Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பேருந்து நிலைய மேம்பாட்டுப்பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி              10.12.2013

பேருந்து நிலைய மேம்பாட்டுப்பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 1.17 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளை நகர்மன்றத் தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

நகராட்சி நூற்றாண்டு விழாவுக்காக புதுக்கோட்டையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு ரூ. 50 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கியது.

இதையடுத்து பேருந்து நிலையத்தில் சேதமடைந்துள்ள சிமென்ட் தரைத்தளம், கட்டடங்களை சீரமைக்கும் பணிக்காக ரூ. 1.17 கோடி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டது.

பணிகளை துரிதமாக மேற்கொள்ள வசதியாக, இங்கு வந்து செல்லும் பேருந்துகள் அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரேயுள்ள தாற்காலிக பேருந்து  நிலையத்துக்கு அண்மையில் இட மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து காலியாக உள்ள பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணி தொடங்கியுள்ளது.

இப்பணிகளை, நகர்மன்றத் தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான், நகரமைப்பு அலுவலர் பெரியசாமி ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.

நகர்மன்ற உறுப்பினர்கள் கே. ராமதாஸ், பி. கண்ணன், தியாகராஜன், பி. கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

உடுமலை 14 -ஆவது வார்டில் நகராட்சித் தலைவர் ஆய்வு

Print PDF

தினமணி              10.12.2013

உடுமலை 14 -ஆவது வார்டில் நகராட்சித் தலைவர் ஆய்வு

உடுமலை நகராட்சி 14 ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

உடுமலை நகராட்சி, 14 வது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுக் குடிநீர் குழாய்களில் குடிநீர் சரிவர வருவதில்லை எனவும், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந் நிலையில் உடுமலை நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர், இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், குடிநீர் விநியோகம் சீரமைப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா பொதுமக்களிடம் உறுதி அளித்தார். ÷நகர்நல அலுவலர்(பொ) எம்.இளங்கோவன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஹக்கீம், ஆ.ஆதம்ஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

குடிநீர் கட்டணம் கட்டாததால் 25 வீடுகளில் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தமிழ் முரசு                09.12.2013

குடிநீர் கட்டணம் கட்டாததால் 25 வீடுகளில் இணைப்பு துண்டிப்பு

பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.  வீடுகளுக்கு 1001 குடிநீர் இணைப்புகள் உள்ளன. முறையாக குடிநீர் கட்டணம் செலுத்தாததால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு இரண்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இருப்பினும் சிலர் சரிவர குடிநீர் கட்டணம் கட்டவில்லை.

இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு பயன்படுத்தும் நபர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி கட்டணத்தை செலுத்துமாறு பேரூராட்சி நிர்வாகம் வற்புறுத்தியது.

ஆனாலும் 999 இணைப்பு தாரர்கள் பணம் கட்டவில்லை. இதனால் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் தேவதாஸ், துப்புரவு மேற்பார்வையாளர் மதியழகன், பேரூராட்சி ஊழியர்கள், பொன்னேரி போலீஸ் உதவியுடன் 1&வது வார்டுக்கு உட்பட்ட சின்னகாவனம் பகுதியில் 25 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் கட்டணம் கட்டாத நபர்கள் உடனடியாக கட்ட வேண்டும் அல்லது இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 


Page 52 of 506