Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கோவையில் 60 வார்டுகளில் குடிநீர் கட்டணம் உயர்வு: அக்டோபர் முதல் அமல்

Print PDF

தினமலர்              30.08.2013

கோவையில் 60 வார்டுகளில் குடிநீர் கட்டணம் உயர்வு: அக்டோபர் முதல் அமல்

கோவை : கோவை மாநகராட்சியின் 60 வார்டுகளில், வரும் அக்., முதல் குடிநீர் கட்டணம் மற்றும் வைப்புத்தொகையை உயர்த்த, கவுன்சில் அனுமதி வழங்கியது. கோவை மாநகராட்சிக்கு பில்லூர்-1, பில்லூர் -2, சிறுவாணி, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம் மூலம் பில்லூர் -2 குடிநீர் திட்டம் செயல்படுத்தி, தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது.
 
அதேநேரத்தில், குடிநீர் கட்டணத்தையும், வைப்புத்தொகையையும் உயர்த்த, கடந்த 2009ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு காரணங்களால் குடிநீர் கட்டணம் உயர்வு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, தேவைக்கேற்ப குடிநீர் கிடைப்பதாலும், ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்ட நிபந்தனைகளின்படி குடிநீர் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சியில் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில், குடிநீர் கட்டண உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் குறித்து மேயர் விளக்கமளித்தபோது, ""மாநகராட்சியில் குடிநீர் கட்டணம், வைப்புத்தொகை உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பழைய மாநகராட்சி வார்டுகளில் 24 து 7 குடிநீர் திட்டத்திற்கு தீர்மானித்த போது, குடிநீர் கட்டணம் உயர்த்த வேண்டும், பொதுக்குழாய் இணைப்புகள் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் நிதியுதவி கிடைத்துள்ளது.

""அதனால், மாநகராட்சி 60 வார்டுகளில் மட்டும் குடிநீர் கட்டணம், வைப்பு தொகை உயர்த்தப்படுகிறது. கட்டண உயர்வு அக்., முதல் அமலாகும். தென்னிந்தியாவில் 24 து 7 குடிநீர் திட்டம் கோவை மாநகராட்சியில் முதலாவதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரம் செப்., 20ல் கிடைக்க உள்ளது. மாநகராட்சி இணைப்பு பகுதிகளிலும் குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும். இணைப்பு பகுதிகளில் குடிநீர் கட்டண உயர்வு இப்போதைக்கு இல்லை,'' என்றார்.

தி.மு.க., கவுன்சிலர் சாமி பேசுகையில், ""மாநகராட்சி பழைய வார்டுகளில் தினமும் குடிநீர் கிடைப்பதில்லை. சிங்காநல்லூரில் ஆறு நாளுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்கிறது. சிங்காநல்லூரில் 8 கோடி ரூபாயில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றி ஒன்றரை ஆண்டுகளாகியும் துவங்கவில்லை. குடிநீர் கட்டணம் உயர்த்தும் நிலையில், மக்களுக்கு திருப்திகரமாக குடிநீர் கிடைக்க உறுதி அளிக்க வேண்டும்'' என்றார்.

கட்டணம் எவ்வளவு

  • வீட்டு உபயோகத்திற்கான மாதத்துக்கு குறைந்தபட்ச குடிநீர் கட்டணம் (15000 லிட்டர் வரை) 100 ரூபாய்; வைப்புத்தொகை 5000 ரூபாய். அதன்பின், (ஒவ்வொரு ஆயிரம் லிட்டருக்கும்) 20 ஆயிரம் லி., வரை 6 ரூபாய்; அதற்குமேல் 1.5 லட்சம் லி., வரை 8 ரூபாய்; 1.5 லட்சம் லி.,க்கு மேல் 10 ரூபாய்.
  • வீட்டு உபயோகத்துக்கான மொத்த இணைப்புக்கு மாதத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 900 ரூபாய்; வைப்பு தொகை 10 ஆயிரம் ரூபாய். அதன்பின், (ஒவ்வொரு ஆயிரம் லி.,க்கும்) 7500 லி., வரை 5.25 ரூபாய்; 10 ஆயிரம் லி., வரை 6 ரூபாய்; 1.5 லட்சம் லி., வரை 8 ரூபாய்; 1.5 லட்சம் லி., க்கு மேல் 11 ரூபாய் கட்டணம்.
  • வீட்டு உபயோகம் அல்லாத இணைப்புக்கு ஒரு மாத குறைந்தபட்ச கட்டணம் 525 ரூபாய்; பொது நிறுவனங்களுக்கான மொத்த இணைப்புக்கு ஒரு மாத குறைந்தபட்ச கட்டணம் 1350 ரூபாய் . இவ்விரு வகை இணைப்புக்கும் (ஒவ்வொரு ஆயிரம் லி.,க்கும்) 7500 லி., வரை 10.50 ரூபாய்; 10 ஆயிரம் லி., வரை 13.50 ரூபாய்; 1.5 லட்சம் லி., வரை 18 ரூபாய்; 1.5 லட்சம் லி.,க்கு மேல் 22.50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

