தினமணி 18.09.2009
வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு நகராட்சிப் பணியாளர்கள் அஞ்சலி
ஆம்பூர், செப். 17: ஆம்பூரில் கானாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு தமிழ்நாடு நகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அஞ்சலி கூட்டம் ஆம்பூர் நகராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை நடந்தது.
கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.குமரிமன்னன் தலைமையில், நகராட்சி ஆணையர் த.உதயராணி, கிளை நிர்வாகிகள் ராஜேந்திரன், துரைசாமி, எஸ். மதன், ஜி. ஆனந்தன், பிரேம் ஆனந்தன் உள்ளிட்டோர் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை நகராட்சிப் பணியாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்வது,இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இயன்ற உதவி செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.