Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மழை நீர் சேகரிப்பு: ஆட்சியர் வேண்டுகோள்

Print PDF

தினமணி               04.07.2013

மழை நீர் சேகரிப்பு: ஆட்சியர் வேண்டுகோள்

மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகக் கட்டடங்களிலும் ஏற்படுத்த வேண்டும், என பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணிகளை, ஆட்சியர் ந. வெங்கடாசலம் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, அந்தப் பகுதியில் நடைபெற்று வரும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவித்தது:

 அய்யம்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் 3,929 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 3,781 குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மீதமுள்ள வீடுகளிலும் விரைவில் உருவாக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வீடுகளில் தூர்ந்துபோய் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

 தமிழக அரசு நிலத்தடி நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஒவ்வொரு வீட்டிலும், கட்டடத்தின் அளவு, தன்மைக்கேற்ப அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, நிலத்தடி நீர் சேகரிப்பின் அவசியம் கருதி பொதுமக்கள் அனைத்துக் கட்டடங்களிலும் மழை நீர் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

 புதியதாகக் கட்டப்படும் கட்டடங்களுக்கு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டால்தான், கட்டட வரைபடத்துக்கான அனுமதியும், சொத்து வரியும் விதிக்கப்படும். தவறும்பட்சத்தில், வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றார்.

 ஆய்வின்போது, அய்யம்பாளையம் பேரூராட்சித் தலைவர் பாஸ்கரன், செயல் அலுவலர் எஸ். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

கட்டிட "சீல்' காரணமாக ஸ்ரீரங்கம் மக்கள் பீதி வேண்டாம் : மாநகராட்சி கமிஷனர் விரிவான விளக்கம்

Print PDF

தினமலர்               04.07.2013

கட்டிட "சீல்' காரணமாக ஸ்ரீரங்கம் மக்கள் பீதி வேண்டாம் : மாநகராட்சி கமிஷனர் விரிவான விளக்கம்


திருச்சி: "விதிகளை மீறிய கட்டிடங்களுக்கு "சீல்' வைப்பது தொடர்பாக, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் அச்சமடைய வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள ஏழு மதில்சுவர்களில், 5,6,7 ஆகிய மதில்சுவர்கள், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளன. கடந்த, 26ம் தேதி இரவு, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் கண்ணன், கமிஷனர் தனபால் மற்றும் மதில்சுவர் சீரமைப்பு கமிட்டியினர் மதில்சுவர்களை பார்வையிட்டனர்.கடந்த, 1957ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி, மதில்சுவருக்கும், கட்டிடங்களுக்கும் இடையே, 10 அடி இடைவெளியும், கட்டிடத்தின் உயரம், 9 மீட்டர் உயரம் மட்டுமே இருக்கவேண்டும்.

ஆனால், மேலச்சித்திரை வீதி கோபுரம் அருகே, மதில்சுவரின் மிக அருகில், "கல்யாண் சதன்' என்ற உயரமான கட்டிடம் கட்டப்பட்டிருந்தது.செயலாளர் கண்ணனின் உத்தரவுப்படி, மாநகராட்சி அதிகாரிகள், விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை பூட்டி, அதிரடியாக "சீல்' வைத்தனர். ஸ்ரீரங்கம் சித்திரை வீதிகள், உத்திரவீதிகள், அடையவளஞ்சான் வீதிகளில் மதில்சுவர்களை ஒட்டியே, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன.

இதேபோல, விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு "சீல்' வைப்பது, அதிரடியாக அகற்றுவது போன்ற பணிகள், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விரைவில் நடக்கவுள்ளதாகவும், அதற்கான கணக்கெடுப்புப் பணி நடப்பதாகவும் பரவிய தகவலால் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

