Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அவகாசம் வழங்கிய மழைநீர் வடிகால்வாய் பணிகள் துவக்கம் பாதுகாப்பு தடுப்பு வைக்க அறிவுறுத்தல்

Print PDF
தினமலர்               05.09.2013

அவகாசம் வழங்கிய மழைநீர் வடிகால்வாய் பணிகள் துவக்கம் பாதுகாப்பு தடுப்பு வைக்க அறிவுறுத்தல்


சென்னை:கிடப்பில் போடப்­பட்டு, மாந­க­ராட்­சியால் கூடுதல் கால அவ­காசம் வழங்­கப்­பட்ட மழைநீர் வடி­கால்வாய் பணிகள் தற்­போது மீண்டும் துவங்­கப்­பட்­டுள்­ளன. வரும் நவம்பர் மாதத்­திற்குள், அதி­க­பட்ச பணி­களை முடிக்க ஒப்­பந்­த­தா­ரர்­களுக்கு மாந­க­ராட்சி அறி­வு­றுத்தி உள்­ளது.

இறுதி கெடு


சென்­னையில் வெள்ள பாதிப்பை தடுக்க ஜவ­ஹர்லால் நேரு தேசிய நகர்ப்­புற புன­ர­மைப்பு திட்­டத்தின் கீழ் மழைநீர் வடி­கால்வாய் பணிகள் 2010ம் ஆண்டு துவங்­கப்­பட்­டன.

ஒரு சில இடங்­களில் மட்­டுமே பணிகள் முடிந்­தன.பல ஒப்­பந்­த­தா­ரர்கள் பணி­களை முழு­மை­யாக முடிக்­காமல், அரை­ கு­றையாய் நிறுத்தி வைத்­து உள்­ளனர்.

மாந­க­ராட்சி பல­முறை எச்­ச­ரிக்கை விடுத்தும் பணி­களை துவங்­காத அந்த ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்கு, கறுப்பு பட்­டியல் எச்­ச­ரிக்கை கொடுத்து, இறு­தி­யாக மீண்டும் ஒரு­முறை கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது.

அதன்­படி பணிகள் செய்ய வேண்­டிய சத­வீ­தத்­திற்கு ஏற்ப மூன்று மாதம் முதல் ஒன்­பது மாதம் வரை கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மாந­க­ராட்­சியால் அவ­காசம் வழங்­கப்­பட்ட பணிகள் தற்­போது மீண்டும் துவங்­கப்­பட்­டு உள்­ளன. தடுப்பு தேவை இது குறித்து மாந­க­ராட்சி அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

ஓட்­டேரி நல்லா, அடை­யாறு நீர்­ப்பி­டிப்பு, கூவம் நீர்­ப்பி­டிப்பு, விரு­கம்­பாக்கம் அரும்­பாக்கம் கால்‌வாய், மாம்­பலம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், பக்கிங் ஹாம் கால்வாய் என, பர­வ­லாக மழைநீர் வடி­கால்வாய் பணிகள் கிடப்பில் உள்­ளன.

கடந்த ஜூலை மாத கூட்­டத்தில் இந்த கால்வாய் பணி­க­ளுக்கு இறு­தி­யாக ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்கு ஒரு வாய்ப்பு வழங்க கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. அதன்­படி அவ­காசம் வழங்­கப்­பட்ட பணி­களில் 90 சத­வீதம் இடங்­களில் பணிகள் துவங்­கப்­பட்­டு உள்­ளன.

இதில், 50 சத­வீத பணிகள் நவம்‌பர் மாத இறு­திக்குள் முடியும். மற்ற பணி­களை நவம்பர் இறு­திக்குள் அதி­க­பட்­ச­ மாக முடிக்க ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப் ­பட்­டுள்­ளது. வட­கிழக்கு பரு­வ­மழை தீவி­ர­மடைந்தால் பணி­களை மேற்­கொள்ள முடி­யாது.

இதற்­கி­டையே சென்­னையில் எந்த இடத்தில் மழைநீர் வடி­கால்வாய் பணிகள் செய்­தாலும், அது வெளியே தெரி­யாத வகையில் பாது­காப்பு தடுப்பு ஏற்­ப­டுத்தி செய்ய வேண்டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக பகு­தி­வா­ரி­யாக கண்­கா­ணிப்பும் மேற்­கொள்­ளப்­பட்­டு உள்­ளது.

காவல் துறை அனு­மதி கிடைக்­காமல் 10க்கும் மேற்­பட்ட இடங்­களில் பணிகள் துவங்­கப் ­படாமல் உள்­ளன. விடு­முறை நாட்­களில் பணி­களை செய்யும் வகையில் காவல் துறை அனு­மதி கோர திட்­ட­மி­டப்­பட்­டு உள்ளது. இவ்­வாறு அந்த அதி­காரி கூறினார்.
 

டிடிஏ செயல்பாட்டை மேம்படுத்த ஆய்வு

Print PDF

தினமணி             05.09.2013

டிடிஏ செயல்பாட்டை மேம்படுத்த ஆய்வு

தில்லி வளர்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்துள்ளார்.

டிடிஐ நிர்வாகத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் இதுகுறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேலும் கூறியதாவது:

60 ஆண்டுகளுக்கு முன்பு டிடிஏ உருவாக்கப்பட்டபோது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. பல்வேறு நில விவகாரங்களுக்கு டிடிஏ தீர்வு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், டிடிஏ செயல்பாட்டில் சில குறைபாடுகள் உள்ளன.

ஒவ்வொரு குடிமகனும் நாடு முழுவதும் சுதந்திரமாகச் சென்று வருவதற்கு உரிமையளிக்கப்பட்டுள்ளது போல, அனைவருக்கும் பிற வசதிகளை அளிப்பதும் அரசின் கடைமையாக உள்ளது.

 தில்லியின் நொய்டா, குர்கான் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதால் தில்லி மக்கள்தொகை ஒன்றரை கோடியாக உள்ளது.

டிடிஏ நிறுவனக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தலைநகரில் வீட்டு வசதி பற்றாக்குறை உள்பட பல்வேறு சவால்களை டிடிஏ திறம்பட எதிர்கொள்ளலாம் என்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

 

ஆக்கிரமிப்பு பகுதிகளில் மேயர் ஆய்வு

Print PDF

தினமணி             05.09.2013

ஆக்கிரமிப்பு பகுதிகளில் மேயர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி 14-வது வார்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து அப்பகுதியில் மேயர் பா.கார்த்தியாயினி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

ராதாகிருஷ்ணா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதால் இப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேறு பாதையில் செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஓம்சக்தி நகர் பகுதியில் கால்வாய் தூர்வாராமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் குறை கூறினர்.

பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றுவதாக மேயர் உறுதி அளித்தார். ஆணையர் ஜானகி ரவீந்திரன், பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் உடன் சென்றனர்.

 


Page 111 of 506