Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

துப்புரவுப் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை

Print PDF

தினமணி 05.01.2010

துப்புரவுப் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை

கிருஷ்ணகிரி,ஜன. 4: கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தாட்கோ மூலம் தூய்மை பணிபுரிவோர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஒரு வார கால சிறப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் நடந்த இம்முகாமில், 40 துப்புரவுப் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை நகர்மன்றத் தலைவர் பி.பரிதா நவாப் வழங்கினார். மீதம் உள்ள 94 பணியாளர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நகராட்சி ஆணையர் சி.வி.பௌலோஸ், தாட்கோ மேலாளர் மீனாட்சிசுந்தரம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம், நகர்மன்ற உறுப்பினர்கள் கடலரசு மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 05 January 2010 10:26
 

மாநகராட்சி வளர்ச்சி பணி : உள்ளாட்சி செயலர் ஆய்வு

Print PDF

தினமலர் 05.01.2010

மாநகராட்சி வளர்ச்சி பணி : உள்ளாட்சி செயலர் ஆய்வு

கோவை : கோவை மாநகராட்சி வளர்ச்சி பணிகளை, தமிழக உள்ளாட்சித்துறை செயலர் நிரஞ்சன் மார்டி நேற்று ஆய்வு செய்தார்.கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ் டெப்போ எதிரில், ஏழு கோடி ரூபாய் செலவில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி நடக்கிறது; 65 சதவீத பணிகள் முடிந்துள்ளன. தரை தளத்தில் பஸ் நிறுத்துமிடத்தை ஒட்டி கடைகள் மற்றும் அறைகள் கட்டும் பணி நடக்கிறது. பஸ் ஸ்டாண்ட் மேல்தளத்தில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

கோவையில் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்குள், பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடிக்குமாறு, கான்ட்ராக்டரிடம், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை, தமிழக உள்ளாட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துறை செயலர் நிரஞ்சன்மார்டி, தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். வரும் மார்ச் 31க்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டனர். ஆய்வின் போது, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், மாநகர பொறியாளர் கருணாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதை தொடர்ந்து, பீளமேட்டில் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள குப்பை மாற்று நிலையம், உக்கடம் புல்லுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற ஏழை மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், உக்கடம் கழிவு நீர்பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் கட்டுமானப்பணிகளையும் நிரஞ்சன்மார்டி நேரில் ஆய்வு செய்தார.

Last Updated on Tuesday, 05 January 2010 07:12
 

ரிங் ரோடு டோல் கேட்: மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு

Print PDF

தினமலர் 29.12.2009

ரிங் ரோடு டோல் கேட்: மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு

மதுரை: மதுரை ரிங் ரோடு டோல் கேட்டுகளில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரை அடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ரிங் ரோட்டில் உள்ள டோல் கேட்டுகள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. முன்னாள் ராணுவ நலச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள், இங்கு வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டோல் கேட்டுகளில் சில வாகனங்களிடம் குறைவான பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது தராமல் வாகனங்களை அனுமதித்துள்ளனர். இதனால் ஒவ்வொரு நாளும் மாநகராட்சிக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் தள்ளாடும் மாநகராட்சிக்கு, இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து வந்த புகார்களை அடுத்து சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்து, டோல் கேட்டுகளில் பணிபுரிந்தோரிடம் இருந்து கணக்கில் வராத 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், டோல் கேட்டுகளில் நேரடி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். துணை கமிஷனர் சிவராசு, உதவி கமிஷனர் ஆர்.பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள், டோல்கேட்டுகளில் திடீர் சோதனையில் ஈடுபடுகின்றன. நேற்று முன் தினம் இக்குழுவினர் சோதனை நடத்தியபோது, ரிங் ரோடு வழியாக வந்த லாரிகளை நிறுத்தி, கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

அதற்கு லாரி டிரைவர்கள், "நாங்கள் எப்போதும் 10 ரூபாய் தானே கொடுப்போம். இப்போது மட்டும் அதிகமாக கேட்கிறீர்களே...' என தகராறு செய்துள்ளனர். இதைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பிறகு லாரி டிரைவர்களுக்கு உண்மை நிலையை அறிவுறுத்தி, அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மோசடி நடக்காமல் இருக்க, அதிகாரிகள் அவ்வப்போது திடீர் சோதனை செய்கின்றனர்.

Last Updated on Tuesday, 29 December 2009 09:34
 


Page 473 of 506