Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நெல்லை மாநகராட்சிக்கு குடிநீர் கட்டணம் 15–ந் தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி              02.07.2013

நெல்லை மாநகராட்சிக்கு குடிநீர் கட்டணம் 15–ந் தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்


நெல்லை மாநகராட்சிக்கு 2013–2014ம் ஆண்டில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் பாதாள சாக்கடை சேவை கட்டணம் ஆகியவைகள் செலுத்துவதற்கு கடைசி தேதி 15–4–2013 ஆகும்.

நடப்பு ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான வரிகளை செலுத்தாமல் நிலுவை வைத்து உள்ளவர்களின் சொத்துக்கள் மீது ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு முதலான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடப்பு அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை வருகிற 15–ந் தேதிக்குள் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்களில் செலுத்த வேண்டும். வரி செலுத்தாதவர்களின் பெயர்கள் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இந்த தகவலை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) த.மோகன் தெரிவித்தார்.

 

கோவை: அனுமதியற்ற கட்டடத்திற்கு சீல்

Print PDF

தினமலர்             01.07.2013

கோவை: அனுமதியற்ற கட்டடத்திற்கு சீல்


கோவை: கோவையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த கட்டம் ஒன்றிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கோவையைச் சேர்ந்த ஒரு லாட்டரி அதிபருக்கு சொந்தமான கட்டடம் கிராஸ் கட் வீதியில் உள்ளது. நான்கு மாடி கொண்ட இந்த கட்டடம் விதிமுறைகளை மீறி உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

இறைச்சிக் கடைகளை முறைப்படுத்த ஆலோசனை

Print PDF

தினமணி               01.07.2013

இறைச்சிக் கடைகளை முறைப்படுத்த ஆலோசனை

புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு உள்ளாட்சி அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், உழவர்கரை நகராட்சி ஆணையர் அழகிரி, நகராட்சி செயற்பொறியாளர் குணசேகரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் உள்ள இறைச்சிக் கடைகளில் வெளிப்படையாக ஆடுகள், மாடுகள் வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

 


Page 158 of 506