Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருப்போரூர் பேரூராட்சியில் 3 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு

Print PDF

தமிழ் முரசு         01.10.2013

திருப்போரூர் பேரூராட்சியில் 3 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான 3 கோடி மதிப்பு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணகப்பட்டு கிராமத்தில் இள்ளலூர் சாலையில் அரசுக்கு   சொந்தமான 97 சென்ட் ஏரி புறம்போக்கு நிலம் உள்ளது. ஏரிக்கரையை ஒட்டிய இந்த நிலத்தை விவசாயிகள், தங்களின் விளை பொருட்களை எடுத்துவரும் பாதையாக பயன்படுத்தினர். இந்த நிலத்தை அவ்வப்போது சிலர் ஆக்கிரமித்துவந்தனர். வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கல் நட்டுவைத்தனர்.

பின் அந்த இடத்தில் வீடுகள் கட்டி மின் இணைப்பு பெற்று குடியேறிவிட்டனர். இது பற்றி அறிந்ததும் நேற்று திருப்போரூர், கண்ணகப்பட்டு மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்து மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி மோகன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் போலீசாருடன் அங்கு விரைந்தனர். திருப்போரூர் துணை வட்டாட்சியர் வெங்கட்ரமணன், கிராம நிர்வாக அலுவலர் வேலாயுதம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். அரசு பதிவேடுகளை வைத்து ஆய்வு செய்தனர்.

இதில், அந்த இடம் ஏரிக்கரை புறம்போக்கு என்பது தெரியவந்தது. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு  இடத்தில் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த வேலிகளை அப்புறப்படுத்தினர். மீட்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு ரூ.3 கோடி என தெரிகிறது.

 

சங்கிலிப்பள்ளம், ஜம்மனைப்பள்ளத்தை நகராட்சிகளின் நிர்வாக செயலர் ஆய்வு

Print PDF

தினமலர்            01.10.2013  

சங்கிலிப்பள்ளம், ஜம்மனைப்பள்ளத்தை நகராட்சிகளின் நிர்வாக செயலர் ஆய்வு

திருப்பூர் :சபரி ஓடை, தாராபுரம் ரோடு சங்கிலிப்பள்ளம் பாலம் மற்றும் ஜம்மனைப்பள்ளம் ஆகிய பகுதிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் பனீந்தர் ரெட்டி நேற்று பார்வையிட்டார்.

நீரோடைகளில் கட்டட கழிவுகள் கொட்டுவதை கண்காணித்து தடுக்க வேண்டும். கழிவுநீர் தேங்காமல் செல்ல வழி ஏற்படுத்த அறிவுறுத்தினார்.

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர் பனீந்தர் ரெட்டி நேற்று திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில், புதிய திருப்பூர் கழக மேம்பாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அதைத்தொடர்ந்து, ஆத்துப்பாளையம் ஏ.வி.பி., ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு, காலை மற்றும் மதிய உணவு தயாரிப்பு முறைகளை மகளிர் குழுவினரிடம் கேட்டறிந்தார். அப்போது,"அம்மா உணவகம் திட்டத்தை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். தேவையான அளவு தட்டு, குடிநீர் வசதியை செய்துகொடுக்க வேண்டும். சுகாதாரத்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும்,' என அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து, சபரி ஓடை, தாராபுரம் ரோடு சங்கிலிப் பள்ளம் பாலம் மற்றும் ஜம்மனைப் பள்ளம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். நீரோடைகளில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்.

கழிவுநீர் தேங்காமல் செல்ல வழி ஏற்படுத்த அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, ஆண்டிபாளையம் குளம் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.

 

பொதுப்­பணி துறை கால்­வாயில் கட்­டு­மான பணி தடுத்து நிறுத்­தியது பேரூ­ராட்சி நிர்­வாகம்

Print PDF

தினமலர்            01.10.2013  

பொதுப்­பணி துறை கால்­வாயில் கட்­டு­மான பணி தடுத்து நிறுத்­தியது பேரூ­ராட்சி நிர்­வாகம்

பொதுப்­பணித் துறை கால்­வாயில் தனியார் மேற்­கொண்ட, கட்­டு­மானப் பணியை பேரூ­ராட்சி நிர்­வாகம் தடுத்து நிறுத்­தி­யது.

