Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சொத்து வரி பாக்கி அடுக்குமாடி குடியிருப்பு, 3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்            08.11.2013

சொத்து வரி பாக்கி அடுக்குமாடி குடியிருப்பு, 3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

கோவை, : சொத்து வரி பாக்கி வைத்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மூன்று வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி 6வது வார்டு கவுண்டம்பாளையம் ரோட்டில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு சார்பில் மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்து வரி ரூ.1.54 லட்சம் பாக்கி இருந்தது. இதை செலுத்தக்கோரி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால், செலுத்தப்படவில்லை. இதையடுத்து, மேயர் செ.ம.வேலுசாமி, கமிஷனர் லதா ஆகியோரது உத்தரவின்பேரில், மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள் நேற்று காலை அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து, குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

இதேபோல், 5வது வார் டில் ரூ.15,628 சொத்து வரி பாக்கி வைத்துள்ள புஷ்ப ராஜ், ரூ.15,628 சொத்து வரி பாக்கி வைத்துள்ள மயிலாத் தாள், ரூ.81 ஆயிரம் பாக்கி வைத்துள்ள நாக ராஜன் ஆகிய மூவரது வீடுகளிலும் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:

கோவை மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய 2013-14ம் இரண்டாம் அரையாண்டு வரையிலான சொத்து வரி நிலுவைகளை கடந்த அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த தேதிக்குள் சொத்து வரி செலுத்தாத நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, வரி செலுத்தாதவர்கள் 2013-14ம் இரண் டாம் அரையாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் கட் ட ணம் முதலிய நிலுவைகளை உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண் டிப்பு நடவடிக்கையை தவிர்க்குமாறு வேண்டுகிறோம். அடுக்குமாடி குடியிருப் பில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நிலுவையின்றி சொத்து வரி செலுத்தப்பட வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப் பில் ஏதேனும் ஒரு குடியிருப்புக்கான சொத்து வரி நிலுவை இருந்தாலும், ஒட்டுமொத்த அடுக்குமாடி குடியிருப்புக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. எனவே, அந்தந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் நிலுவையின்றி வரி செலுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநகர எல்லைக்குள் தொழில் புரிந்து வரும் தனி நபர், வணிக நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் அனை வரும் தொழில் வரி செலுத்த வேண்டும். தொழில் வரி செலுத்தாத அனைத்து தொழில் நிறுவனங்களும் உடனடியாக உரிய கட்டணத்தை செலுத்தி, தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கமிஷனர் லதா கூறினார்.

 

பாண்டிபஜார் நடைபாதை கடைகள் அகற்றம்

Print PDF

மாலை மலர்           08.11.2013

பாண்டிபஜார் நடைபாதை கடைகள் அகற்றம்
 
பாண்டிபஜார் நடைபாதை கடைகள் அகற்றம்: வணிக வளாகத்தில் கடைகள் தயாராகாததால் பொதுமக்கள் தவிப்பு
சென்னை, நவ.8- சென்னை தியாகராய நகர், தியாகராய சாலை, பாண்டிபஜார், உஸ்மான் சாலை, சிங்காரவேலன் சாலை, சிவபிரகாசம் சாலை ஆகிய பகுதிகளில் நடைபாதை கடைகள் அதிகம் உள்ளன. இந்த நடைபாதை கடைகளில் பல தரப்பட்ட மக்களும் வந்து தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்வது வழக்கம்.

இந்த நடைபாதை கடைகளினால் அந்த பகுதிகள் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆமை வேகத்தில் செல்வதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு கடந்த 2001-ம் ஆண்டு டிராபிக் ராமசாமி என்பவர் பொது நலவழக்கு தொடர்ந்தார். அதேபோல் பாண்டிபஜார் நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும் கடைகளுக்கு பின்புறம் உள்ள பெரிய வர்த்தக நிறுவனங்கள் மறைக்கப்படுகின்றன. இதனால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி அவர்களும் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கனகராஜ் தலைமையில் தனி கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி நடைபாதை வியாபாரிகளிடம் நேரடி ஆலோசனை வழங்கியது. அதில் நடைபாதை வியாபாரிகள் எங்களுக்கென்று தனி வணிக வளாகம் அமைத்து தாருங்கள் என்று கூறி இருந்தனர்.

அதன்படி, கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.4 கோடியே 30 லட்சம் செலவில் 3 அடுக்கு கொண்ட வணிக வளாகம் கட்டிமுடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 20-ந்தேதி நடைபாதை வியாபாரிகள் தங்கள் நடைபாதை கடைகளை காலிசெய்து விட்டு வணிக வளாகத்தில் தங்கள் கடைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நவம்பர் 2-ந்தேதி தீபாவளி என்பதால் அதுவரை நாங்கள் எங்கள் நடைபாதை கடைகளில் வியாபாரம் செய்கிறோம். தீபாவளி முடிந்ததும் நாங்களாகவே கடைகளை அகற்றி விடுகிறோம் என்று கூறினர்.

