Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மதுரையில் சீமைக் கருவேல் மரம் வளர்த்தால் அபராதம்: மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினமணி          21.10.2013

மதுரையில் சீமைக் கருவேல் மரம் வளர்த்தால்  அபராதம்: மாநகராட்சி அறிவிப்பு

  மதுரை மாநகராட்சிப் பகுதியில் சீமைக் கருவேல் மரம் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீறி வளர்ப்போரின் நிலத்திலுள்ள சீமைக் கருவேல் மரங்கள் அகற்றப்படுவதுடன், ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

  மதுரை மாநகரப் பகுதியில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் முயற்சியாக, சீமைக் கருவேல் மரங்கள் வளர்ப்பதற்கு, மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

  இது தொடர்பாக, மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் மேலும் கூறியிருப்பது:

  தனியார் இடங்களில் சீமைக் கருவேல் மரங்கள் (வேலிக் கருவை) வளர்ந்தால், நிலத்தின் உரிமையாளர்கள் உடனடியாக அவற்றை வெட்டி அப்புறப்படுத்தி விடவேண்டும்.

இல்லையெனில், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் சீமைக் கருவேல் மரங்கள் அகற்றப்படுவதுடன், அதற்கான செலவுத் தொகையையும் சேர்த்து நிலத்தின் உரிமையாளரிடம் வசூல் செய்யப்படும்.

  குறைந்தபட்ச அபராதத் தொகையாக ரூ. 500 முதல் இடத்தின் பரப்பளவுக்கு ஏற்றவாறு அபராதம் நிர்ணயம் செய்யப்படும். நிலத்தடி நீர் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்த ஒப்புதல் கோரப்பட்டது.  மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

"கட்டணம் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு'

Print PDF

தினமலர்           21.10.2013

"கட்டணம் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு'

மேட்டுப்பாளையம் : "நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி செலுத்தத் தவறினால், குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்' என, நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார். மேட்டுப்பாளையம் நகராட்சியில், ஆண்டுக்குரிய குடிநீர் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, காலியிட வரி, கடை வாடகை ஆகியவை, இரு தவணையாக வசூல் செய்யப்படுகிறது. சிலர் முந்தைய ஆண்டுக்கு உரிய கட்டணத்தை செலுத்தாமல், நிலுவையாக வைத்துள்ளனர்.

சொத்துவரி 10. 82 லட்சம் ரூபாய், குடிநீர் கட்டணம் 26 லட்சம், காலியிட வரி 9.82 லட்சம், கடை வாடகை 11.84 லட்சம், தொழில் வரி 2.16 லட்சம் ரூபாய் நிலுவையாக உள்ளது. நகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறுகையில், "வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவையாக வைத்துள்ளவர்கள், வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்; தவறும் பட்சத்தில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும், என்றார்.

 

பேருந்து சாலை­களை துல்­லி­ய­மாக அள­வி­டு­கி­றது மாந­க­ராட்சி

Print PDF

தினமலர்           21.10.2013

பேருந்து சாலை­களை துல்­லி­ய­மாக அள­வி­டு­கி­றது மாந­க­ராட்சி

சென்னை:சென்னை மாந­க­ராட்சி கட்­டுப்­பாட்டில் உள்ள பேருந்து சாலை­களின் அமைப்பை, புதிய தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி துல்­லி­ய­மாக அளவு செய்து, வரை­படம் தயா­ரிக்க மாந­க­ராட்சி திட்­ட­மிட்டு உள்­ளது.

சென்னை மாந­க­ராட்சி கட்­டுப்­பாட்டில், 460 பேருந்து சாலைகள், 353 கி.மீ., துாரத்­திற்கு உள்­ளன. இந்த சாலை­களின் அமைப்பு, நீளம், அகலம், நடை­பாதை விவரம், சாலை தடுப்பு அளவு போன்ற விவ­ரங்கள் தற்­போது மாந­க­ராட்சி வசம் துல்­லி­ய­மாக இல்லை.

இதனால் புதிய திட்­டங்­க­ளுக்கு மதிப்­பீ­டுகள் தயார் செய்­வதில் சிக்கல் ஏற்­ப­டு­கி­றது.

சென்­னையில் பேருந்து சாலை­களை, கிரானைட் நடை­பா­தைகள் அமைத்து உலக தரத்­திற்கு மாற்ற மாந­க­ராட்சி திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்கு, சாலை­களின் வடி­வ­மைப்பை துல்­லி­ய­மாக அள­விட வேண்­டி­யது அவ­சி­ய­மாக உள்­ளது. இதனால், மாந­க­ராட்சி, 'லிடார்' (light detecting and ranging) என்ற நவீன தொழில்­நுட்பம் மூலம் இப்­பணி­களை மேற்­கொள்ள திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, 47 லட்சம் ரூபாய்க்கு மாந­க­ராட்சி ஒப்­பந்த அறி­விப்பு வெளி­யிட்டு உள்­ளது.

லிடார் தொழில்­நுட்­பத்தில் மென்­பொருள் மூலம், ஒரு சாலையின் நீளம், அகலம், சாலையின் உள்ள கட்­ட­டங்கள் எண்­ணிக்கை, அதன் அமைப்பு உட்­பட, அனைத்து விவ­ரங்­க­ளையும் துல்­லி­ய­மாக பெற முடியும். இவ்­வாறு, ஒவ்­வொரு சாலை­களின் விவ­ரமும் வரை­ப­ட­மாக தயா­ரிக்­கப்­பட உள்­ளன. இந்த விவ­ரங்­களை பொறுத்தே, கிரானைட் நடை­பாதை பணி­க­ளுக்கு மதிப்­பீ­டுகள் தயா­ரிக்­கப்­பட உள்­ளன.

இது குறித்து மாந­க­ராட்சி அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

சென்­னையில் சாலைகள் உலக தரத்­திற்கு அமைக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளன. இதற்கு ஒவ்­வொரு சாலை­களின் அமைப்­பையும் துல்­லி­ய­மாக அள­வி­டு­வது அவ­சியம். இதற்­காக புதிய தொழில்­நுட்­பத்தை மாந­க­ராட்சி பயன்­ப­டுத்­து­கி­றது. வி.ஐ.பி.,க்கள் உள்ள சாலை­களும், பேருந்து சாலை­களும் இப்­ப­ணி­க­ளுக்கு முதலில் தேர்வு செய்­யப்­படும். படிப்­ப­டி­யாக மாந­க­ராட்­சியின் அனைத்து சாலை­க­ளிலும் உள்ள கேபிள் விவ­ரங்கள் அறி­யப்­படும். இவ்­வாறு, அந்த அதி­காரி கூறினார்.

 


Page 89 of 506