Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சென்­னையில் தங்கும் விடு­தி­க­ளுக்கு...உரிமம் பெற 30 நிபந்­த­னைகள்

Print PDF

தினமலர்            01.10.2013  

சென்­னையில் தங்கும் விடு­தி­க­ளுக்கு...உரிமம் பெற 30 நிபந்­த­னைகள்


சென்னை:சென்­னையில், இதுநாள் வரை, எந்த கண்­கா­ணிப்பும் இல்­லாமல், விருப்பம் போல் இயங்கி வந்த, தங்கும் விடு­தி­களை முறைப்­ப­டுத்த, மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது.சென்­னையின் பல்­வேறு பகு­தி­களில், 1,200 தங்கும் விடு­திகள் உள்­ளன. மேன்ஷன், விருந்­தினர் இல்லம், ஓய்வு விடுதி, சேவை விடுதி, பணி செய்யும் மகளிர் மற்றும் ஆடவர் தங்கும் விடுதி என, பல்­வேறு பெயர்­களில் இயங்கி வரும் இந்த விடு­திகள், தமிழ்­நாடு பொது சுகா­தார சட்டம் அல்­லது மாந­க­ராட்சி சட்­டப்­படி உரிமம் பெற வேண்­டி­யது கட்­டாயம்.ஆனால், தற்­போது சென்­னையில் இயங்கி வரும் தங்கும் விடு­தி­களில், சில மட்­டுமே, அந்த சட்­டத்தின் கீழ் உரிமம் பெற்­றுள்­ளன.

சென்னை மாந­க­ராட்சி மூலம், இது­வரை தங்கும் விடு­தி­க­ளுக்கு உரிமம் வழங்­கப்­ப­ட­வில்லை. தற்­போது, அவற்­றுக்கு உரிமம் வழங்கும் நடை­மு­றையை கட்­டாயம் செயல்­ப­டுத்த வேண்டும் என, அந்­தந்த மண்­டல அலு­வ­லர்­க­ளுக்கு மாந­க­ராட்சி சுற்­ற­றிக்கை அனுப்பி உள்­ளது. அதில், 30 வகை­யான நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்டு உள்­ளன.

என்­னென்ன நிபந்­த­னைகள்?

விடுதி அமைந்­துள்ள சூழல், குப்பை, கழி­வுநீர், குடிநீர் போன்ற விஷ­யங்­களை கையாளும் முறை குறித்து, விண்­ணப்­பத்தில் தெரி­யப்­ப­டுத்த வேண்டும்.விடு­தியின் முழு உட்­புற தோற்றம், வரை­படம் சமர்ப்­பிக்க வேண்டும் விடுதி கட்­டு­மா­னத்­திற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட பொருட்கள் பற்­றிய பட்­டியல் இணைக்­கப்­பட வேண்டும்.அறையின் அளவில், 10 சத­வீதம் காற்று வச­திக்­காக ஒதுக்­கப்­பட வேண்டும். ஒரு நபர் தங்கும் அறை, 40 சதுர அடி இருக்க வேண்டும். விடுதி கட்­டடம் முழு­வ­துக்கும் ஒவ்­வொரு ஆண்டும் வண்ணம் பூச வேண்டும்.கொசு உற்­பத்தி இல்­லாமல் தண்ணீர் தொட்­டி­களை பரா­ம­ரிக்க வேண்டும்.

ஆண், பெண்­க­ளுக்கு தனித்­த­னி­யாக கழிப்­ப­றைகள் இருக்க வேண்டும். அவை சுத்­த­மாக பரா­ம­ரிக்­கப்­பட வேண்டும்.

தீ தடுப்பு சாத­னங்கள் பொருத்­தப்­பட வேண்டும். தீய­ணைப்பு வாக­னங்கள் வர, வழி இருக்க வேண்டும். தீய­ணைப்பு துறை உரிமம் பெற வேண்டும்.

மின் துாக்கி இருந்தால், அதற்கு முறை­யான உரிமம் பெற்­றி­ருக்க வேண்டும்.தரைத் தளத்தில் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் வந்து செல்லும் வகையில் சறுக்கு பாதை வசதி செய்­தி­ருக்க வேண்டும்.வாகன நிறுத்­து­மிட வசதி இருக்க வேண்டும்.அரசு அறி­வு­றுத்­தலின் படி கண்­கா­ணிப்பு கேமரா பொருத்­தப்­பட வேண்டும்.

மாந­கர காவல் துறை ஆணையர், போக்­கு­வ­ரத்து காவல்­து­றை­யிடம் தடை­யில்லா சான்று பெற்­றி­ருக்க வேண்டும்.இவ்­வாறு நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்டு உள்­ளன.

விடு­தி­களின் கதி என்ன?