சென்னை புழ­லேரி மதகு பகு­தியில் இருந்து துவங்கும் பொதுப்­பணித் துறை உபரி நீர் வடி­கால்வாய் 8.3 கி.மீ., நீளம், 50 முதல் 70 மீட்டர் அகலம் கொண்­டது.

உபரி நீர்

இது வட­கரை, கிராண்ட்லைன், புழல் பாலாஜி நகர், வட­பெ­ரும்­பாக்கம், ஆ.முல்­லை­வாயல், சடை­யங்­குப்பம், மணலி வழி­யாக எண்ணூர் கடல் பகு­தியில் இணை­கி­றது.

பருவ மழைக்­கா­லத்தில், புழ­லேரி நிரம்பும் நிலையில் வெளி­யேற்­றப்­படும் உபரி நீர் மற்றும் மழை வெள்­ளநீர் இந்தக் கால்வாய் வழி­யாக எண்ணூர் கட­லுக்கு செல்லும்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக கால்வாய் ஆங்­காங்கே சிறிது சிறி­தாக தனி­யாரின் கட்­டுப்­பாட்டில் சென்று கட்­ட­டங்­களும் உரு­வாகி உள்­ளன.

இதனால் ஒரு சில பகு­தி­களில் கால்வாய் 20 மீ., அள­விற்கு சுருங்கி விட்­டது. மழைக்­கா­லத்தில் அந்தப் பகு­தி­களில் வெள்­ளநீர் கரை மீறி, குடி­யி­ருப்­பு­களில் புகுந்து பாதிப்பை ஏற்­ப­டுத்தி விடு­கி­றது. பொதுப்­பணித் துறையின் அலட்­சி­யம்தான், தனி­யாரின் ஆக்­கி­ர­மிப்பில் கால்வாய் சிக்­கு­வ­தற்கு காரணம் என, பகு­தி­வா­சிகள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.

ஆவணங்கள்

சமீ­பத்தில், செங்­குன்றம் ஆடு அடிக்கும் கூடத்­திற்கு பின்­புறம், உள்ள பொதுப்­பணித் துறை கால்­வாயின் மையப்­ப­கு­தியில் கட்­டு­மான பணி நடந்­தது.

இது­பற்றி தகவல் அறிந்த நார­வா­ரிக்­குப்பம் பேரூ­ராட்சி தலைவர் ராஜேந்­திரன், துணைத்­த­லைவர் விப்­ர­நா­ரா­யணன் மற்றும் கவுன்­சி­லர்கள் சம்­பவ இடத்­திற்கு சென்­றனர்.

அங்கு நடந்த கட்­டு­மானப் பணியை தடுத்­தனர். அப்­போது அங்கு வந்த சிலர், இது தங்­க­ளுக்கு சொந்­த­மான இடம் என்றும், அதற்­கு­ரிய ஆவ­ணங்கள் இருப்­ப­தா­கவும் கூறி அவற்றைக் காட்­டினர்.

பணி நிறுத்தம்

ஆனால், இந்தப் பகுதி 50 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக நீர்­வ­ழித்­த­ட­மாக இருந்து வரு­கி­றது. திடீ­ரென ஆவ­ணத்தைக் காட்டி, கால்­வாயின் குறுக்கில் கட்­டடம் கட்­டு­வதை ஏற்றுக் கொள்ள முடி­யாது. மேலும், மழைக்­கா­லத்தில் புழ­லேரி நிரம்பி திறந்து விடப்­பட்டால் வெள்ளம் வடிந்து செல்ல வழி­யின்றி ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எனக் கூறி, கட்­டு­மானப் பணியை நிறுத்­தினர்.

இதுகுறித்து, நார­வா­ரிக்­குப்பம் பேரூ­ராட்சி தலைவர் ராஜேந்­திரன் கூறு­கையில்,பொதுப்­பணித் துறை அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்கை எடுத்து, கட்­டு­மானப் பணியை நிரந்­த­ர­மாக அகற்­றா­விட்டால், மழைக்­கா­லத்­திற்குப் பின் அங்கு பணி தொட­ரவும் வாய்ப்­புண்டு, என்றார்.

பொதுப்­பணித் துறை அதி­கா­ரி­க­ளிடம் இது­பற்றி கேட்ட போது, இது­கு­றித்து உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது. அவர்கள் உத்­த­ர­வின்­படி, நட­வ­டிக்கை எடுக்­கப்­படும், என்­றனர்.

 


Page 100 of 506