Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ரூ.156 லட்சம்! உள்ளாட்சிகள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை உடனடியாக கட்ட குடிநீர் வடிகால் வாரியம் அறிவுரை

Print PDF

தினமலர்             16.12.2013

ரூ.156 லட்சம்! உள்ளாட்சிகள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை உடனடியாக கட்ட குடிநீர் வடிகால் வாரியம் அறிவுரை

பொள்ளாச்சி:ஊராட்சி நிர்வாகங்கள், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.156 லட்சம் குடிநீர் கட்டண தொகையை செலுத்தாமல், நிலுவையில் வைத்துள்ளன. இத்தொகையை செலுத்த குடிநீர் வாரிய அதிகாரிகள் ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில், கோட்டூர் -வேட்டைக்காரன்புதூர் கூட்டுக்குடிநீர் திட்டம், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு, குடிமங்கலம் ஒன்றியங்களுக்குட்பட்ட 295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் என மூன்று குடிநீர் திட்டங்கள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்கள் மூலம், ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, வேட்டைக்காரன் புதூர், ஆனைமலை, ஒடையகுளம், கோட்டூர், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, சமத்தூர் உள்ளிட்ட பேரூராட்சிகளும்; கிணத்துக் கடவு தாலுகாவில் உள்ள ஒன்றியம், பேரூராட்சி, பெரிய நெகமம் பேரூராட்சி, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

புதூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தினசரி 65 லட்சம் லிட்டர் குடிநீரும், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தினசரி 65 லட்சம் லிட்டர் குடிநீரும், 295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தினசரி 250 லட்சம் லிட்டர் குடிநீரும் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொரு குடிநீர் திட்டத்திலும், குறிப்பிட்ட பகுதிகளில்,"நீரேற்று நிலையம்' அமைக்கப்பட்டு, கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீரை கிராமங்களில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு, ஊராட்சி நிர்வாகம், கிராம மக்களுக்கு வினியோகிக்கிறது.

தினசரி 23 மணிநேரம் செயல்படும் வகையில் இத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு, மூன்று ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

ஆண்டிற்கு ஆறு கோடி

குடிநீர் வடிகால் வாரியத்தில், கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கு மின்சார தேவை அவசியமானதாக உள்ளது. இதற்காக, மாதத்திற்கு ரூ.50 லட்சம் வீதம் ஆண்டிற்கு ஆறு கோடி ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது.

கூடுதல் செலவு

தற்போது மின்தடை ஏற்படுவதால், குடிநீர் முறையாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க, நீரேற்று நிலையங்களில்,"ஜெனரேட்டர்' உதவியுடன், மோட்டார்கள் இயக்கப்பட்டு, குடிநீர் தடையின்றி வழங்கப்படுகிறது.

இதற்காக கடந்த ஒரு ஆண்டு மட்டும், ஒன்றரை கோடி ரூபாய் செலவாகியுள்ளது. மின்தேவைக்காக மட்டும் ஆண்டிற்கு, 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.

நிலுவைத்தொகை


குடிநீர் திட்டங்கள் முறையாக குடிநீர் வினியோகிக்க, மின்சாரத்திற்கு மட்டும் 7.50 கோடி ரூபாய் செலவாகிறது.

இவ்வாறு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு முறையாக உள்ளாட்சி நிர்வாகங்கள், அரசு அலுவலகங்களும் கட்டணம் செலுத்துவதில்லை. இதனால், நிலுவையில், பல லட்சம் ரூபாய் கட்டணம் உள்ளது.

மூன்று கூட்டுக்குடிநீர் திட்டத்தில், 130 கிராமங்கள், 8 பேரூராட்சிகள், 11 தனியார் இணைப்புகள் (பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்டவை) என மொத்தம் 149 பயனாளிகள், 41லட்சமும்; ஆச்சிப்பட்டி, ராசி செட்டிபாளையம் இரண்டு ஊராட்சிகளும், மாக்கினாம்பட்டி பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதிக்கு வழங்கப்படும் குடிநீருக்கு கட்டணமாக செலுத்த வேண்டிய 115 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. மொத்தம் 156 லட்சம் ரூபாய் உள்ளாட்சி நிர்வாகங்கள் செலுத்த வேண்டும்.

குடிநீர் திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டுமென்றால், உள்ளாட்சி நிர்வாகங்கள் முறையாக குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்பு கோட்டம் உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில்,"குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தாததால், 156 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ளது. இதனை முறையாக செலுத்தினால், குடிநீர் திட்டத்தில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க முடியும். எனவே, நிலுவையில் உள்ள தொகையை உடனே செலுத்த முன்வரவேண்டும்,'' என்றார்.

 

மக்களை கவர மாநகராட்சி தெருத்தெருவாக சென்று குறைகளை கண்டறிய உத்தரவு

Print PDF

தினமலர்             16.12.2013

மக்களை கவர மாநகராட்சி தெருத்தெருவாக சென்று குறைகளை கண்டறிய உத்தரவு

சென்னை: சென்னையில் அனைத்துமண்டலங்களிலும், வட்டார துணை கமிஷனர்கள் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், தெருத்தெருவாக சென்று, அந்த பகுதியில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகளை கண்டறிந்து பட்டியலிடவும், சிறுசிறு குறைகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் எனவும், மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், 15மண்டலங்கள் உள்ளன. அவை, வடக்கு, தெற்கு, மத்தியம் என, மூன்று நிர்வாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நிர்வாக மண்டலத்திற்கும் பொறுப்பாக, துணை கமிஷனர் நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நேரில் சென்று...

