Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

யாரால முடியும்? பார்க்கிங், கழிப்பிட கட்டண முறைகேடை தடுக்க மாநகராட்சியில் அதிரடி வசூல்

Print PDF

தினமலர் 29.12.2009

யாரால முடியும்? பார்க்கிங், கழிப்பிட கட்டண முறைகேடை தடுக்க மாநகராட்சியில் அதிரடி வசூல்


கோவை : கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான "பார்க்கிங்' மற்றும் கட்டணக் கழிப்பிடங்களில் கட்டண முறைகேடு மீண்டும் தலை தூக்கியுள்ளது. கோவை மாநகராட்சிக்கு, நகரில் பல்வேறு இடங்களில், கட்டணக்கழிப்பிடம், வாகன நிறுத்துமிடங்கள் (பார்க்கிங்) உள்ளன. இவற்றை கான்ட்ராக்ட் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க விடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை விட, கான்ட்ராக்டர்கள், இரு மடங்கு கட்டணம் வசூலிப்பது வாடிக் கையாக உள்ளது.சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவே, இந்த முறைகேட்டை நேரடியாகப் பிடித்து, சம்மந்தப் பட்ட ஒப்பந்ததாரரின் ஏலத்தை ரத்து செய்ய பரிந்துரைத்தும், மாநகராட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் அதே ஒப்பந்ததாரர் நீடித்த சம்பவமும் நடந் துள்ளது.

கட்டணக் கழிப்பிடத்தை விட, வாகன நிறுத்துமிடங்களில் நடக்கும் முறைகேடு அதிகம். ஒரு நாளுக்கு (24 மணி நேரம்) டூ வீலருக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும்.ஆனால்,இரு மடங்காக கட்டணம் வசூலிக்கின்றனர். ஐந்து ரூபாய் மதிப்புள்ள டோக்கன் கொடுத்தாலும், ஒரு நாளுக்கு இரண்டு டோக்கன் கொடுத்து, 24 மணி நேரத்துக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.

சென்ற ஆண்டு, இதே புகார் வந்த போது, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார். பலரது ஒப்பந் தங்களை ரத்து செய்தார். பல இடங்களில் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக சில ஊழியர்களை நியமித்து கட்டணக் கழிப்பிடம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை நடத்தியது.சில வாரங்களுக்கு முன், ஒரு சில இனங்களுக்கு ஏலம் விடப் பட்டு, மார்ச் இறுதி வரைக்கும் குத்தகைக்கு தரப் பட்டது. இவற்றை ஏலத்தில் சிலர் , சில நாட்களிலேயே இரட்டிப்பு கட்டணம் வசூலிக்க துவங்கினர்.காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள "பார்க்கிங்'கில், இந்த முறைகேடு பகிரங்கமாக நடக்கிறது. இரவு 10.00 மணிக்கு டூ வீலரை நிறுத்தி விட்டு, காலை 5.00 மணிக்கு வந்து எடுத்தாலும் இரண்டு நாள் கட்டணம் தர வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றனர்.

தர மறுப்பவர்களை கை நீட்டி அடிக்கவும் தயங்குவதில்லை. பலர் கவுரவம் கருதி, கேட்டதை கொடுக்கின்றனர். இங்கு கட்டண விபரம் குறித்து மாநகராட்சி வைத் துள்ள பலகையும் மறைக்கப் பட்டுள்ளது.தரப்படும் டோக்கனில் ஒப் பந்ததாரரின் பெயரும் இல்லை. பெயர் இல்லாத டோக்கன் விநியோகிக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதிக்கிறது.கடந்த 23ம் தேதியன்று இங்கு டூ வீலரை நிறுத்தி விட்டு, சுற்றுலா சென்று வந்த ஒருவர், நேற்று வந்து தனது வாகனத்தை எடுத்தபோது, நாளுக்கு 10 ரூபாய் வீதம் கணக்கிட்டு, 55 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளனர். இதுபற்றி மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி தெற்கு மண் டல உதவி கமிஷனர் லட்சுமணன் உத்தரவின்பேரில், நிர் வாக அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் அங்கு சென்று நேரில் விசாரித்தனர். அப்போது அதிக கட்டணம் கேட்டது தெரியவந்தது. உடனடியாக ஒப்பந்ததாரரை எச்சரித்து விட்டுத் திரும்பியுள்ளனர்.மாநகராட்சி சார்பில் அங்கு கட்டண விபரம் குறித்த அறிவிப்புப் பலகையை பெரிதாக வைக்க நடவடிக்கை எடுப்பதாக உதவி கமிஷனர் குறிப்பிட்டார். இதே போல, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பார்க்கிங் மற்றும் அனைத்து கட்டணக் கழிப்பிடங்களிலும் கட்டண முறைகேடு நடந்து வருகிறது.கோவை நகரின் மீது அக்கறை கொண்டு, தமிழக அரசு பல வித மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இத்தகைய முறைகேடுகளால் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கடமையாகும்.

