Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாவட்ட கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 14 பதவிகளுக்கு அக்.7-ல் தேர்தல்

Print PDF

தினமணி 16.09.2009

மாவட்ட கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 14 பதவிகளுக்கு அக்.7-ல் தேர்தல்

நாமக்கல், செப். 15: நாமக்கல் மாவட்டத்தில் காலியாகவுள்ள மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 14 பதவிகளுக்கு அக்.7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனுத் தாக்கல் புதன்கிழமை துவங்குகிறது.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் 10-வது வார்டு (பொது), கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சி மன்றத் தலைவர், திருச்செங்கோடு நகராட்சி கவுன்சிலர் 26-வது வார்டு (பொது) ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இவை தவிர லத்துவாடி ஊராட்சி வார்டு 2, புன்செய் புதுப்பாளையம் வார்டு 1, பைல்நாடு வார்டு 2, சிங்கிலிப்பட்டி வார்டு 4, மரூர்பட்டி, வார்டு 1, நாவல்பட்டி வார்டு 1, வாழவந்தி கோம்பை வார்டு 1, சீராப்பள்ளி வார்டு 1, கூடச்சேரி வார்டு 1, பல்லக்காபாளையம் வார்டு 3, புதுபுளியம்பட்டி வார்டு 1 ஆகிய ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை (செப்.16) துவங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட ஊராட்சி கவன்சிலருக்கான வேட்பு மனுவை மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலும், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் தாக்கல் செய்யலாம். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான மனுவை அந்தந்த ஒன்றியங்களில் தாக்கல் செய்ய வேண்டும்.

ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான வேட்புமனுவை அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தாக்கல் செய்ய வேண்டும். செப்.24-ல் வேட்பு மனுக்கள் குறித்து பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 26-ம் தேதி கடைசி நாள். அக்.7-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என ஆட்சியர் சகாயம் தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 16 September 2009 11:00
 

கோவை மாநகரில் சாக்கடையில் குப்பை போட்டவர்களுக்கு அபராதம்

Print PDF

தினமலர் 16.09.2009

 

மாட்டுத்தாவணி பஸ்நிலைய வளாகத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தத் தடை

Print PDF

தினமணி 15.09.2009

மாட்டுத்தாவணி பஸ்நிலைய வளாகத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தத் தடை .

மதுரை, செப். 14: மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலைய வளாகப் பகுதிக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்த, மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பஸ் நிற்கும் பகுதிகள், பிளாட்பார ஓரம், பஸ் நிலையத்துக்குள் உள்ள கடைகள் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள் நிறுத்தப்படுகின்றன.

இவை 3 அல்லது 4 நாள்கள் கூட நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், பஸ் நிலையப் பகுதியில் அனுமதி இல்லாத இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த, மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திங்கள்கிழமை மாட்டுத்தாவணி பஸ் நிலைய வளாகப் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு சில பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

முதல்நாள் சோதனை என்பதால் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்களை, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.

செவ்வாய்க்கிழமை முதல், பஸ் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Last Updated on Wednesday, 16 September 2009 11:24
 


Page 492 of 506