Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பாதாளச் சாக்கடை ஒப்பந்தகாரர்களுக்கு நோட்டீஸ் முழுமை பெறாத முதல்வர் நிதி பணிகள்

Print PDF

தினமலர்         06.12.2013

பாதாளச் சாக்கடை ஒப்பந்தகாரர்களுக்கு நோட்டீஸ் முழுமை பெறாத முதல்வர் நிதி பணிகள்

மதுரை:மதுரை மாநகராட்சிக்கு முதல்வர் ஜெ., ஒதுக்கிய ரூ.250 கோடி நிதியில் தொடங்கிய எந்த பணியும், முழுமை பெறவில்லை. இந்நிலையில், பாதாளச் சாக்கடை ஒப்பந்தகாரர்களுக்கு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆட்சியில், ஜவகர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தில், மழைநீர் வடிகால் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. மத்திய அரசின் 50 சதவீதம், மாநில அரசின் 30 சதவீதம் நிதியுடன், மாநகராட்சியின் பங்களிப்புத் தொகையான, 20 சதவீதம்(ரூ.300 கோடி) நிதி செலுத்தாததால், அனைத்து பணிகளும் பாதியில் நின்றது.

ஆட்சி மாற்றத்திற்கு பின், ரூ.116 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். பின், முழு நிதியும் வழங்கப்பட்டுள்ளதாக, மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் அதிகாரிகள், பலமுறை தெரிவித்தனர்.

துவக்கம் முதலே, அனைத்து திட்ட பணிகளையும் ஒரே நேரத்தில் தொடங்கினர். கண்காணிப்பிற்கும், தரத்திற்கும் முரண்பாடாக அது தெரிந்தது. தவிர, அப்பணிகளை, வாரந்தோறும் பார்வையிட அமைக்கப்பட்ட, நகராட்சிகளின் நிர்வாக அலுவலக சென்னைக் குழு, ஒரு கட்டத்திற்கு மேல், மதுரைக்கு வரவில்லை.

பணிகளின் நிலை புதிராகவும், விடையில்லாமலும் தொடர்ந்தது. அதிகாரிகள் தரப்பிலும், பணிகளை பற்றி மூச்சுவிடவில்லை. வேறு வழியில், அத்தகவல்களை திரட்டிய போது, "முதல்வரின் சிறப்பு நிதியில் தொடங்கிய எந்த பணியும், நிறைவு பெறவில்லை,' என தெரியவந்துள்ளது.

பாதாளச் சாக்கடை பணிகள் படுமோசமாக நடந்து வருவதால், "அவற்றை விரைந்து முடிக்க, ஒப்பந்தகாரர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வர் ஒதுக்கிய நிதிக்கே, இந்த கதி என்றால், பிற நிதிகளில் நடக்கும்

முதல்வர் சிறப்பு நிதியில் நடந்து வரும் பணிகள் குறித்த நாம் கேட்ட கேள்விகளுக்கு, மாநகராட்சி அளித்துள்ள பதில்கள், "நடக்கிறது... முடிந்துவிடும்...' இவை, இரண்டு மட்டுமே. "முடிந்துவிட்டது' என்ற பதில், ஒரு இடத்தில் கூட வரவில்லை.

இதோ, மாநகராட்சி அளித்த பதில்கள்:

பாதாளச் சாக்கடைத் திட்டம் பகுதி 3ல் விடுபட்ட பகுதிகளில், பாதாளச் சாக்கடை அமைக்கவும், ஏற்கனவே உள்ள அமைப்பை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.

பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

மழைநீர் வடிகால் திட்டம் சிப்பம் 1, 5 ஆகியவை,"முடிந்து'விடும் தருவாயில் உள்ளது.

மழைநீர் வடிகால் திட்டம் 2, 3, 4, 6 ஆகியவை, நடந்து வருகிறது.

பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

மழைநீர் வடிகால் திட்டத்தின் ஒப்பந்தகாரர்களுக்கு, அனைத்து பணிகளையும் உரிய காலத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

வேலூர் மாநகராட்சியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளின் மீது நடவடிக்கை மேயர் தகவல்

Print PDF

தினத்தந்தி          06.12.2013

வேலூர் மாநகராட்சியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளின் மீது நடவடிக்கை மேயர் தகவல்

வேலூர் மாநகராட்சியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளின் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

அனுமதி

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் வீட்டுமனைகளை அமைத்து (ரியல் எஸ்டேட்) விற்பனை செய்பவர்கள் முன்னதாக மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும் என்கிற விதி உள்ளது. அனுமதி பெற்றால்தான் அந்த வீட்டுமனைகள் அமைந்துள்ள பகுதிக்கு சாலை வசதி, குடி நீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்பட பல்வேறு வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்து கொடுகப்படும். மேலும் அனுமதி சான்றிதழ் இல்லாமல் அந்த மனைகளில் வீடுகள் கட்ட வங்கிகளும் கடன் வழங்காது.

இந்த நிலையில் வேலூர் மாநகரத்தில் பல இடங்களில் மாநகராட்சியின் அனுமதியில்லால் மனைகளை விற்க இருப்பதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

அகற்றப்பட்டன


அதைத்தொடர்ந்து மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி ஆகியோர் உத்தரவின் பேரில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் நேற்று வேலூர் 1–வது மண்டலத்தில் அடங்கிய கழிஞ்சூர், திருவள்ளுவர் நகர், பழைய காட்பாடி, பர்னீர்ஸ்புரம் மற்றும் 2–வது மண்டலத்தில் அடங்கிய சத்துவாச்சாரி ஆகிய இடங்களுக்கு சென்றனர். அங்கு அவர்கள் மாநகராட்சி அனுமதி பெறாமல் வீட்டுமனைகள் இருந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அளவு கற்கள், போர்டுகள் போன்றவற்றை அகற்றினார்கள்.

அது பற்றி மேயர் கூறும்போது, வீட்டுமனை அமைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மாநகராட்சியிடம் அனுமதி பெறவேண்டும், அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வேண்டாம்

அதுபோல மாநகராட்சி அனுமதி பெறாத மனைகளை பொதுமக்கள் வாங்கி பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினார். அப்போது மண்டலக்குழுத் தலைவர்கள் ஏ.பி.எல். சுந்தரம், சுனில் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

டெங்கு ஒழிக்க டயர்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்         06.12.2013

டெங்கு ஒழிக்க டயர்கள் பறிமுதல்

அனுப்பர்பாளையம்,: சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, டெங்கு கொசு ஒழிப்பு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இதில் அவிநாசி பகுதியில் சாலையோரம் உள்ள இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன பஞ்சர் கடைகளின் முன்புறம் ரோட்டோரமாக சேமித்து வைத்திருக்கும் உபயோகமற்ற பழைய டயர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டன.

இதில் அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் இருந்து இரு சக்கர வாகன டயர்கள் 221, சைக்கிள் டயர்கள்132,  லாரி டயர்கள் 8 உள்பட 361 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவிநாசி வட்டார தலைமை மருத்துவர் ராமசாமி, சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாலர்கள ரமே ஷ்,செல்வ ராஜ்,பரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பாலதண்டபானி, சுகாதார மேஸ்திரி ரவி மற்றும் பேரூராட்சி சுகாதார பனியாளர்கள் பங்கேற்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட உபயோகமற்ற 361டயர்கள் அவிநாசி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

 


Page 55 of 506