Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பல்லடத்தில் 1200 டயர்கள் அழிப்பு

Print PDF

தினகரன்           12.12.2013

பல்லடத்தில் 1200 டயர்கள் அழிப்பு

பல்லடம், : திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சல் முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட துணை இயக்குனர் ரகுபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் நாராயணன் முன்னிலையில் வட்டார மேற்பார்வையாளர் சண்முகநாதன், துப்பு ரவுஆய்வாளர் சரவணன், சுகாதாரஆய்வாளர்கள் முத்துபையன், தமிழ்ச்செல்வி, ரகுநாதன், ஜெயராமன். துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பனப்பாளையம், நால்ரோடு, அண்ணாசிலை, செட்டிபாளையம்ரோடு உள்ளிட்ட பகுதியில் அதிரடியாக சோதனை செய்து சுமார் 1200க்கும் மேற்பட்ட டயர்களை அழித்தனர்.

 

ரூ1.50 கோடி மதிப்பில் ஆனந்தா பாலத்தில் இணைப்பு சாலை மேயர், ஆணையாளர் நேரில் ஆய்வு

Print PDF

தினகரன்           12.12.2013

ரூ1.50 கோடி மதிப்பில் ஆனந்தா பாலத்தில் இணைப்பு சாலை மேயர், ஆணையாளர் நேரில் ஆய்வு

சேலம், : சேலம் மாநகராட்சி ஆனந்தா மேம்பாலத்தில் ரூ1.50 கோடியில் இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை மேயர், ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சேலம் மாநகரின் மையப்பகுதியான ஆனந்தா மேம்பாலத்தை அகலப்படுத்தி, இணைப்பு சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான திட்டப்பணிகள் சில வருடங்களுக்கு முன்பு துவங்கியது. இதற்காக தனியாரிடமிருந்து ரூ2.90 கோடி மதிப்பிலான 10ஆயிரத்து 364 சதுரடி நிலத்தை மாநகராட்சி கிரயம் செய்தது. இதையடுத்து தற்போது பணிகள் நிறைவு பெற்று தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதனை சேலம் மாநகர மேயர் சவுண்டப்பன், மாநகராட்சி ஆணையாளர் அசோகன், துணைமேயர் நடேசன் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மண்டலக்குழு தலைவர்கள் ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், சித்ரா, செயற்பொறியாளர் காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆனந்தா பாலத்தில் ரூ1.50 கோடியில் இணைப்பு சாலை அமைத்து தார்போட்டு, தெருவிளக்குகள் அமைக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் பணிகள் நிறைவு பெற்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த சாலை அர்ப்பணிக்கப்படும். நெரிசலை கருத்தில் கொண்டு இதனை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தலாமா? என்பது குறித்து போக்குவரத்து போலீசாரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.

 

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை 50 கிலோ இறைச்சி பறிமுதல்

Print PDF

தினகரன்             11.12.2013

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை 50 கிலோ இறைச்சி பறிமுதல்

கோவை, :கோவை  மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாலை யோரம் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றன. சாலை யோரம் 3 கம்புகளை நட்டி அதில் ஆடு, கோழி இறைச்சிகளை தொங்க விட்டு விற்பனை செய்கின்றனர். 

சுகாதாரமற்ற முறை யில் இறைச்சி விற்பனை செய்வதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. மாநகராட்சி அனுமதி பெறா மல் இறை ச்சி விற்ப னை செய்தால் அவற்றினை பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை செய்தும், அதனை பொருட்படுத்தாமல் பிராதன சாலை களின் ஓரத்தில் திறந்த வெளியில் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதை தொடர்ந்து மாநகராட்சி கால்நடை மருத்துவரும், மிருகசாலை இயக்குநருமான டாக்டர் அசோகன் தலைமையில் மேற்பார்வையாளர் ஸ்ரீராம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 5 பேர் நேற்று  கவுண்டம்பாளையம் முதல் துடியலூர் வரை சாலையோரங்களில் திறந்த வெளி யில் இறைச்சி விற்பனை செய்த கடை களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 10 இறைச்சி கடைக ளில் நடைபெற்ற இச்சோதனையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். கடைகளுக்கு ரூ.17,000 அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என மாநகராட்சி கால்நடை மருத்துவர் அசோகன் தெரிவித்தார்.

 


Page 50 of 506