ஐந்து மண்­ட­லங்­களில் 540 பேருக்கு பாதிப்பு மலே­ரியா : சுகா­தார அலு­வ­லர்­க­ளுக்கு மேயர் எச்­ச­ரிக்கை

Print PDF

தினமலர்              30.08.2013

ஐந்து மண்­ட­லங்­களில் 540 பேருக்கு பாதிப்பு மலே­ரியா : சுகா­தார அலு­வ­லர்­க­ளுக்கு மேயர் எச்­ச­ரிக்கை

சென்னை : சென்னை மாந­க­ராட்சி பகு­தியில், ஐந்து மண்­ட­லங்­களில், இது­வரை 540 பேர் மலே­ரியா காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கொசுஉற்­பத்தி அதி­க­ரித்­ததே அதற்கு காரணம் என்ற நிலையில், சுகா­தார பணி­யா­ளர்கள் கூட்­டத்தை கூட்டி மேயர் இறுதி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

சென்னை மாந­க­ராட்­சியில் கடந்த ஆண்டு கொசு தொல்லை கார­ண­மாக ‘டெங்கு’ காய்ச்சல் ஏற்­ப­டுத்­திய பாதிப்பால், இந்த ஆண்டு முன்­கூட்­டியே விழிப்­புணர்வு பிர­சாரம், கொசு ஒழிப்பு நட­வடிக்­கைகள் என, மாந­க­ராட்சி பணியில் சுறு­சு­றுப்பு காட்­டி­யது.10 மண்­ட­லங்­களில்...மழைநீர் வடி­கால்வாய், நீர்­வ­ழித்­தடம், வீடுகள் தோறும் சென்று கொசு மருந்து தெளிக்க ஒப்­பந்த அடிப்­ப­டையில் மண்­டல வாரி­யாக பணி­யா­ளர்­களை நிய­மிக்கமாந­க­ராட்சி அனு­மதி வழங்­கி­யது.

அதன்­படி 80 வீடு­க­ளுக்கு ஒரு பணி­யாளர் என, நிய­மனம் செய்து கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடந்து வரு­வ­தாக மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர். ஆனால், கடந்த சில வாரங்­க­ளாகசென்­னையில் கொசு தொல்லை கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. இதன் கார­ண­மாக மலே­ரியா காய்ச்சல் வேக­மாக பரவி வரு­கிறது. மணலி உட்­பட சில மண்­ட­லங்­களை தவிர, 10க்கும் மேற்­பட்ட மண்­ட­லங்­களில் மலே­ரியா காய்ச்சல் பாதிப்பு பதி­வா­கி­யுள்­ளது.

இதில், கூவம், அடை­யாறு, பக்­கிங்ஹாம் போன்ற நீர்­வ­ழித்­த­டங்­களும், மழைநீர் வடி­கால்­வாய்­களும் அதி­க­மாக உள்ள ராய­புரம், தண்­டை­யார்­பேட்டை, தேனாம்­பேட்டை, கோடம்­பாக்கம், திரு.வி.க., நகர், அடை­யாறு மண்­ட­லங்­களில் காய்ச்சல் பாதிப்பு அதி­க­மாக உள்­ளது.

கடந்த ஒன்­றரை மாதத்தில் ராய­புரம் மண்­ட­லத்தில் 150 பேர், தேனாம்­பேட்­டையில் 130, அடை­யாறில் 80, கோடம்­பாக்­கத்தில் 70, திரு.வி.க., நகரில் 60, தண்­டை­யார்­பேட்­டையில் 50 பேர் என, விரி­வாக்க பகு­திகள் தவிர 540 பேர் மலே­ரி­யாவால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மலே­ரியா பரவி வரு­வதை தொடர்ந்து அந்­தந்த மண்­ட­லங்­களில் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகு­தி­களில் கொசு ஒழிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு தனி குழு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. காய்ச்சல் தொடர்ந்து பர­வாமல் தடுக்க கண்­கா­ணிப்பு நட­வடிக்­கை­களும் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன. இந்த நிலையில், கொசு மருந்து தெளிக்கும் பணி­களில் தில்­லு­முல்லு நடப்­ப­தாக எழுந்த புகாரை தொடர்ந்து மேயர் சைதை துரை­சாமி தலை­மையில் நேற்று முன்­தினம் மாலை ரிப்பன் மாளி­கையில் சுகா­தார பணி­யா­ளர்கள் கூட்டம் அவ­ச­ர­மாக கூட்­டப்­பட்­டது.