உரிம கட்­டணம் எவ்­வ­ளவு என, சுற்­ற­றிக்­கையில் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. தமிழ்­நாடு பொது சுகா­தார சட்டம் 101ன்படி உரிமம் பெற்று இருந்தால், அந்த விடு­திகள் மாந­க­ராட்சி உரிமம் பெற வேண்­டிய அவ­சியம் இல்லை. மாந­க­ராட்சி விதித்­துள்ள நிபந்­த­னை­க­ளின்­படி பார்த்தால், தற்­போது இயங்கி வரும் விடு­தி­களில் ஒரு சில மட்­டுமே உரிமம் பெற தகு­தி­யா­னவை. பெரும்­பா­லான விடு­திகள் நிபந்­த­னை­க­ளுக்கு மாறா­கவே உள்­ளன. குறிப்­பாக, பல விடு­தி­களில் சுகா­தாரம் இல்லை. இதனால் இது­போன்ற விடு­திகள் இழுத்து மூடப்­ப­டுமா அல்­லது வருவாய் கிடைத்த வரை போதும் என, கேட்­ப­வர்­க­ளுக்கு மட்டும் உரிமம் வழங்­கப்­ப­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

உரிமம் யாருக்கு?

இது­கு­றித்து மாந­க­ராட்சி அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:தங்கும் விடு­தி­க­ளுக்கு உரிமம் வழங்கும் விஷ­யத்தில் தெளி­வான உத்­த­ரவு எதுவும் இது­வரை கிடைக்­க­வில்லை. முதல்­கட்­ட­மாக சுற்­ற­றிக்கை மட்­டுமே அனுப்பி உள்­ளனர்.கட்­டண விவ­ரங்கள் இனி தான் தெரி­ய­வரும். முதலில் அறி­விப்பு வெளி­யி­டப்­படும். அதன் பேரில் விண்­ணப்­பிக்கும் விடு­தி­க­ளுக்கு ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் உரிமம் வழங்­கப்­படும்.உரிமம் பெறாத விடு­திகள் பின்னர் கணக்­கெ­டுக்­கப்­பட்டு, அவற்றை முறைப்­ப­டுத்­தவோ, இழுத்து மூடவோ நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.இவ்­வாறு அந்த அதி­காரி கூறினார்.

ஏன் இந்த குழப்பம்?

தங்கும் விடு­தி­க­ளுக்­கான உரிமம் வழங்­கு­வதில் வருவாய், சுகா­தார துறை இடையே குழப்பம் நில­வு­கி­றது. பொது­வாக சுகா­தாரம் சம்­பந்­தப்­பட்ட உண­வகம், தங்கும் விடு­திகள் போன்­ற­வை­க­ளுக்கு மாந­க­ராட்சி சுகா­தார துறை மூல­மாக உரிமம் வழங்க வேண்டும் என்­பது விதி. ஆனால், தற்­போது வருவாய் துறை உரிமம் வழங்­கு­கி­றது.

இது­கு­றித்து, கடந்த ஆண்டு கமி­ஷ­ன­ராக இருந்த கார்த்­தி­கேயன், தங்கும் விடு­தி­க­ளுக்கு சுகா­தார துறை உரிமம் வழங்க பரிந்­து­ரைத்தார்.

ஆனால், தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள சுற்­ற­றிக்­கையில், 2007ம் ஆண்டு பணியில் இருந்த கமி­ஷ­னரின் செயல்­முறை ஆணை என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனால் தற்­போ­தைய உரிமம் வழங்­கு­வ­தற்­கான பரிந்­து­ரையை வருவாய், சுகா­தார துறையில் யார் செய்வர் என்­பதில் குழப்பம் நில­வு­கி­றது.

 

புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க... மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

Print PDF

தினமலர்            01.10.2013  

புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க... மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை


திருப்பூர் :திருப்பூர் மாநகராட்சி 39வது வார்டு பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில், முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்ணய கட்டணத்தை விட, மிக அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளதால், பொதுமக்கள், இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என உதவி கமிஷனர் கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 7,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சியாக தரம் உயர்த்தியபிறகு, புதிய இணைப்பு வழங்க விண்ணப்பம் பெறப்பட்டது. இதுவரை 3,700 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன; 2,500 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 570 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

குடிநீர் இணைப்பு பெற, விண்ணப்ப கட்டணம் 25 ரூபாய், வீட்டு இணைப்புக்கு 5,000 ரூபாய், தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செலுத்த வேண்டும். அதன்பின், 15.5 சதவீதம் அளவுக்கு "சென்டேஜ்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மண் ரோடு, கான்கிரீட் ரோடு மற்றும் தார் ரோடு என மூன்று வகை யாக "சென்டேஜ்'கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மண் சாலைக்கு குறைந்தபட்சம் ஏழு மீட்டருக்கு 850 ரூபாய், 15 மீட்டருக்கு 917 ரூபாய், 22 மீட்டருக்கு 1,088 ரூபாய், அதிகபட்சமாக 90 மீட்டருக்கு 2,257 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

சிமென்ட் தளமாக இருந்தால், ஏழு மீட்டருக்கு 2,092 ரூபாய், 15 மீட்டருக்கு 3,264, அதிகபட்சம் 90 மீட்டருக்கு 14 ஆயிரத்து 344 ரூபாய், தார் ரோடாக இருந்தால், ஏழு மீட்டருக்கு 2,894 ரூபாய், 15 மீட்டருக்கு 4,742 ரூபாய், அதிகபட்சம் 90 மீட்டருக்கு 22 ஆயிரத்து 159 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. "சென்டேஜ்' கட்டணம் செலுத் தியதும், "ஒர்க் ஆர்டர்' வழங்கப்படுகிறது.

