Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாட்டுத்தாவணி பஸ் நிலைய வளாகத்தில் வாடகை நிலுவை செலுத்தாத 53 கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி 21.01.2010

மாட்டுத்தாவணி பஸ் நிலைய வளாகத்தில் வாடகை நிலுவை செலுத்தாத 53 கடைகளுக்கு சீல்

மதுரை, ஜன. 20: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள 53 கடைகள், வாடகை நிலுவைத் தொகை செலுத்தாத காரணத்தால் புதன்கிழமை மாநகராட்சி அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

மாவட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பஸ் நிலைய வளாகத்தில் மாநகராட்சி மூலம் மாதாந்திர வாடகை அடிப்படையில் 193 கடைகள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இக்கடைகளில் கடந்த 5 ஆண்டுகளாக ரூ.1 கோடி வரை நிலுவைத் தொகை பாக்கி இருந்து வருகிறது. ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் வாடகை பாக்கித் தொகை உள்ள 53 கடைகளில் உதவி ஆணையர்கள் ரா.பாஸ்கரன் (வருவாய்), ராஜாகாந்தி (வடக்கு) ஆகியோர் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, 53 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டு, மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டத்தில் ரூ.7.50 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

இச் சோதனையின்போது கட்டட ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், சுப்புராம், சந்தைக் கண்காணிப்பாளர் பழனிவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தி, கடைகள் பூட்டும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கடைக்காரர்களை மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Last Updated on Thursday, 21 January 2010 10:48
 

எடையளவு சரியில்லாத 40 கடைகள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை

Print PDF

தினமணி 21.01.2010

எடையளவு சரியில்லாத 40 கடைகள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை

மதுரை, ஜன. 20: மதுரை மாவட்டத்தில் எடையளவுகள் சரியில்லாத 40 கடைகள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுத்து மதுரை மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் தெரிவித்துள்ளது:

தொழிலாளர் துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், எடையளவுகளில் அரசு மறுமுத்திரை உரிய காலத்தில் இல்லாமலும், முத்திரையே இல்லாமலும் வைக்கப்பட்ட 40 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசு முத்திரை வைக்கத் தவறிய 70 எடையளவுகள் பமுதல் செய்யப்பட்டன.

நான்கு மின்னணு தராசுகள், 4 மேஜை தராசுகள், ஒரு வில் தராசு, 29 இரும்பு எடைக்கற்கள், 4 பித்தளை பொன் எடைக்கற்கள், 25 ஊற்றிய அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடைகள், வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருக்கும் மின்னணு தராசுகள், மேஜை தராசுகளை ஆண்டுக்கு ஒரு முறை முத்திரையிடவேண்டும், மற்றவற்றை 2 ஆண்டுக்கு ஒரு முறை முத்திரையிட வேண்டும்.

முத்திரையிட தல்லாகுளத்தில் இயங்கி வரும் முத்திரை ஆய்வாளர்கள் அலுவலகத்துக்கு தகுந்த ஆவணங்களை கொண்டுசென்று முத்திரையிடுமாறும், தவறும்பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

Last Updated on Thursday, 21 January 2010 10:45
 

மாநகராட்சி வடக்கு மண்டல கூட்டம்

Print PDF

தினகரன் 21.01.2010

மாநகராட்சி வடக்கு மண்டல கூட்டம்

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி 100க்கும் மேற்பட்ட கட்சி கிளைகளில் கொடியேற்றப்பட்டது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

கோவிலூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுக்கூட்டம் நடந்தது. மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் பேசினார். முன்னாள் சேர்மன் ராம்குமார், நகர செயலாளர் அழகுராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்

Last Updated on Thursday, 21 January 2010 10:32
 


Page 469 of 506