Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கல்வி சான்றிதழ்கள் ஆய்வு

Print PDF

மாலை மலர்             13.08.2013

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கல்வி சான்றிதழ்கள் ஆய்வு
 
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 26 போலி ஆசிரியர்களா? கல்வி சான்றிதழ்கள் ஆய்வு

சென்னை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் 32 மேல்நிலைப்பள்ளிகள், 36 உயர்நிலை பள்ளிகள் ஒரு உருது மற்றும் தெலுங்கு உயர்நிலைப்பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 122 தொடக்கப்பள்ளிகள் 30 பாலர்பள்ளிகள் நடத்தப் படுகிறது. இந்த பள்ளிகளில் 4 ஆயிரத்து 41 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

கடந்த 1995 முதல் 2000 ஆண்டு வரை இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்ததில் முறை கேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்துள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப் பட்டது.

இதை தொடர்ந்து மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை அரசு தேர்வு துறைக்கு மாநகராட்சி அனுப்பி வைத்தது. அந்த ஆசிரியர்களின் ஆவணங்களை தேர்வுத்துறை ஆய்வு செய்தது.

அதில் 26 ஆசிரியர்கள் பெயர் பட்டியலை குறிப்பிட்டு அவர்களது கல்வி சான்றிதழ் மற்றும் பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கடந்த வாரம் மாநகராட்சிக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புகார் கூறப்பட்ட 126 இடை நிலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்பட்டதில் இப்போது 26 பேரை மட்டும் தேர்வு துறை சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. இவர்கள் 26 பேரும் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்தார்களா? என்பது ஆய்வுக்கு பிறகு தெரியவரும்.

பணி நியமனத்தின் போது ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்ததற்கான சான்றிதழ்களை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் இல்லாதவை என்று கூறப்படுகிறது. எனவே அங்கீகாரம் இல்லாத நிறுவனத்தில் படித்து வாங்கிய சான்றிதழ்கள் போலியானதாகவே கருதப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

மூன்று முதல் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறும் போது அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்துதான் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ஆபத்தான மரங்களை அகற்ற சென்னை மாநகராட்சியை அணுகலாம்

Print PDF

தினமணி              13.08.2013

ஆபத்தான மரங்களை அகற்ற சென்னை மாநகராட்சியை அணுகலாம்

சென்னையில் விழும் நிலையில் உள்ள மரங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக அகற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி சாலைகளில் உள்ள காய்ந்த மரங்கள், கிளைகள், மழைக்காலங்களில் விழும் நிலையில் உள்ள மரங்கள், தெரு விளக்கு வெளிச்சத்தை மறைக்கும் வகையில் உள்ள மரங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ள மரங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற மரங்கள் குறித்து 1913 என்ற புகார் பிரிவு எண்ணில் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம். மண்டல அலுவலகங்களிலும் புகார் அளிக்கலாம். மேலும் மேயர் அலுவலக எண்ணிலும் (044 2561 9300) ஆணையர் அலுவலக எண்ணிலும் (044 2561 9200) தொடர்பு கொள்ளலாம்.

மண்டலம் - மண்டல அலுவலகம்

திருவொற்றியூர் - 25993494  9445190201

மணலி - 25941079  9445190202

மாதவரம் - 25530427  9445190203

தண்டையார்பேட்டை - 25951083  9445190204

ராயபுரம் - 25206655  9445190205

திரு.வி.க. நகர் - 26749990  9445190206

அம்பத்தூர் - 26253331  9445190207

அண்ணாநகர் - 26412646  9445190208

தேனாம்பேட்டை - 28170738  9445190209

கோடம்பாக்கம் - 24838968  9445190210

வளசரவாக்கம் - 24867725  9445190211

ஆலந்தூர் - 22342355  9445190212

அடையாறு - 24425961  9445190213

பெருங்குடி - 22420600  9445190214

சோழிங்கநல்லூர் - 24500923  9445190215

 

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி              13.08.2013

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை சென்னை மாநகராட்சி அறிவிப்பு

 

 

 

 

 

சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இடையூறு தரும் மரங்கள்

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– சென்னை மாநகராட்சியின் சாலைகளில் உள்ள காய்ந்து போன மரங்கள், அதனுடைய மரக்கிளைகள், மழைக்காலங்களில் காற்று வீசினால் விழும் நிலையில் உள்ள மரங்கள், தாழ்வான பகுதிகளில் உள்ள சாய்ந்த மரக்கிளைகள் மற்றும் தெரு விளக்குகளின் வெளிச்சத்தை மறைக்கும் மரக்கிளைகள் போன்று மக்களுக்கு இடையூறு தரும் வகையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே இது போன்ற பிரச்சினைகளில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற சென்னை மாநகராட்சியின் புகார் பிரிவு எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் மாநகராட்சி மேயர் அலுவலகத்தை 044–25619300 என்ற தொலைபேசி எண்ணிலும், மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தை 044–2561900 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மண்டல அலுவலக தொடர்பு எண்கள்

இதே போன்று சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் தொடர்பு கொண்டு இந்த பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கலாம். அதன்படி, திருவொற்றியூர் அலுவலகத்தை 25993494/9445190201, மணலி அலுவலகத்தை 25941079/9445190202, மாதவரம் அலுவலகத்தை 25530427/9445190203, தண்டையார்பேட்டை அலுவலகத்தை 25951083/9445190204, ராயபுரம் அலுவலகத்தை 25206655/9445190205, திரு.வி.க.நகர் அலுவலகத்தை 26749990/9445190206 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அம்பத்தூர் அலுவலகத்தை 26253331/9445190207, அண்ணா நகர் அலுவலகத்தை 26412646/9445190208, தேனாம்பேட்டை அலுவலகத்தை 28170738/9445190209, கோடம்பாக்கம் அலுவலகத்தை 24838968/9445190210, வளசரவாக்கம் அலுவலகத்தை 24867725/9445190211, ஆலந்தூர் அலுவலகத்தை 22342355/9445190212, அடையாறு அலுவலகத்தை 24425961/9445190213, பெருங்குடி அலுவலகத்தை 22420600/9445190214, சோழிங்கநல்லூர் அலுவலகத்தை 24500923/9445190215 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

 


Page 128 of 506