கமிஷனர் விளக்கம்: திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள மதில்சுவர்கள் அனைத்தும் புராதன புகழ்வாய்ந்தவை. மதில்சுவர்களையொட்டி அமைக்கப்பட்டுள்ள சில பழைய வீடுகள், கோவில் நிர்வாகத்தின் அனுமதியின்றி மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட்டு, வணிக நோக்கில் பல குடியிருப்புகள் கொண்ட வீடுகளாக, விதிகளை மீறி கட்டப்படும் முயற்சிகள் நடக்கின்றன.அவ்வாறு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்துக்கு மாநகராட்சி "சீல்' வைத்துள்ளது. இந்த கட்டிடம், கோபுரம், மதில்சுவரை ஒட்டியும் கட்டி வருவதை கண்டு, "இதை தடுத்து நிறுத்த வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகம் மாநகராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு, மாநகராட்சி சட்டப்பிரிவுகள் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விதிகளை மீறி கட்டிடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மாநகராட்சி சட்டப்படி, வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கியும் பணிகள் தொடர்ந்து நடந்தன. அதன்பிறகு, நகர் ஊரமைப்பு சட்டப்பிரிவின் கீழ் அறிவிப்பு வழங்கப்பட்டது. கட்டிட உரிமையாளர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரே, கட்டிடத்துக்கு "சீல்' வைக்கப்பட்டது.

அதிரடி தொடரும்: வணிக நோக்குடன் இதுபோன்ற அனுமதியில்லாத, விதிமீறலுடன் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கு மட்டுமே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஸ்ரீரங்கம் மதில்சுவரை ஓட்டியுள்ள வீடுகள் சம்பந்தமாக மாநகராட்சி எவ்வித கணக்கெடுப்பு பணியும் மேற்கொள்ளவில்லை.

ஏற்கனவே உள்ள பழைய கட்டிடங்களுக்கு இந்த நடவடிக்கை எதுவும் பொருந்தாது. எனவே, மக்கள் யாரும் இதுகுறித்து அச்சமடைய வேண்டாம் எனவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

வரலாற்று சிறப்புமிக்க மதில்சுவர் புராதன கோவில் மதில்சுவர்களை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

விதிமுறை மீறி கட்டினால் மட்டுமே நடவடிக்கை பழைய கட்டிடங்களுக்கு பிரச்னை எதுவும் இல்லை

Print PDF
தினகரன்               03.07.2013          

விதிமுறை மீறி கட்டினால் மட்டுமே நடவடிக்கை பழைய கட்டிடங்களுக்கு பிரச்னை எதுவும் இல்லை

திருச்சி, : ஸ்ரீரங்கத்தில் வணிக நோக்கத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். பழைய கட்டடங்கள் மீது நடவடிக்கை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்ட பாணி தெரிவித்திருப்பதாவது: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைச்சுற்றியுள்ள மதில் சுவர்கள் அனைத்தும் புராதன  புகழ் வாய்ந்தவையாகும். இந்த மதில் சுவர்களை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சில பழைய வீடுகள் மூன்றாம் நபர்களுக்கு கோயில் அனுமதியில்லாமல் விற்கப்பட்டு வணிக நோக்கத்துடன், பல குடியிருப்புகள் கொண்ட வீடுகளாக, விதிகளை மீறி கட்ட முயற்சிக்கப்படுகிறது.

இவ்வாறு வணிக நோக் குடன் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்திற்கு நேற்று முன் தினம் மாநகரட்சி மூலம் சீல் வைக்கப்பட்டது. இக்கட்டிடமானது கோபுரத்தை ஒட்டியும், மதிற்சுவரை ஒட்டியும் கட்டி வரு வதைக் கண்டு கோயில் நிர் வாகம் இதனை தடுத்து நிறுத்த கோரி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மாநகராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மாநகராட் சிக்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்கு திருச்சி மாநகராட்சி சட்டப்பிரிவுகள் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் அபராதம் விதிக் கப்பட்டது.

இதைப் பொருட்ப்படுத்தாமல், தொடர்ந்து விதி களை மீறி கட்டிடப்பணி கள் மேற்கொள்ளப்பட்ட தால், மாநகராட்சி சட்டப் படி வேலை நிறுத்த அறிவிப்பும்  வழங்கப்பட்டது. அதன்பின்பும் பணியினை தொடர்ந்ததால்  உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டு சீல் வைக்கப்பட் டது. வணிக நோக்குடன் இது போன்ற அனுமதி இல்லாத விதிமீறலுடன் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கு மட்டும் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  ஏற்க னவே உள்ள பழைய கட்டிங்களுக்கு இந்த நடவடிக்கை கள் ஏதும் பொருந்தாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 


Page 152 of 506