Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நவம்‌பருக்குள் ரிப்பன் மாளிகை புதுப்பிக்கும் பணிகள்: கூடுதல் ஸ்தபதிகளை பணியமர்த்த மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர்           19.09.2013

நவம்‌பருக்குள் ரிப்பன் மாளிகை புதுப்பிக்கும் பணிகள்: கூடுதல் ஸ்தபதிகளை பணியமர்த்த மாநகராட்சி முடிவு

சென்னை:ரிப்பன் மாளிகை புதுப்­பிக்கும் பணிகள் துவங்கி, ஐந்து ஆண்­டுகள் ஆகியும், இன்னும் பணிகள் முழு­மை­யாக முடி­ய­வில்லை. நுாற்­றாண்டு விழா­விற்கு இரண்டு மாதங்­களே உள்ள நிலையில், மாளி­கையின் வெளிப்­பு­றத்தில் மட்­டு­மா­வது பணி­களை முடிக்க மாந­க­ராட்சி முடிவு செய்து, கூடுதல் ஸ்தப­தி­களை பணி­ய­மர்த்த உத்­த­ர­விட்டுள்­ளது.

சென்னை மாந­க­ராட்சி தலைமை அலு­வ­ல­க­மான ரிப்பன் மாளிகை, 1913ம் ஆண்டு கட்­டப்­பட்­டது. இந்த மாளி­கை­யின் நுாற்­றாண்டு விழா, வரும் நவம்பர் 26ம் தேதி கொண்­டா­டப்­பட உள்­ளது.

விழா­வை­யொட்டி, பாரம்­ப­ரிய கட்­ட­ட­மான ரிப்பன் மாளி­கையை பழமை மாறாமல் புதுப்­பிக்க மாந­க­ராட்சி முடிவு செய்­தது. இதற்­கான பணிகள், 2009ம் ஆண்டு துவங்கப்­பட்டன.

50 சத­வீதம்

இது­வரை, 9.55 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டாம் தளம், முதல் தளம், தரை­த­ளத்தில், 50 சத­வீத உள்­வே­லைகள், மேற்கு, தெற்கு பகு­தி­களில், 50 சத­வீதம் வெளி­பூச்சு வேலைகள், பூ வேலைகள், மொட்டை மாடியில் தண்ணீர் கசிவு சரி­செய்தல், ஓடு பதித்தல் ஆகிய பணிகள் முடிந்­துள்­ளன.

மொத்த பணி­களில், 50 சத­வீதம் மட்­டுமே நிறை­வ­டைந்த நிலையில், மற்ற பணிகள், பல்­வேறு கார­ணங்­களால் கிடப்பில் போடப்­பட்­டன.

மீத­முள்ள பணி­களை முடிக்க, 5.8 கோடி ரூபாய்க்கு புதிய மதிப்­பீடு தயா­ரிக்­கப்­பட்டு, கடந்த பிப்­ர­வரி, 27ம் தேதி இதற்­கான பணி ஆணை வழங்­கப்­பட்­டது. அதன் பிறகே பணிகள் மீண்டும் வேகம் பிடித்­தன. இருப்­பினும் திட்­ட­மிட்­ட­படி பணி­களை முழு­மை­யாக முடிக்க முடி­ய­வில்லை.

இன்னும் மாளி­கைக்கு அழகு சேர்க்கும் முன் பகு­தியின் கோபுரம் பூச்சு வேலை, வெளிப்­புறம் ஒரு பக்கம் முழு­வதும் பூச்சு வேலை, மாளி­கையின் பின்­ ப­குதி பூச்சு வேலைகள், உட்­பு­றத்தில், 50 சத­வீதம் பணிகள் என, ஏரா­ள­மான பணிகள் பாக்கி உள்­ளன.

விழா­விற்கு இன்னும் இரண்டு மாதங்­களே உள்ள நிலையில், ரிப்பன் மாளிகை புதுப்­பிக்கும் பணிகள் அதற்கு முன் முழு­மை­யாக முடிய வாய்ப்பு இல்லை என்­பதால், மாளி­கையின் வெளிப்­பு­றத்தில் மட்டும் பணி­களை முடித்து, விழா கொண்­டாட மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது.

இதற்­காக கூடுதல் ஸ்தப­தி­களை பணியில் ஈடு­ப­டுத்த ஒப்பந்­த­தா­ர­ருக்கு, மாந­க­ராட்சி உத்­த­ர­விட்டு உள்ளது.
கூடு­த­லாக 12 பேர்

இது குறித்து மாந­க­ராட்சி அதிகாரி ஒருவர் கூறி­ய­தா­வது:

ரிப்பன் மாளி­கையில் தற்­போது அலு­வ­ல­கங்கள் இயங்கி வரு­வதால், முழு­வீச்சில் பணி­களை செய்ய முடி­ய­வில்லை. இது தான் தாம­தத்­திற்கு காரணம். புதிய இணைப்பு கட்­டடம் நவம்பர் மாதம் பயன்­பாட்­டிற்கு வரும். இந்த கட்­ட­டத்­திற்கு அனைத்து அலு­வ­ல­கங்­களும் மாறும். அப்­போது தான் உட்­பு­றத்தில் பணி­களை முடிக்க முடியும்.

