Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் கேபிள் பதிக்க எதிர்ப்பு

Print PDF

தினமணி             27.09.2013

நகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் கேபிள் பதிக்க எதிர்ப்பு

விருதுநகர் நகராட்சி பகுதியில் தனியார் தொலைபேசி நிறுவனத்தின் கேபிள் பதிக்கும் அனுமதிக்கு நகராட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

   விருதுநகர் நகராட்சி கூட்டம் புதன்கிழமை தலைவர் மா.சாந்தி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மணி மற்றும் துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: 31ஆவது வார்டு பகுதியில் சுகாதார வளாகத்தை சீரமைக்கவில்லை. இதனால், கொசு உற்பத்தி அதிகமாகி மக்கள் அவதிப்படுகிறார்கள். 

    பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாகவே உள்ளன. இதனால் இப்பகுதியில் செல்லும் மாணவர்கள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர்.

 விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ளது. இதனால் வாகன நெருக்கடி ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே சாலையை அகலப்படுத்த வேண்டும். அதேபோல், சாலை மத்தியில்  மின் கம்பங்கள் உள்ளன. அதை சாலையோரத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.   தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தால் எரிவாயு மயானம் பராமரிக்கப்படுகிறது. அதனால், இங்கு எரிக்கப்படும் சடலங்களின் விவரங்களை பதிவு செய்வதற்கு பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். நகராட்சியில் தீர்மானம் வைக்கும் போது ஒப்பந்தம் விடும் இனங்கள் குறித்து எண்ணங்கள் அடிப்படையில் விவரமாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

      தனியார் தொலைபேசி நிறுவனத்தினர் சாலைகளில் கேபிள் பதிக்க நகராட்சியின் அனுமதிக்கு வைத்திருந்தனர். இதற்கு, அனைத்து உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி சாலைகள் கடந்த 15 ஆண்டுகளாகவே குண்டும் குழியுமாக உள்ளன. அதையடுத்து, பாதாளச் சாக்கடை பணிகளால் முழுவதும் தோண்டப்பட்டு சரிசெய்யப்படாமல் உள்ளன.   இந்நிலையில் சாலையைத் தோண்டி கேபிள் பதித்தால் மறுபடியும் குண்டும் குழியுமாக மாறும். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். நகராட்சிக்கு ரூ.2 லட்சத்தை செலுத்தி விட்டு, ரூ.2 கோடி செலவு வைக்கும் கேபிள் பதிக்கும் திட்டத்துக்கு நகராட்சி அனுமதி அளிக்கக் கூடாது என உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

   தலைவர் மா.சாந்தி பதிலளித்து பேசுகையில், 31ஆவது வார்டு பகுதியில் சுகாதார வளாகத்தை சீரமைக்க ஒப்பந்த பணிகள் விடப்பட்டுள்ளன.

  பாதாளச் சாக்கடை பணிகள் முடிந்துள்ளன. சாலைகளில் சீரமைப்பு பணிகள் இந்த வாரத்தில் தொடங்கி நடைபெற இருக்கிறது. விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சாலைப் பகுதிகளில்  இடையூராக இருக்கும் மின்கம்பங்கள் அனைத்தும் ஓரப்பகுதியில் வைக்கப்படும்.

    இயற்கை எரிவாயு மயானம் தனியார் அமைப்பின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளது.

  அதனால், அங்கு ஒவ்வொரு நாளும் எரிக்கப்படும் சடலங்கள் விவரம் அனைத்தும் பதிவேடுகளில் பராமரித்து வரப்படும். அதன் அடிப்படையிலேயே இறப்பு சான்றிதழும் வழங்கப்படும். தனியார் தொலைபேசி நிர்வாகத்தினர் கேபிள் பதிக்க அனுமதி கேட்டிருந்தனர். அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லை என்பதால் தீர்மானம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

மாநகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் இடிப்பு

Print PDF

தினமணி             27.09.2013

மாநகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் இடிப்பு

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட இடத்தை ஆக்கிரமித்து தனிநபர் கட்டிய கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்தனர். 

   மதுரை வடக்கு ஆவணி மூல வீதி பழைய சென்டிரல் மார்க்கெட் வடமேற்கு பகுதியில் பி.எஸ். கணேசன் என்பவர் ஆக்கிரமித்து தகர கூரையுடன் கூடிய 5 கடைகளை நிறுவி, அதனை ரூ. 10 ஆயிரம் வீதம் வாடகைக்கு விட்டு இருந்தாராம்.

   இந்த இடம் அவரின் குழந்தைகள் பெயரில், போலி ஆவணங்கள் மூலம் கட்டட அனுமதி பெற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மே 10-ஆம் தேதி வழங்கப்பட்ட இந்த அனுமதியை ஆணையர் ஆர். நந்தகோபால் ரத்து செய்தார்.

   இதைத் தொடர்ந்து ஆணையர் உத்தரவின்பேரில் மாநகராடசி முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி ஆணையர் தேவதாஸ் உள்ளிட்ட அலுவலர்கள் மேற்பார்வையில் அந்தக் கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

   மேலும் ஆணையர் உத்தரவின் பேரில் பி.எஸ். கணேசன் மீது நில அபகரிப்பு வழக்குப் பதியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: மேலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மேலமாசி வீதி, மேலமாரட் வீதி, டவுன்ஹால் ரோடு, வளையக்காரத் தெரு, மேலகோபுரத்தெரு, வடக்கு ஆவணி மூலவீதி ஆகிய இடங்களில் நடைபாதையில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்த கடைகளும் அகற்றப்பட்டன.

 

அண்ணா நகரில் தொடர் சோதனை: சுகாதாரமற்ற இறைச்சி, உணவுகள் பறிமுதல்

Print PDF

தினமணி             27.09.2013

அண்ணா நகரில் தொடர் சோதனை: சுகாதாரமற்ற இறைச்சி, உணவுகள் பறிமுதல்

அண்ணாநகர் மண்டலத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட தொடர் சோதனையில் தரமற்ற இறைச்சி, உணவுப் பொருள்கள், புகையிலை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி: சென்னை அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள அண்ணா நகர், செனாய் நகர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், அயனாவரம், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில், செனாய் நகரில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் 100 கிலோ சுகாதாரமற்ற இறைச்சி, சாந்தி காலனியில் சுகாதாரமற்ற குளிர்பானங்கள் 20, தண்ணீர் கேன்கள் 8, 25 கிலோ உணவுப் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டன.

இதேபோல, 8-ஆவது பிரதான சாலையில் 10 கிலோ பான்மசாலா, புகையிலை பொருள்கள், எம்.ஜி.ஆர். காலனியில் 2 டன் டயர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

சாந்தி காலனியில் குப்பைத்தொட்டி இல்லாத 9 கடைகளுக்கு ரூ. 500 வீதம் ரூ. 4,500 அபராதம் விதிக்கப்பட்டது. அதே பகுதியில் கொசு முட்டைகள் வளரும் வகையில் சுகாதாரமற்ற முறையில்

கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கட்டடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 102 of 506