Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வேலூர் பகுதிகளில் மாநகராட்சி மேயர், கமிஷனர் திடீர் ஆய்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

Print PDF

தினத்தந்தி              11.12.2013

வேலூர் பகுதிகளில் மாநகராட்சி மேயர், கமிஷனர் திடீர் ஆய்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேயர் திடீர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி பகுதியான 16 மற்றும் 30–வது வார்டுகளில் கால்வாய் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, சாலை வசதி போன்றவை குறித்து பொதுமக்கள் மற்றும் அந்த பகுதி கவுன்சிலர்கள் மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி ஆகியோருக்கு புகார்கள் கொடுத்தனர்.

அதன்படி நேற்று மாலை மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி ஆகியோர் நேற்று திடீரென அந்த பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது துணைமேயர் வி.டி.தருமலிங்கம், நகரமைப்பு அலுவலர் கண்ணன், நகர்நல அலுவலர் வசந்த்திவாகர், கட்டிட ஆய்வாளர் மதிவாணன், கவுன்சிலர்கள் தாமோதரன், அன்வர்பாஷா உள்பட மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

16–வது வார்டான காகிதப்பட்டரை ஆற்காடு சாலை, நைனியப்பன் நாய்க்கர் தெரு, கானாறு, சைதாப்பேட்டை கன்னாரத்தெரு ஆகிய பகுதிகளில் மேயர், கமிஷனர் பார்வையிட்டனர். மேலும் காகிதப்பட்டறையில் மலையில் இருந்து வரும் மழைநீர்வடிகால் கால்வாய் ஆகியவற்றை பார்வையிட்டனர். அந்த பகுதிகளில் கால்வாய் வசதி இல்லாமல் உள்ளதாகவும் அதனை சீரமைக்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்புகள்

அதைத்தொடர்ந்து 30–வது வார்டு பழைய முன்சீப் கோர்ட்டு தெரு, கானாறு, பி.டி.சி.ரோடு, சின்ன மராட்டா தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கால்வாய் கட்டும் பணியையும், சின்னமராட்டா தெருவில் ரூ.35 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் சமுதாய கூடம் கட்டப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து கால்வாய்களை தூர்வாரவும், பி.டி.சி. ரோட்டில் சாலையில் ஆக்கிரமித்து மரப்பலகைகள், கதவுகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் மேயர் கார்த்தியாயினி உத்தரவிட்டார்.

குடிநீர் பிரச்சினை

ஆய்வின்போது மேயர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு மேயர் கூறுகையில், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டு குடிநீர் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 9–ந் தேதி வெள்ளோட்டம் பார்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.

Last Updated on Thursday, 12 December 2013 11:39
 

ஓமலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட், சட்டை அணிய அனுமதி

Print PDF

தினகரன்              10.12.2013

ஓமலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட், சட்டை அணிய அனுமதி

ஓமலூர், : நவநாகரீக காலத்திலும் அரைக்கால் சட்டை (டிராயர்) அணிந்து கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டி தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியால் துப்புரவு பணியாளர்களுக்கு புதிய பேண்ட், சர்ட் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில் ஓமலூர், கருப்பூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய நான்கு பேரூராட்சிகள், மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 120 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் காலம் காலமாக அரைக்கால் சட்டையுடன் துப்புரவு பணிகளை செய்து வருகின்றனர். அரைக்கால் சட்டை அணிந்து பணியாற்றுவது இவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அனைத்து தரப்பு வயதினரும் ஈடுபட்டுள்ளதால், அரைக்கால் சட்டையுடன் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருவது சங்கடத்தை ஏற்படுத்தியது.

இவர்கள், மற்றவர்களை போல பேண்ட், சர்ட் அணிந்து பணியாற்ற விரும்பினர். இதுகுறித்த செய்தி, தினகரன் நாளிதழில் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியியானது. இதனை தொடர்ந்து இந்த நிலையை மாற்ற ஓமலூர் பேரூராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது. துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட், சர்ட் அணிந்து பணியாற்ற அனுமதி அளித்ததோடு, அதை வாங்கியும் கொடுத்துள்ளது. தற்போது ஓமலூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்ற பணியாளர்களை போல காக்கி கலர் பேண்ட், சர்ட் அணிந்து பணியாற்றி வருகின்றனர். 

 

கோமதிபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

Print PDF

தினகரன்              10.12.2013

கோமதிபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மதுரை, : கோமதிபுரம், யாகப்பா நகர் பகுதிகளில் சுகாதார பணிகளை மாநகராட்சி ஆணையர் கிரண் குராலா பார்வையிட்டார்.

மதுரை கோமதிபுரம் பாரதியார் நகர் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புகளுக்கு சிறிய குழாய்கள்  பதிக்கப்பட்டிருந்தன. இதனால் குழாய்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியது. இது குறித்து மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று ஆணையாளர் கிரண்குராலா அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார். பெரிய குழாய் பதித்து நிரந்தர தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்பு யாகப்பா நகரில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பார்வையிட்டு வீடுகளின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும், நீரில் அபேட் மருந்து ஊற்றும்படியும், கொசுவை ஒழிக்க மருந்து அடிக்கும்படி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வில் உதவி ஆணையாளர் தேவதாஸ், நகர் நல அலுவலர் யசோதாமணி, செயற்பொறியாளர் திருஞானம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 


Page 51 of 506