அவர்கள் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைத்து, சென்னையில் ஒவ்வொரு தெருவிலும் என்னென்ன குறைகள் உள்ளன; மக்களுக்கான அடிப்படை தேவைகள் என்ன என்று, கண்டறிய மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.அதன்படி, வார்டு வார்டாக, அனைத்?து தெருக்களுக்கும் அந்த அதிகாரிகள் குழு நேரில் சென்று, சாலைகளின் தரம், தெருவிளக்கு, நடைபாதைகளின் நிலை, மழைநீர் வடிகால்வாய், குடிநீர், கழிவுநீர் பிரச்னை, குப்பை சேகரிப்பு கூடங்களின் நிலை, அந்த தெருவில் உள்ள மாநகராட்சி கட்டடங்களின் நிலை, அங்கு கிடைக்கும் சேவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்யும்.

சிறப்பு திட்டங்கள்

அதில் காணப்படும் குறைபாடுகள் பட்டியலாக தயாரிக்கப்படும் இவ்வாறு, தெரு வாரியாக குறைபாடுகளை பட்டியலிட்டு, அவற்றில் காணப்படும் சிறுசிறு குறைகளை உடனுக்குடன் பணியாளர்களை கொண்டு சரிசெய்யவும், மற்றபடி மக்களின் தேவைகளை, முறையான ஒப்பந்தம் மூலம் செய்து தரவும் வட்டார துணை கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வரும் மார்ச் மாதம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இது குறித்து மேயர், கமிஷனர் தலைமையில் ஆய்வுகூட்டங்கள் நடத்தப்பட்டு ள்ளன.அறிவிப்புகளை தவிர, மக்களின் தேவைகளை களத்திற்கு சென்று அறிந்தால் தான், சில பணிகளை மேற்கொள்ள, பட்ஜெட்டில் நிதி ஒதுக்க முடியும். இதற்காகவே துணைகமிஷனர்கள் தலைமையில் தெருத்தெருவாக சென்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

'கவுன்சிலர்களால் முடியாது'

நாளொன்றுக்கு எத்தனை தெருக்கள் அதிகமாக ஆய்வு செய்ய முடியுமோ செய்து, மூன்று மாதங்களில் இப்பணியை நிறைவேற்ற ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.வழக்கமாக, இந்த பணிகளை, கவுன்சிலர்களை கொண்டு தான் செய்ய வேண்டும். கவுன்சிலர்கள் முழு ஈடுபாட்டுடன் செய்வதில்லை என்பதால், அதிகாரிகள் குழு களம் இறங்க உள்ளது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.தெருத்தெருவாக சென்று மக்கள் குறைகளை கண்டறியும் பணி, மார்ச் மாத பட்ஜெட்டை கருத்தில் கொண்டு தான் என, மாநகராட்சி தரப்பில் கூறப் பட்டாலும், லோக்சபா தேர்தல் நெருங்குவதால், மக்களை கவர மாநகராட்சி இந்த வியூகத்தை வகுத்துள்ளதாகவே தெரிகிறது.

 

ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணிகள் கோட்ட மேலாளர் ஆய்வு

Print PDF

தினத்தந்தி            14.12.2013

ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணிகள் கோட்ட மேலாளர் ஆய்வு

திருப்பூர் ரெயில் நிலை யத்தில் சுமார் ரூ.2 கோடியில் நடந்து வரும் மேம்பாட்டு பணி களை கோட்ட மேலா ளர் நேற்று ஆய்வு மேற் கொண்டார்.

கோட்ட மேலாளர் ஆய்வு

டாலர் சிட்டியான திருப் பூரில் ரெயில் போக்குவரத்து முக்கிய இடம் பிடித்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் பனியன் வர்த்தகம் தொடர் பாக வருபவர்கள் ரெயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதிகப்படியான மக்கள் பயன்பாட்டில் உள்ள திருப் பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மேம்பாட்டு பணிகளை மேற் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரா மரிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணி களை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுஜாதா ஜெயராஜ் நேற்று காலை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூ.2 கோடியில் பணிகள்

ரெயில் நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தின் நுழைவு வாயில் புதிதாக அமைப்பு, முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கான ஓய்வறை கட்டுதல், பிளாட்பாரங்கள் விரிவாக்கம், பயணிகளுக்கு தேவையான கழிப்பறை, குடி நீர் வசதி, சுற்றுச்சுவர் கட்டு தல், ரெயில் நிலையத்தின் முன்புறம் உள்ள பகுதிகள் புணரமைப்பு, பார்சல் பகு தியை புதிதாக வடிவமைத்தல் போன்ற பணிகள் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் நடந்து வரு கிறது.

இந்த பணிகளை கோட்ட மேலாளர் சுஜாதா ஜெயராஜ் ஆய்வு செய்தார். இந்த ஆய் வின் போது கோட்ட பொறி யாளர்கள், துணை மேலாளர் கள், திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

 


Page 48 of 506