அதில், துணை கமி­ஷனர் (சுகா­தாரம்), சுகா­தார அதி­கா­ரிகள், துப்­பு­ரவு அலு­வ­லர்கள், சுகா­தார ஆய்­வா­ளர்கள் கலந்து கொண்­டனர்.

கண்­கா­ணிப்பு இல்லை

  • கொசு தொல்லை சம்­பந்­த­மாக ‘1913’ புகார் பிரி­விற்கு அதி­க­மாக புகார்கள் வந்­துள்­ளன.
  • புகார்கள் வந்த பகு­தி­களில் எந்த நட­வடிக்­கையும் எடுக்­காமல், கொசு மருந்து தெளிக்­கப்­பட்­ட­தாக தவ­றான தக­வலை ஊழி­யர்கள் பதிவு செய்­கின்­றனர்.
  • கொசு மருந்து தெளிப்­பது, புகை அடிப்­பது போன்ற பணி­களை துப்­பு­ரவு அலு­வ­லர்கள், சுகா­தார ஆய்­வா­ளர்கள் கண்­கா­ணிப்­ப­தில்லை.
  • தேவை­யான அளவில் ஒப்­பந்த பணி­யா­ளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் உள்­ள­னரா என்­ப­தையும் அதி­கா­ரிகள் கண்­கா­ணிப்­ப­தில்லை என்­பன உள்­ளிட்ட பல குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்து, அதி­கா­ரி­க­ளுக்கு மேயர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.


ஒழுங்கு நட­வ­டிக்கை


இது­கு­றித்து கூட்­டத்தில் அவர் பேசி­ய­தா­வது:

சுகா­தா­ரத்தின் தலை­ந­க­ராக சென்­னையை மாற்ற வேண்டும் என்­பதே அரசின் நோக்கம். ஆனால், இந்த விஷ­யத்தில் மாநக­ராட்சி அதி­கா­ரிகள், ஊழி­யர்கள் அலட்­சி­ய­மாக செயல்­ப­டு­வதை ஏற்று கொள்ள முடி­யாது.

தற்­போதே கொசு தொல்லை குறித்த புகார்கள் அதி­க­ரித்­துள்­ளன. கொசு மருந்து தெளிக்கும் பணி­களை கண்­கா­ணிக்க வேண்டும். மருந்து இருப்பு விவ­ரங்கள் உட­னுக்­குடன் தெரி­விக்­கப்­பட வேண்டும்.

உப­க­ர­ணங்கள், கூடுதல் பணி­யா­ளர்­களை போர்க்­கால அடிப்­ப­டையில் பூர்த்தி செய்ய வேண்டும். சுகா­தார விஷ­யத்தில் இந்த நிலை தொடர்ந்தால், பாதிப்பு உள்ள பகு­தி­களில் பணி­யாற்றும் அதி­கா­ரிகள் மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

இவ்­வாறு மேயர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

அதே­நேரம், கூட்டம் என்ற பெயரில் தங்­களை அதி­கா­ரிகள் அலைக்­க­ழிப்­ப­தாக, சுகா­தார பணி­யா­ளர்கள் குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. இது­கு­றித்து, அவர்கள் கூறி­ய­தா­வது:

தற்­போ­தைய மலே­ரியா பாதிப்பு கடந்த ஆண்­டு­களை ஒப்­பிடும் போது குறைவு தான். சுகா­தார நட­வ­டிக்­கைகள் தொடர்­பான கள ஆய்வு பணி­களில், சுகா­தார ஆய்­வா­ளர்­களும், துப்­பு­ரவு அலு­வ­லர்­களும் தான் ஈடு­ப­டு­கின்­றனர்.

ஆனால், கடந்த சில மாதங்­க­ளாக ஆய்வு கூட்­டங்­க­ளுக்கு சென்று வரத்தான் எங்­க­ளுக்கு நேரம் சரி­யாக உள்­ளது. முறைப்­படி எங்­களை வேலை வாங்க வேண்­டி­யது, அறி­வு­ரை­களை வழங்க வேண்­டி­யது மண்­டல சுகா­தார அதி­கா­ரிகள் தான்.

