Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்: வார்டு வாரியாக அமைச்சர் ஆய்வு

Print PDF

தினமணி          08.10.2013

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்: வார்டு வாரியாக அமைச்சர் ஆய்வு

மதுரை மாநகராட்சி இஸ்மாயில்புரம் 12-வது தெரு, முனிச்சாலை மெயின்ரோடு பகுதிகளில் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த 50-க்கும் மேற்பட்ட பழைய மரக்கடைகள் அகற்றப்பட்டன.

முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி ஆணையாளர் சின்னம்மாள், உதவி நகரமைப்பு அலுவலர் முத்துக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். ஆணையாளர் ஆர்.நந்தகோபால் இப்பணியை ஆய்வு செய்தார்.

 

நிதி தணிக்­கைக்கு கணக்கு கொடுக்­காத அதி­கா­ரி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை : மாந­க­ராட்சி நட­வ­டிக்கை

Print PDF

தினமலர்             08.10.2013

நிதி தணிக்­கைக்கு கணக்கு கொடுக்­காத அதி­கா­ரி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை : மாந­க­ராட்சி நட­வ­டிக்கை

சென்னை : உள்­ளாட்சி நிதி தணிக்­கைக்கு உரிய கணக்கு கொடுக்­காமல் அதி­கா­ரிகள் ஆண்டுக் கணக்கில் இழுத்­த­டிப்­பதால், கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக தணிக்கை அறிக்கை வெளி­யிடமுடி­யாத நிலை உள்­ளது. அந்த பணி­களை விரைந்து முடிக்­கா­விட்டால், துறை ரீதி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என, தற்­போது மாந­க­ராட்சி எச்­ச­ரிக்கை விடுத்து உள்­ளது.

சென்னை மாந­க­ராட்­சியில் மு.க.ஸ்டாலின் மற்றும் மா.சுப்­பி­ர­ம­ணியன் மேயர் பதவி வகித்த போது, மொத்தம், 417 கோடி ரூபாய், மாந­க­ராட்­சிக்கு இழப்பு ஏற்­பட்­ட­தாக, மேயர் சைதை துரை­சாமி குற்­றம்­சாட்­டினார். இழப்­புக்கு கார­ண­மான அதி­கா­ரிகள் மீது விசா­ரணை நடத்த, வரி விதிப்பு மற்றும் நிதி துறை துணை கமி­ஷனர் தலை­மையில் சிறப்புக் குழு அமைக்க மேயர் உத்­த­ர­விட்டார். கணக்கு வர­வில்லை இந்த குழு, ஒவ்­வொரு ஆண்டு தணிக்கை அறிக்­கை­யையும் பெற்று, அதில் எந்­தெந்த வகையில் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது என்­பது குறித்து விரி­வான ஆய்வு செய்து, அதன் அடிப்­ப­டையில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் விசா­ரணை நடத்தும்.

அது­கு­றித்த ஆய்வின் போது தான், 2010ம் ஆண்டு முதல், மூன்று ஆண்­டு­க­ளுக்­கான தணிக்கை அறிக்கை பெறப்­ப­டாமல் உள்­ளது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, அந்த ஆண்­டு­க­ளுக்­கான நிதி தணிக்­கையை வழங்­கும்­படி, உள்­ளாட்சி நிதி தணிக்கை துறைக்கு மாந­க­ராட்சி சார்பில் கடிதம் அனுப்­பப்­பட்­டது.

அங்­கி­ருந்து மாந­க­ராட்­சிக்கு வந்த பதில் கடி­தத்தில், கடந்த 2010ம் ஆண்டு முத­லான கணக்­கு­களை மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் சமர்ப்­பிக்­கா­ததால், தணிக்கை அறிக்கை வெளி­யிட முடி­ய­வில்லை. கணக்­கு­களை விரைந்து சமர்ப்­பிக்க மாந­க­ராட்­சியின் அனைத்து துறை அதி­கா­ரி­க­ளுக்கும் அறி­வு­றுத்­துங்கள் என்று, கூறப்­பட்டு இருந்­தது. டிசம்­ப­ருக்குள்...இது குறித்து தணிக்கை அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: சென்னை மாந­க­ராட்­சியை பொறுத்த வரையில், நடை­பெறும் பணிகள் குறித்து துறை வாரி­யாக உள் தணிக்கை செய்­யப்­பட்ட பிறகு, உள்­ளாட்சி நிதி தணிக்­கைக்கு மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் கணக்­கு­களை அளிப்பர்.