Last Updated on Tuesday, 29 December 2009 09:30
 

திட்ட பணிகளை விரைவாக முடியுங்கள்: கலெக்டர் உத்தரவு

Print PDF

தினமலர் 24.12.2009

திட்ட பணிகளை விரைவாக முடியுங்கள்: கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம் : மாவட்டத்தில் திட்டப் பணிகளை காலதாமதமின்றி விரைவாக முடிக் கும்படி அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.காஞ்சிபுரம் மாவட்ட திட்டக் குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. மாவட்ட ஊராட்சித் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒன்றிய குழுத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து துறைகள் சார்பில் நடைபெறும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.கலெக்டர் பேசுகையில், தற்போது நடைபெறும் பணிகள், நடைபெற உள்ள பணிகள் அனைத் தையும் காலதாமதமின்றி உடனடியாக முடிக்க வேண்டும். பணிகள் குறித்த விபரங்களை சம் பந்தப்பட்ட உள்ளாட்சி தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏரி தூர் வாருதல், ஏரி மதகு சரி செய்தல், சாலைப் பணிகள், கால்வாய் சீரமைப்புப் பணிகள், வடிகால் அமைத் தல், ஊனமுற்றோர் உதவித் தொகை வழங்குதல், நகைக்கடன், பயிர் கடன் போன்றப் பணிகளை விரைவாக முடிக்க வேண் டும், என்றார்.

Last Updated on Thursday, 24 December 2009 09:52
 

குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

Print PDF

தினமலர் 23.12.2009

குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சொத்து வரி, குடிநீர் கட்டண வசூலிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் கட்டண நிலுவைக்காக இரண்டு குடிநீர் இணைப்புகளை நேற்று துண்டித்தது.திருப்பூர் மாநகராட்சிக்கு சொத்து வரி வசூல் மூலம் ஆண்டுக்கு 21 கோடி ரூபாய்; குடிநீர் கட்டணம் மூலம் நான்கு கோடி ரூபாய் கிடைக்கிறது. இந்தாண்டு, 50 சதவீதத்துக்கும் குறைவாகவே இதுவரை வரி வசூலாகி உள்ளது. இம்மாத இறுதிக் குள், வரி வசூலில் குறிப்பிட்ட இலக்கை எட்டுவதற்கு, மாநகராட்சி தீவிர நட வடிக்கை எடுத்து வருகிறது. அரசு விடு முறை தினமான சனிக்கிழமையன்றும், வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.சொத்து வரி நிலுவை வைத்திருந்தால், ஜப்தி நடவடிக்கையும், குடிநீர் கட்டண நிலுவை வைத்திருந்தால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநக ராட்சி எச்சரித்துள்ளது. அதுபற்றி ஆட்டோ மூலம் பல்வேறு பகுதிகளில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குடி நீர் கட்டண நிலுவை வைத்திருந்த கார ணத்துக்காக, நேற்று இரண்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

எம்.ஜி., புதூர் வீதி அருகே குப்பணஞ் செட்டியார் வீதியில் மண்டபம் ஒன்றின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதே போல், தென்னம்பாளையம் பகுதியில் முத்து சாமி என்பவர் வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, குடிநீர் கட்டணம் செலுத் தாமல் இருந்த தற்காக, இவ்விரண்டு குடி நீர் இணைப்பு கள் துண்டிக்கப்பட்டுள்ள தாக தெரிகிறது. குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை யில் மாநகராட்சி அதிரடியாக இறங்கி யுள்ளதால், குடிநீர் கட்டணம், சொத்து வரி நிலுவை உள்ளவர்கள், மாநகராட்சிக்கு வரியை செலுத்தி வருகின்றனர்.

 


Page 474 of 506