Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நாசரேத்தில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

Print PDF

தினகரன்            12.07.2013

நாசரேத்தில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

நாசரேத்: நாசரேத் பேரூராட்சி பகுதியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால்  இணைப்பு துண்டிக்கப்படும் என்று செயல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலு வலர் முகம்மது இக்பால் ஷெரிப் வெளியிட்டுள்ள அறிக்கை: நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட ஆற்று குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மேலும் இப்பேரூராட்சியால் நிலத்தடி நீர் பொது குழாய்கள் மூலம் விநி யோகம் செய்யப்படும்போது அருகிலுள்ள வீடுகளில் பிளாஸ்டிக் டியூப் பொருத்தி தண்ணீர் எடுப்பவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் பொது நல்லியும் அடைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.    

 

மழைநீர் சேகரிப்பு வசதி இல்லாத புதிய வீடு, கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு கிடையாது

Print PDF

தினகரன்            12.07.2013

மழைநீர் சேகரிப்பு வசதி இல்லாத புதிய வீடு, கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு கிடையாது

அனுப்பர்பாளையம், : திருப்பூரில் மழைநீர் சேகரிப்பு வசதி இல்லாத புதிய வீடு, கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாது என மண்டல கூட்டத்தில் உதவி ஆணையர் அறிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலக்கூட்டம் வேலம்பாளையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவிஆணையாளர் முகமதுசபியுல் லா  முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.

இதற்கு பதிலளித்து தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:  

அனைத்து வார்டுகளிலும், இனி மாதாமாதம், குடிநீர் சப்ளையர்களின் கூட்டம் நடத்தப்பட உள்ளது. 22 கோடி ரூபாய் செலவில், புதிய தெருவிளக்குகள் அமைக்கவும், பராமரிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீரை அதிகமாக வழங்க அனைத்து வார்டுகளிலும் ரூ.13.5 கோடியில்  குழாய் விஸ்தரிப்பு பணிகள் நடக்கிறது. முதலாவது மண்டலத்தில் 3 இடங்களில் மேல்நிலைத்தொட்டிகளும், தரைமட்ட தொட்டிகளும் அமைக்கப்பட உள்ளன. கை பம்ப் போர்வெல் உள்ள இடங்களில், மின்மோட்டார் அமைத்து சப்பைத்தண்ணீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

 

உறையூர் சோழன்பாறை பகுதியில் பயன்படுத்தப்படாத கல்குவாரி தண்ணீரில் குளிக்க தடை மாநகராட்சி ஆணையர் தகவல்

Print PDF

தினத்தந்தி          12.07.2013

உறையூர் சோழன்பாறை பகுதியில் பயன்படுத்தப்படாத கல்குவாரி தண்ணீரில் குளிக்க தடை மாநகராட்சி ஆணையர் தகவல்


திருச்சி உறையூர் சோழன்பாறை பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கல்குவாரி தண்ணீரில் குளிக்க தடை விதித்துள்ளதாக மாநகராட்சிஆணையர் தண்டபாணி கூறி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

உறையூரில் கல்குவாரி

திருச்சி உறையூர் சோழன்பாறை பகுதியில் பயன்படுத்தப்படாத கல்குவாரி உள்ளது. இதில் மழைநீர் தேங்கி இருக்கிறது. இந்த ஆபத்தான பயன்படுத்தப்படாத கல்குவாரியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் குளித்து கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் கல்குவாரியில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

எச்சரிக்கை பலகை

ஆபத்தான கல்குவாரிக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே, அந்த பகுதிக்கு செல்லக்கூடாது எனவும், அங்குள்ள நீரில் குளிக்கக்கூடாது எனவும், எச்சரிக்கை விடுத்து இருந்தது. தற்போது பொதுமக்கள் அறியும் வண்ணம், அந்த கல்குவாரியின் அருகே “இந்த இடம் ஆபத்தானது இங்கே பொதுமக்கள் செல்ல வேண்டாம்“ என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகள் ஆபத்தான கல்குவாரிக்கு குளிக்க செலல வேண்டாம் எனவும், பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டில் உள்ள சிறுவர்–சிறுமிகளை அந்த பகுதிக்கு செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 


Page 144 of 506