Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மழைநீர் சேகரிப்பு மீண்டும் தீவிரமாகிறது: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

மாலை மலர்            28.11.2013

மழைநீர் சேகரிப்பு மீண்டும் தீவிரமாகிறது: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
 
மழைநீர் சேகரிப்பு மீண்டும் தீவிரமாகிறது: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, நவ. 28 - சென்னை நகரின் தண்ணீர் தேவையில், நிலத்தடிநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை குடிநீரின் தேவைக்கு ஏரிகளில் தண்ணீர் சேகரித்து பயன்படுத்தப்படுகிறது. குடிநீர் வாரியம் இத்தண்ணீரை குழாய் மூலமும், லாரிகளிலும் சப்ளை செய்கிறது.

வீட்டு தேவைகளுக்கு வீட்டுக்கு வீடு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது. மழைநீரை முறைப்படி சேமிக்காவிட்டால் நிலத்தடி நீர் குறைந்துவிடும். இதனால் நகரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே தமிழக அரசு மழைநீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

மழைநீர் சேமிப்பை அதிகரிப்பது குறித்து சமீபத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் சென்னை நகரிலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இருக்கும் சிறிய நீர்நிலைகள், குட்டைகளை புதுப்பித்து மழைநீரை வீணாக்காமல் சேமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்படி 429 சதுர கிலோமீட்டர் பகுதியில் மழை நீர் சேமிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை பகுதியில் 100–க்கும் மேலான சிறிய குட்டைகள் உள்ளது. இதில் 19 குட்டைகளை குடிநீர் வடிகால் வாரியம் பராமரிக்க உள்ளது. மீதம் உள்ள மழைநீர் சேமிப்பு பகுதிகளை சென்னை மாநகராட்சி புதுப்பிக்க முடிவு செய்து இருக்கிறது.

மாநகராட்சி பகுதியில் எங்கெல்லாம் மழைநீர் சேமிப்பு குட்டைகள் அமைக்கலாம். மழைநீரை வீணாகாமல் ஒரு பகுதியில் சேமித்து வைக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் மழைநீர் சிறிய குட்டைகளில் சேமிக்கப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான காலி நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தால் அதை மீட்டு மழைநீரை சேமிக்க பயன் படுத்துவது போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.

அம்பத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள மங்கள் ஏரியில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. இதுவும் சீரமைக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை பகுதியிலும் நிலத்தடி நீர் உயர வாய்ப்பு உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது போன்ற சிறு ஏரிகளுக்கு மழைநீர் வருவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மழைநீர் வரும் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றன.

இவைதவிர, வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேமிப்பு வசதிகளை சீரமைக்க வேண்டும். புதிய கட்டிடங்களுக்கு கட்டாயம் மழை சேமிப்பு வசதி அமைக்க வேண்டும் என்பதிலும், சென்னை மாநகராட்சி தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும். தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

குடியாத்தம் நகராட்சியில் வரிபாக்கி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது

Print PDF

தினத்தந்தி             28.11.2013

குடியாத்தம் நகராட்சியில் வரிபாக்கி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது

குடியாத்தம் நகராட்சியில் வரி பாக்கி வைத்துள்ளர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அத்துடன் கடைகளுக்கு சீலும் வைக்கப்பட்டது.

வரிபாக்கி

குடியாத்தம் நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் வரி, கடை வரி மற்றும் இதர இனங்களில் பாக்கி வைத்துள்ளர்கள் பலமுறை பாக்கி தொகைகளை செலுத்த அறிவுறுத்தியும் செலுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று நகராட்சியில் 12, 13 மற்றும் 14–வது வார்டு பகுதியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜி.உமாமகேஸ்வரி உத்தரவின்பேரில் மேலாளர் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் கவிதா, நகராட்சி அலுவலர்கள் தாமோதரன், தீனதயாளன், செல்வம், ராம்குமார், சங்கர், ஸ்ரீதர் உள்ளிட்ட பணியாளர்கள் மொத்தமாக ஒவ்வொரு இடத்திற்கும் சென்று வரி வசூலில் ஈடுபட்டனர்.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

அப்போது வரி பாக்கி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்புகளை துண்டித்தனர். மேலும் கடைகளுக்கும் சீல் வைத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து நேற்று சுமார் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வரி பாக்கி தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜி.உமாமகேஸ்வரி கூறுகையில், நகராட்சியில் தொடர்ந்து வாரத்தில் 2 நாட்களில் பணியாளர்கள் மொத்தமாக சென்று வரி பாக்கி வசூலிப்பிலும், சீல் வைப்பு நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

 

விதி மீறிய கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. சீல்

Print PDF

தினமணி             28.11.2013

விதி மீறிய கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. சீல்

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 இது குறித்து சி.எம்.டி.ஏ. வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் வாகன நிறுத்தம் மற்றும் 2 அடுக்கு குடியிருப்பு கட்ட சென்னை மாநகராட்சியிடம் கட்டட உரிமையாளர் அனுமதி வாங்கியுள்ளார்.

 ஆனால் அவர் தரைத் தளத்துடன் கூடிய 3 அடுக்குகளை வணிக பயன்பாட்டுக்காக கட்டினார். இது குறித்த அறிந்த அதிகாரிகள், பணி நிறுத்த நோட்டிஸை உரிமையாளரிடம் அளித்தனர்.

 ஆனால் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இதனையடுத்து சீல் வைப்பதற்கான நோட்டிஸ் கடந்த ஜூலை மாதம் அளிக்கப்பட்டது. இதற்கும் உரிமையாளர் செவி சாய்க்காததால், கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் புதன் கிழமை சீல் வைத்து பூட்டினர்.

 


Page 61 of 506