மாநகராட்சி 39வது வார்டு, ஜெய் நகர் மற்றும் வள்ளியம்மை நகர் பகுதி மக்கள் கூறுகையில், "வீடு கட்டி 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. எப்படியாவது இணைப்பு பெற மக்கள் தயாராக இருக்கின்றனர். இதை பயன்படுத்தி, கவுன்சிலர் கூறியதாக தெரிவித்து, சில பிளம்பர்கள் நாங்கள்தான் இணைப்பு கொடுப்போம் என்று கட்டாயப்படுத்துகின்றனர். பணம் செலுத்துவது முதல் குழாய் பதித்து, இணைப்பு கொடுக்கும் வரை நாங்கள் செய்கிறோம் என்று கூறி, ஒரு வீட்டுக்கு 14 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ஆனால், குறைவான தொகைக்குத்தான் பில் கொடுக்கின்றனர். குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடக்கிறது,' என்றனர்.

மாநகராட்சி உதவி கமிஷனர் கண்ணனிடம் கேட்டபோது,""குடிநீர் இணைப்பு பெற வேண்டுமெனில், இடைத்தரகர்களை அணுக வேண்டாம். மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், நிர்ணய கட்டணம் மற்றும் "சென்டேஜ்' கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும். "ஒர்க் ஆர்டர்' பெற்றுக்கொண்டு, அதிகாரிகள் முன்னிலையில், பிளம்பர் நியமித்து, சொந்த செலவில் குடிநீர் குழாய் பதித்து இணைப்பு கொடுக்கலாம்,'' என்றார்.

சில பிளம்பர்கள் நாங்கள்தான் இணைப்பு கொடுப்போம் என்று கட்டாயப்படுத்துகின்றனர். ஒரு வீட்டுக்கு 14 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ஆனால், குறைவான தொகைக்குத்தான் பில் கொடுக்கின்றனர். குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடக்கிறது

 

"சேலத்தில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட190 கட்டடங்களுக்கு நோட்டீஸ்'

Print PDF

தினமணி             27.09.2013

"சேலத்தில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட190 கட்டடங்களுக்கு நோட்டீஸ்'

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட 190 கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.மகரபூஷணம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சேலம் மாநகரில் புதியதாக வணிகக் கட்டடங்கள் கட்ட மாநகராட்சியிடம் தரைத் தளம், முதல் தளத்திற்கு மட்டும் அனுமதி பெற்று விட்டு 3, 4 மாடி கட்டுகின்றனர்.  வாகனங்கள் நிறுத்த இடம் இருப்பதில்லை. மேலும், குடியிருப்பு பகுதிகளில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கு தடை விதிக்கப்படுமா என்று சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் கேட்டதற்கு,  190 கட்டடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டதாகவும், அனுமதிக்கு மாறுதலான வணிகக் கட்டடங்கள் குறித்த முதல்கட்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்படி கட்டட உரிமையாளர்களுக்கு 30 நாள்கள் அவகாச நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

இதில், குரங்குச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல், மண் கொட்டியும், லாரிகளை இணைப்புச் சாலையில் வரிசையாக நிறுத்திக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்திருப்பதால், பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளதாக, சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் கேட்டதற்கு, தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குநர் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

இதே போல, அழகாபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள பல்பொருள் அங்காடி அருகிலும், ராஜரத்தினம் பூங்காவிலும், அழகாபுரம் திரெüபதி அம்மன் கோயில் அருகிலும், டி.வி.எஸ் எதிர் சாலையில் உள்ள மயானம் அருகிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஆய்வு செய்து, போக்குவரத்து உதவி ஆணையாளர் அறிக்கை அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

சேலம் மாநகரில் உள்ள ஷேர் ஆட்டோக்களில் கூடுதலாகப் பயணிகளை ஏற்றிக் செல்வதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக உறுப்பினர் கேட்டதற்கு,  இதுகுறித்து நடப்பாண்டில் 3,964 வழக்குகள் பதிவு செய்து, உடனடி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல் உதவி ஆணையர் தெரிவித்தார்.

கூட்டத்தில், மாநகரக் காவல் துணை ஆணையர் ஏ.ஜி.பாபு, மாவட்டக் கண்காணிப்பாளர் சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வராஜ் மற்றும் சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 101 of 506