தினத்தந்தி 25.11.2013
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ரூ.2¾ லட்சம் கல்வி உதவித்தொகை மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி வழங்கினார்
![](http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/TPH01TONL24comm25.jpg)
தூத்துக்குடியில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்து 800 கல்வி உதவித்தொகையை மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி வழங்கினார்.
கல்வி உதவித்தொகை
தூத்துக்குடி எல்.ஐ.சி. நிறுவனமும், மகாசேமம் அறக்கட்டளையும் இணைந்து ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சுந்தரவேல்புரத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மகாசேமம் மண்டல மேலாளர் எஸ்.பாஸ்கரசேதுபதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி கலந்து கொண்டு 453 குழந்தைகளுக்கு ரூ.2 லட்சத்து 71 ஆயிரதது 800 மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மகாசேமம் கிளை மேலாளர் டி.கார்த்திகை ராஜன், மகளிர் சுய உதவிக்குழு தலைவியும், தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி மகளிர் அணி செயலாளர் ஆர்.ராஜலட்சுமி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.