Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீர் கட்டணம் கட்டாததால் 25 வீடுகளில் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தமிழ் முரசு         06.12.2013

குடிநீர் கட்டணம் கட்டாததால் 25 வீடுகளில் இணைப்பு துண்டிப்பு

பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.  வீடுகளுக்கு 1001 குடிநீர் இணைப்புகள் உள்ளன. முறையாக குடிநீர் கட்டணம் செலுத்தாததால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு இரண்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இருப்பினும் சிலர் சரிவர குடிநீர் கட்டணம் கட்டவில்லை.

இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு பயன்படுத்தும் நபர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி கட்டணத்தை செலுத்துமாறு பேரூராட்சி நிர்வாகம் வற்புறுத்தியது.

ஆனாலும் 999 இணைப்பு தாரர்கள் பணம் கட்டவில்லை. இதனால் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் தேவதாஸ், துப்புரவு மேற்பார்வையாளர் மதியழகன், பேரூராட்சி ஊழியர்கள், பொன்னேரி போலீஸ் உதவியுடன் 1&வது வார்டுக்கு உட்பட்ட சின்னகாவனம் பகுதியில் 25 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் கட்டணம் கட்டாத நபர்கள் உடனடியாக கட்ட வேண்டும் அல்லது இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

Print PDF

தினகரன்           05.12.2013 

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

திருச்சி, : திருச்சி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.

திருச்சி மாநகராட்சியில் மாநகர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் மரியம் ஆசிக், நகரப் பொறியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்பு அகற்றம், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பது, கழிவறை மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 9 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பழுதடைந்த தெரு விளக்குகளை விரைந்து பழுது நீக்கம் செய்திடவும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற்கொண்டு முழுமையான நடவடிக்கை எடுப்பதோடு இதுகுறித்து மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நகர் நல அலுவலர் மாரியப்பன், செயற்பொறியாளர்கள் அருணாச்சலம், நாகேஷ், உதவி ஆணையர்கள் ரெங்கராஜன், தனபால், தயாநிதி, பிரபுகுமார் ஜோசப், உதவி செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், கண்ணன், அமுதவள்ளி, லெட்சுமணமூர்த்தி, திட்டப்பிரிவு உதவி செயற்பொறியாளர்கள் சிவபாதம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

முழுமை திட்ட மறு ஆய்வுக்கு கால அவகாசம் அரசு பதிலுக்காக சி.எம்.டி.ஏ., காத்திருப்பு

Print PDF

தினமலர்           05.12.2013 

முழுமை திட்ட மறு ஆய்வுக்கு கால அவகாசம் அரசு பதிலுக்காக சி.எம்.டி.ஏ., காத்திருப்பு

இரண்டாவது முழுமை திட்டத்தை (மாஸ்டர் பிளான்) மறு ஆய்வு செய்ய, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) ஓராண்டு கால அவகாசம் கேட்டு உள்ளது.

சென்னை, பெருநகர் பகுதியில், 2026ம் ஆண்டு வரை, ஏற்படக்கூடிய வளர்ச்சி மற்றும் மாற்றங்களை கருத்தில் கொண்டு, உருவாக்கப்பட்ட இரண்டாவது முழுமை திட்டம், 2008ம் ஆண்டு செப்டம்பர், 2ம் தேதி, நடைமுறைக்கு வந்தது.

பொருளாதாரம், போக்குவரத்து, உறைவிடம், உள்கட்டமைப்பு, திடக் கழிவு மேலாண்மை குறித்த, தற்போதைய நிலை, 2026ம், ஆண்டு வரை ஏற்படக்கூடிய வளர்ச்சி, அதற்கான தேவையான திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் இதில் தெரிவிக்கப்பட்டன.

குழுக்கள்

இந்த பரிந்துரைகளை, செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு குழு, நில பயன்பாடு மற்றும் சுற்றுச் சூழல் குழு, போக்குவரத்துக் குழு, உறைவிடம் மற்றும் உள் கட்டமைப்பு குழு, திட்ட முதலீடு மற்றும் ஆளுமை குழு ஆகிய ஐந்து குழுக்கள், அமைக்கப்பட்டு உள்ளன.

நகரமைப்பு சட்டப்படி, முழுமை திட்ட விதிமுறைகளின்படி, இந்த குழுக்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, புதிய திட்டங்களுக்கான, பரிந்துரைகளை வழங்க வேண்டும். இந்த பரிந்துரைகளின் செயலாக்கம், முழுமை திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, முடிவுகள் எடுக்க முழுமை திட்டத்தை ஐந்தாண்டுகளுக்கு, ஒருமுறை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

மறு ஆய்வு


சி.எம்.டி.ஏ.,வின், இரண்டாவது முழுமைத்திட்டம் அமலாகி ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், அதை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், புதிய திட்டங்களுக்கான பரிந்துரைகள், வழங்குவதற்கான குழுக்கள் முறையாக செயல்படாததால், முழுமை திட்டத்தை இப்போதைக்கு மறு ஆய்வு செய்ய வேண்டாம் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

இத்தகைய முடிவுகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், தன்னிச்சையாக எடுக்க முடியாது. இதனால், இதற்கு, அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியமாகிறது.

கால அவகாசம்

இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உயர் அதிகாரி ஒருவர், கூறியதாவது:

இரண்டாவது, முழுமை திட்டத்தை மறு ஆய்வு செய்வதை, ஓராண்டு ஒத்தி வைக்க, அரசின் அனுமதி கேட்டு, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் கடிதம் எழுதி உள்ளது. ஆனால், ஓராண்டு வரை, இந்த பணிகளை ஒத்தி வைக்காமல், இப்போதே, அதற்கான நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என, சி.எம்.டி.ஏ.,வுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம்.

நிர்வாக ரீதியாக, இதுகுறித்த விவரங்கள் சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகளுக்கு விரைவில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 56 of 506