Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளுக்கும் பொதுநிதியில் இருந்து ரூ. 6 கோடியில் பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை

Print PDF

தினத்தந்தி            21.10.2013

மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளுக்கும் பொதுநிதியில் இருந்து ரூ. 6 கோடியில் பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை

வேலூர் மாநகராட்சி 1–வது மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளுக்கும் பொதுநிதியில் இருந்து ரூ.6 கோடியில் பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மண்டல குழு கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தனர்.

மண்டல குழுக்கூட்டம்

வேலூர் மாநகராட்சி 1–வது மண்டல குழுக்கூட்டம் தாராபடவேடு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல குழுத்தலைவர் சுனில்குமார் தலைமை தாங்கினார். மண்டல அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:–

அன்பு: என்னுடைய வார்டில் பல இடங்களில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அடிக்கடி திருட்டு சம்பவம் நடக்கிறது. தெருவிளக்கு எரிய வைக்க நடவடிகை எடுக்கப்படுமா?

மண்டல தலைவர் சுனில்குமார்: தெருவிளக்குகளை பராமரிக்க தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அவர்கள் எந்தெந்த பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை என கணக்கெடுத்து வருகின்றனர். அந்தபணி முடிந்தவுடன் விளக்குகள் எரிய செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நவீன்குமார்: என்னுடைய வார்டில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது. நகராட்சியில் குரங்கு பிடிக்கிறார்கள். மாநகராட்சியில் ஏன் குரங்கு பிடிப்பதில்லை?

தலைவர் சுனில்குமார்: குரங்குகளை பிடிக்க வனத்துறையினருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரம் ஒதுக்கி தரும்போது குரங்குகள் பிடிக்கப்படும்.

ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்

விஜயலட்சுமி: என்னுடைய வார்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையே, ஏன்? மண்டல அலுவலர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்பு: மழைகாலத்தில் வீடுகளில் நத்தைகள் வந்துவிடுகிறது. கழிவுநீர் கால்வாய் கட்டினால் நத்தைகள் வராது.

மண்டல அலுவலர்: கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நவீன்குமார்: என்னுடைய வார்டில் கல்லூரி சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். மேலும் கொசுத்தொல்லை இருப்பதால் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

மண்டல அலுவலர்: ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கொசுமருந்து அடிக்கப்படும்.

செல்வி ரவி: என்னுடைய வார்டில் குப்பைகள் அதிகமாக உள்ளது. தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. டிராக்டரை அனுப்பினால் உடனுக்குடன் குப்பைகள் அகற்ற முடியும். மண்டல அலுவலர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

எஸ்.ராஜா: என்னுடைய வார்டில் ரெயில்வே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அதற்கு கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும். இதுவரை நடவடிக்கை இல்லை. சித்தூர் பஸ் நிறுத்தத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதற்கு நிரந்திர தீர்வு காணவேண்டும்.

மண்டல அலுவலர்: சித்தூர் பஸ் நிறுத்தத்தில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

ரமேஷ்: காங்கேயநல்லூர் மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும். நீண்ட நாட்களாக கூறிவருகிறேன். டெண்டர் விட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தலைவர் சுணில்குமார்: கழிவுநீர் கால்வாய் கட்ட அதிக நிதி தேவைப்படும். திட்ட மதிப்பீட்டை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர். திட்ட மதிப்பீடு வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
 

பாண்டிபஜார்–உஸ்மான் சாலை நடைபாதை கடைகள் இன்று அகற்றப்படுகிறது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி தீவிரம்

Print PDF

தினத்தந்தி            21.10.2013

பாண்டிபஜார்–உஸ்மான் சாலை நடைபாதை கடைகள் இன்று அகற்றப்படுகிறது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி தீவிரம்

சென்னை ஐகோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்ததைதொடர்ந்து, சென்னை பாண்டிபஜார்–உஸ்மான் சாலையில் உள்ள நடைபாதை கடைகள் இன்று(திங்கட்கிழமை) அகற்றப்படுகிறது. நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி உள்ளது.

ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை பாண்டி பஜார்–உஸ்மான் சாலையில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு என்று சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4 கோடியே 30 லட்சம் செலவில் கீழ்தளத்துடன் கூடிய 3 அடுக்கு வணிக வளாகம் 2010–ம் ஆண்டு திறக்கப்பட்டது. வணிக வளாகத்தில் ஒரு கடை அமைக்க 5–க்கு 5 அடி வீதம் 628 கடைகள் அமைப்பதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியது.எனினும் வணிக வளாகம் திறக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும், பாண்டி பஜார்–உஸ்மான் சாலை நடைபாதை வியாபாரிகள் தொடர்ந்து நடைபாதைகளிலேயே கடைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், பாண்டி பஜார்–உஸ்மான் சாலை நடைபாதை வியாபாரிகள் அக்டோபர் 20–ந்தேதிக்குள்(நேற்றுடன்) கடைகளை காலி செய்துவிட்டு, மாநகராட்சி நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகத்துக்கு செல்ல வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த 11–ந்தேதி காலக்கெடு விதித்து தீர்ப்பு வழங்கியது.

அதிகாரிகள் எச்சரிக்கை

ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து மாநகராட்சி வணிக வளாகத்தில் கடைகளை அமைக்கும் பணியில் வியாபாரிகள் இரவு–பகலாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும் நேற்று வரை வெறும் 100–க்கும் குறைவான கடைகளே அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐகோர்ட்டு வழங்கிய காலக்கெடு நேற்று இரவுடன் நிறைவடைந்ததைதொடர்ந்து, சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் சென்னை பாண்டி பஜார்–உஸ்மான் சாலை நடைபாதை வியாபாரிகளிடம் இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணிக்குள் கடைகளை காலி செய்து விட வேண்டும். இல்லையென்றால் கடைகளும், பொருட்களும் அகற்றப்படும் என்று எச்சரித்து சென்றுள்ளனர்.628 கடைகளுக்கு தற்போது வெறும் 100–க்கும் குறைவான கடைகளே தயார் நிலையில் உள்ளது. எனவே நடைபாதை வியாபாரிகள் இன்றுடன் தங்கள் கடைகளை காலி செய்வார்களா? என்பதில் சந்தேகமே நிலவுகிறது.

மேயரை சந்திக்க முடிவு

இதுகுறித்து பாண்டி பஜார் நடைபாதை வியாபாரிகள் கூறுகையில், ‘வணிக வளாகத்தில் இன்னும் கடைகளை அமைப்பதற்கு குறைந்தபட்சம் 2 வாரங்களாவது தேவைப்படும். மேலும் தீபாவளி வியாபாரமும் மும்முரமாக நடைபெற்றுகொண்டிருப்பதால், கடைகளை காலி செய்ய மனம் இல்லாமல் இருந்து வருகிறோம்.எனவே தீபாவளி பண்டிகை முடியும் வரையிலாவது நடைபாதையில் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாமா? என்ற எண்ணத்திலும் இருந்து வருகிறோம்.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியை இன்று(திங்கட்கிழமை)சந்திந்து கோரிக்கை வைக்கவும் முடிவு செய்து இருக்கிறோம்.’ என்றனர்.

 

20–ந்தேதிக்குள் காலி செய்யாவிட்டால் நடைபாதை கடைகள் அகற்றப்படும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி           15.10.2013

20–ந்தேதிக்குள் காலி செய்யாவிட்டால் நடைபாதை கடைகள் அகற்றப்படும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை பாண்டிபஜார்–உஸ்மான் சாலையில் உள்ள நடைபாதை கடைகளை சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, 20–ந்தேதிக்குள் அகற்றி விட வேண்டும். இல்லையென்றால் சென்னை மாநகராட்சி சார்பில் கடைகள் அகற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுதொடர்பாக அந்த அதிகாரி மேலும் கூறும்போது, ‘சென்னை பாண்டிபஜார்–உஸ்மான் சாலையில் 20–ந்தேதிக்குள் காலி செய்யப்படாமல் இருக்கும் நடைபாதை கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்படும். மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் தயார்நிலையில் உள்ளனர். தள்ளுவண்டி கடைகளும் அப்பகுதியில் நிறுத்தக்கூடாது. மீறினால் தள்ளுவண்டியும் பறிமுதல் செய்யப்படும்’ என்றார்.

 


Page 90 of 506