அதன்படி அவர்கள் கோரிக்கையை அரசு ஏற்று அவர்களுக்கு நவம்பர் 5-ந்தேதி வரை அனுமதி வழங்கியது. தற்போது 5-ந்தேதி முடிவடைந்த நிலையில் நடைபாதை கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து நேற்று முன்தினம் இரவு முதல் தங்கள் கடைகளை அகற்றினர். தற்போது அவர்கள் வணிக வளாகத்தில் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கடைகளை மும்முரமாக அமைத்து வருகின்றனர்.

இதுகுறித்து வணிக வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நடைபாதை கடைகள் சங்கத்தின் தலைவர்கள் கூறியதாவது:-

பாண்டிபஜார், உஸ்மான் சாலை, தியாகராய நகர், தியாகராய சாலை, சிவபிரகாசம் சாலை, டாக்டர் நாயர் சாலை, பிள்ளையார் கோவில் தெரு, சிவஞானம் சாலை, ஸ்ரீனிவாசா சாலை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து நடைபாதை கடைகளையும் தற்போது நாங்களாகவே அகற்றி விட்டோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வணிக வளாகத்தில் தற்போது ஒவ்வொரு நடைபாதை வியாபாரிகளும் கடைகளை அமைக்கின்றனர்.

இந்த வணிக வளாகம் 3 அடுக்குகளை கொண்டது. ஒவ்வொரு தளத்திலும் 175 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தளத்தில் ஏ, பி, சி என்று மூன்று பிரிவுகளாக பிரித்து ஏ பிரிவில் 59 கடைகளும், பி பிரிவில் 57 கடைகளும், சி பிரிவில் 59 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தளத்தில் 9 கழிவறைகளும், 3 லிப்ட் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதே போல் மூன்று தளத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் காய்கறி கடைகள் வர உள்ளன. பாண்டிபஜார் பேன்சி ஸ்டோர், ஜவுளிக்கடைக்கு மவுசு அதிகம் என்பதால் இன்று காலை முதல் இந்த வணிக வளாகத்தில் கடைகள் வந்து விட்டதா? என்று பொதுமக்கள் நிறைய பேர் வந்து பார்த்து விட்டு சென்றனர்.

தற்போது வணிக வளாகத்தில் வெளியே பூக்கடைக்காரர்கள் தங்கள் அன்றாட வியாபாரத்தை தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டு இருக்கின்றனர். இங்கு அனைத்து கடைகளின் பணி முடிய இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஆகும். தற்சமயம் அனைத்து நடைபாதை வியாபாரிகளும் தங்கள் கடைகளை காலி செய்துவிட்டதால் இங்கு வணிக வளாகத்தில் கடைகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு விட்டதால் நேற்று எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாண்டிபஜார் பகுதி களை இழந்து காணப்பட்டது. மேலும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் வாகனங்கள் அனைத்தும் சீராக சென்றன. போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை.
 

வரி செலுத்தவில்லையா..குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது

Print PDF

தினமலர்            08.11.2013

வரி செலுத்தவில்லையா..குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது

கோவை : கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி செலுத்தாமலோ, நிலுவை வைத்திருந்தாலோ, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2013-14ம் இரண்டாம் அரையாண்டு வரையிலான சொத்து வரி நிலுவைகளை, அக்., 15க்குள் செலுத்தியிருக்க வேண்டும். செலுத்தாமல் மாநகராட்சிக்கு நிலுவை வைத்திருப்பவர்களின் பட்டியல் தயார் செய்து, குடிநீர் துண்டிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

"பொதுமக்கள், 2013-14ம் இரண்டாம் அரையாண்டு வரையிலான சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவைகளை செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுத்து நிறைவடைந்து விட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் நிலுவையின்றி சொத்துவரி செலுத்தியிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு தளத்துக்கு சொத்துவரி செலுத்தாமல் இருந்தாலும், அடுக்குமாடி குடியிருப்புக்கான குடிநீர் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்படும். மாநகரில் தொழில் புரிந்து வரும் தனிநபர், வணிக நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தொழில்வரி செலுத்த வேண்டும்' என மாநகராட்சி அறிவித்துள்ளது. சிலர் நிலுவை வைத்து சொத்துவரி மற்றும் தொழில்வரியை செலுத்தியுள்ளனர். அவர்களது வீடு மற்றும் தொழில் நிறுவனங்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், ""அனைத்து வரிவிதிப்புதாரர்களும் உடனடியாக சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட நிலுவைத்தொகையை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, வர்த்தக நிறுவனங்களுக்கு "சீல்' போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். வார்டு எண் 5 ல் முதல் அரையாண்டு சொத்துவரி 31,000 நிலுவை வைத்துள்ள நபரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

வார்டு எண் 6ல் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிலுவை வைத்துள்ள அப்பார்ட்மென்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது போன்று 10க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் துண்டிப்பு பணி தொடரும்,'' என்றார்.

 


Page 73 of 506