, சின்னாக்கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மத்திய அரசின் நகர்புற வளர்ச்சித்துறை தலைமை பொறியாளர் கேப்டன் சுப்ரதா முகபாத்யாயே நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஒருங்கிணைந்த வீடுகள் மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருந்தன. மேலும், 56 வீடுகள் முடிக்கும் நிலையிலும், 87 வீடுகள் பாதி முடிந்தும் காணப்பட்டது. அபிவிருத்தி பணிகளான வடிகால், சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவுற்றும் இருந்தது. மத்திய அரசின் மானியத்துடன் நடக்கும் இத்திட்டம் ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் சிறப்பாக நடப்பது குறித்து நிர்வாகத்துக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

ஆய்வின் போது பஞ்சாயத்து சேர்மன் யுவராஜ், சேலம் மண்டல டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் ஞானசேகரன், மாவட்ட உதவி செயலாளர் புண்ணியமூர்த்தி, செயல் அலுவலர் கோவிந்தராஜூ, கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 18 February 2010 07:05
 


Page 462 of 506