தணிக்கை அதி­கா­ரிகள், மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் வழங்­கிய கணக்­கு­களை ஆய்வு செய்து, குறை­பா­டு­களைக் கண்­ட­றிந்து, தணிக்கை அறிக்­கை­யாக வெளி­யி­டுவர்.கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் கணக்­கு­களை வழங்­கா­ததால், உள்­ளாட்சி நிதி தணிக்கை மேற்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதனால் தான் அறிக்­கையை வெளி­யிட முடி­ய­வில்லை.இவ்­வாறு அந்த அதி­காரி கூறினார். தணிக்கை துறை கடி­தத்தின் தொடர்ச்­சி­யாக, நிலு­வையில் உள்ள ஆண்டு நிதி கணக்­கு­களை வரும் டிசம்பர் மாதத்­திற்குள் முடித்து, உள்­ளாட்சி நிதி தணிக்கை குழு­விற்கு அனுப்பி வைக்­கும்­ப­டியும், தவறும் அதி­கா­ரிகள் மீது துறை ரீதி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் மாந­க­ராட்சி கமி­ஷனர், அனைத்து துறை அதி­கா­ரி­க­ளுக்கும் எச்­ச­ரிக்கை விடுத்து உள்ளார்.

நட­வ­டிக்­கைக்கு சபாஷ் : தணிக்கை அறிக்கை தாம­த­மாக பெறப்­ப­டு­வதால், பணி ஓய்வு பெற்ற பிறகு அதி­கா­ரி­க­ளிடம், இழப்­பீட்டு தொகையை வசூ­லிப்­பதில் சிரமம் நில­வு­கி­றது.

மாந­க­ராட்­சிக்கு 417 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­ட­தாக கூறப்­படும் கால­கட்­டத்தில் பணி­யாற்­றிய அதி­கா­ரி­களில் 90 சத­வீதம் பேர் தற்­போது ஓய்­வு­பெற்று உள்­ளனர்.

இழப்பு கண்­டு­பி­டிக்கப் பட்டால், அவர்­க­ளிடம் இழப்­பீட்டு தொகையை எப்­படி வசூல் செய்­வது என்­பதில் பெரும் குழப்பம் நில­வு­கி­றது.

இதனால் மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் இனி பணி ஓய்வு பெறும் போது, தணிக்கை இழப்பு உள்­ளதா என, ஆய்வு செய்த பிறகே பணி ஓய்வும், பண பலனும் வழங்க வேண்டும் என்று, மேயர் சைதை துரை­சாமி உத்­த­ர­விட்டார். இந்த உத்­த­ரவு தற்­போது அம­லுக்கு வந்­துள்­ளது. கடந்த மாதம் ஓய்வு பெற்ற மூன்று அதி­கா­ரி­களின் தணிக்கை கணக்கு ஆய்வு செய்­யப்­பட்டு, இழப்­பீ­டு­களை பிடித்தம் செய்ய அவர்­க­ளிடம் ஒப்­புதல் கடிதம் பெறப்­பட்டு உள்­ளது.

இன்னும் வெளி­வ­ராத மூன்று ஆண்டு தணிக்கை அறிக்­கையில் ஏதேனும் இழப்பு அவர்­களால் ஏற்­பட்டு இருந்தால், அதை ஓய்­வூ­திய அக­வி­லைப்­ப­டியில் பிடித்தம் செய்­து­கொள்ள சம்­மதம் தெரி­வித்தும் கடிதம் பெறப்­பட்டு உள்­ளது. இத்­த­கய நடை­முறை அம­லுக்கு வந்தால், அரசு துறை­களில் நிதி மேலாண்மை சீராகும் என்­பதில், எந்த சந்­தே­கமும் இல்லை.

 

அம்மா உணவகத்தில் ஆய்வு: அதிகாரிகளுக்கு புது உத்தரவு

Print PDF

தினமலர்            07.10.2013

அம்மா உணவகத்தில் ஆய்வு: அதிகாரிகளுக்கு புது உத்தரவு

சேலம்: அம்மா உணவகங்களில், ஆய்வு பணிக்கு செல்லும் அதிகாரிகள், கையுறை, கேப் ஆகியவற்றை அணிந்து செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 10 மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. அம்மா உணவகங்களில், சாப்பாட்டின் தரம் குறையாமல் வினியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களின் நடவடிக்கைகள், பொருட்கள் வைப்பு அறை, சாப்பாட்டின் தரம் ஆகியவற்றை, அடிக்கடி மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சிகளில், பொறியாளர் பிரிவு அதிகாரிகள் தலைமையில் தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும் போது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், கைறை, கேப் ஆகியவற்றை அணிந்தே உள்ளே செல்ல வேண்டும். மேலும், சமையல் செய்யும் இடத்துக்குள் செல்லும் போது, காலணிகளை வெளியில் விட்டுச் செல்ல வேண்டும், எனவும் நகராட்சி நிர்வாக ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவு நகல், அனைத்து மாநகராட்சிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 


Page 94 of 506