ஆனால், நவம்பர் மாதம் நுாற்­றாண்டு விழா கொண்­டாட இருப்­பதால், வெளிப்­பு­றத்தில் பணி­களை முடிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இதற்­காக, தற்­போது, 52 ஸ்தப­திகள் மாளி­கையை புதுப்­பிக்கும் பணியில் ஈடு­பட்டு வரும் நிலையில், இன்னும், 12 பேர் கூடு­த­லாக ஓரிரு தினங்­களில் பணியில் ஈடு­ப­டுத்­தப்­ப­டுவர். வெளிப்­பு­றத்தில் வெள்ளை நிறம் பூச, தற்­போது மாதிரி தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளது. இதை தொல்­லியல் துறை நிபு­ணர்கள், அண்ணா பல்­கலைக் கழக பேரா­சி­ரியர் உட்­பட தொழில்­நுட்ப குழு­வினர் ஒப்­புதல் அளித்த பிறகு வெள்ளை வண்ணம் பூசும் பணிகள் துவங்­கப்­படும். இதற்கு மட்­டுமே ஒரு மாதம் ஆகும். இவ்­வாறு அந்த அதி­காரி கூறினார்.

 

ரூ43 கோடியில் திட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேரடியாக குடிநீர் வினியோகம் அதிகாரிகள் ஆய்வு

Print PDF
தினகரன்             19.09.2013

ரூ43 கோடியில் திட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேரடியாக குடிநீர் வினியோகம் அதிகாரிகள் ஆய்வு


தாம்பரம், : ரூ43 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேரடியாக பம்மல் நகராட்சிக்கு குடிநீர் வினியோக திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பம்மல் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் தோல் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு தினமும் வேலைக்கு வந்து செல்கின்றனர். பம்மல் நகராட்சி சார்பில், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் குடிநீர் பெற்று வாரத்துக்கு ஒருமுறை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்களின் 50 சதவீத தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உலக வங்கி நிதி திட்டத்தின் கீழ் ரூ43 கோடி மதிப்பில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேரடியாக பம்மல் நகராட்சிக்கு குடிநீர் வினியோக திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு அதிகாரிகள் நேற்று குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமையவுள்ள இடங்களை ஆய்வு செய்தனர்.

அதில் சங்கர்நகர் 1வது வார்டு 13 லட்சம் லிட்டர் கொள்ளளவு, 8வது வார்டு இந்துஸ்தான் லீவர் காலனி 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு, 17வது வார்டு கலாதரன் தெருவில் 13 லட்சம் லிட்டர் கொள்ளளவு, 20வது வார்டு வீராசாமி தெருவில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கட்டுவதற்கு  தேர்வு செய்த இடங்களை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், நாள் ஒன்றுக்கு 100 லட்சம் லிட்டர் குடிநீரை சேமித்து, தினமும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்றனர்.
 

சென்னை மாநகராட்சியில் போலி சான்றிதழ்: ஆசிரியர்கள் 9 பேர் விரைவில் பணி நீக்கம்

Print PDF

மாலை மலர்          19.09.2013

சென்னை மாநகராட்சியில் போலி சான்றிதழ்: ஆசிரியர்கள் 9 பேர் விரைவில் பணி நீக்கம்
சென்னை மாநகராட்சியில் போலி சான்றிதழ்: ஆசிரியர்கள் 9 பேர் விரைவில் பணி நீக்கம்

சென்னை மாநகராட்சி பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பலர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த தகவல் சமீபத்தில் வெளியானது. இது குறித்து மாநகராட்சி கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதல் கட்டமாக 76 ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யபட்டன. அவற்றில் 9 பேரின் சான்றிதழ்கள் போலி என உறுதியாகி உள்ளது.

இவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ் முதல் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் வரை பல்வேறு போலி சான்றிதழ் வழங்கியுள்ளனர். 5 ஆசிரியர்கள் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. மறு தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெறாமல் தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

பிளஸ்–2 தேர்வில் 4 பேர் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் வழங்கியுள்ளனர். 6 ஆசிரியர்கள் ஆசிரியர் பட்டய பயிற்சி பெற்றதாக போலி சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி போலீஸ் மூலம் கைது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. 9 ஆசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து ஓரிரு நாட்களில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையில் அவர்களை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

 


Page 108 of 506