ஆனால், தின­சரி ரிப்பன் மாளி­கை­யிலும், வட்­டார இணை கமி­ஷ­னர்கள் அலு­வ­ல­கத்­திலும் சுகா­தாரம் சம்­பந்­த­மான ஆய்வு கூட்­டங்­க­ளுக்கு துப்­பு­ரவு அலு­வ­லர் ­க­ளையும், சுகா­தார ஆய்­வா­ளர்­க­ளையும் அழைக்­கின்­றனர்.

ஒரு ஆய்வு கூட்­டத்தில் பாதிநாள் கழிந்து விடு­கி­றது. வாரம் ஆறு கூட்­டங்­க­ளுக்கு குறை­யாமல் நடத்­து­கின்­றனர். நிலைமை இப்­படி இருக்க, கள ஆய்வு எப்­படி நடக்கும்? தகவல் பரி­மாற்­றத்­திற்கு வயர்லெஸ், அலை­பேசி, இ-−மெயில் என, எத்­தனை வச­திகள் இருந்­தாலும், அலு­வ­லர்­களை அலைய வைப்­பதில் தான் அதி­கா­ரிகள் குறி­யாக உள்­ளனர். இவ்­வாறு சுகா­தார பணி­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.

 

உடுமலையில் நச்சுத்தன்மை கொண்ட கழிவுநீர் தொட்டியை பாதுகாப்பாக சுத்தம் செய்வது எப்படி? நகராட்சி ஆணையாளர் அறிவுரை

Print PDF

தினத்தந்தி            29.08.2013

உடுமலையில் நச்சுத்தன்மை கொண்ட கழிவுநீர் தொட்டியை பாதுகாப்பாக சுத்தம் செய்வது எப்படி? நகராட்சி ஆணையாளர் அறிவுரை

உடுமலையில் நச்சுத் தன்மை கொண்ட கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வது எப்படி? என்று நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

ஆலோசனைக் கூட்டம்

உடுமலை நகராட்சியில் நச்சுத்தன்மை கொண்ட கழிவுநீர் தொட்டியை (செப்டிக் டேங்க்) சுத்தம் செய் யும் போது தனியார் கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

இதில் நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

பாதுகாப்பு உபகரணங்கள்

கழிவுநீர் வாகனம் எண், உரிமையாளர் மற்றும் பணியாளர்களின் பெயர், விலாசம் உள்ளிட்ட விவரங் களை நகராட்சியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மலக்கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது பணியாளர்கள் பாதுகாப்பு ஹெல்மெட், கம்பூட்ஸ் முகக்கவசம் போன்ற உபகரணங்கள் அணிந்து பணியாற்ற வேண்டும். மலக்கழிவு நீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்யக்கூடாது. மனிதரின் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது சட்டப்படி குற்றமாகும்.

எனவே கழிவுகளை எந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய் யும் போது அருகே வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்யும் பணியாளர்கள் நோயாளிகளாகவோ, முதியவர்க ளாகவோ இருக்கக் கூடாது.

ஆயுள் காப்பீடு அவசியம்

சுத்தம் செய்த பின்னர் கழிவுநீர் வாகனத்தில் கசிவு ஏற்படாமல் நன்றாக மூடி எடுத்துச் செல்ல வேண்டும். கழிவுகளை நகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே சேர்க்க வேண்டும். மலக்கழிவு நீர் எடுக்க செல்லும் இடத்தை முன்கூட்டியே நகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். கழிவுகளை சாக்கடை களிலோ, காலி இடங்களிலோ கொட்டக்கூடாது. கழிவுகளை அகற்றும் பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்திருக்க வேண்டும்.

சட்ட விரோத செயல்களோ அல்லது அசம்பாவிதமோ நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களே பொறுப்பு. வீடுகளில் கழிவுநீர் தொட்டியை தனியார் மூலம் சுத்தம் செய்யும் போது பாதுகாப்பு உபகரணங்களுடன் பணி செய்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் வீட்டு உரிமையாளர்கள் பொறுப்பாளர் ஆக்கப்படுவார்கள். கழிவு நீர் தொட்டியை பகல் நேரங்களில் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். இரவு நேரங்களில் பணி செய்தால் கழிவுநீர் வாகனம் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். கூட்டத்தில், சுகாதார ஆய்வாளர்கள் எம்.இளங்கோவன், பி.செல்வம், ஆர்.செல்வம், எம்.சிவக்குமார் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 117 of 506