Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை மேயர் சசிகலா புஷ்பா நீரேற்று நிலையத்தில் ஆய்வு

Print PDF

தினத்தந்தி               27.06.2013

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை மேயர் சசிகலா புஷ்பா நீரேற்று நிலையத்தில் ஆய்வு


தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவது குறித்து மேயர் சசிகலா புஷ்பா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

குடிநீர் வினியோகம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நீடித்து வருகிறது. சில பகுதிகளில் 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தற்போது தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால், தண்ணீர் பம்பிங் செய்யும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் வல்லநாடு நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார்களை பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.

ஆய்வு

இந்த பணியை மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வல்லநாடு தெப்பம் அமைந்து உள்ள பகுதியையும் பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடித்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி, என்ஜினீயர் ராஜகோபால், இளநிலை என்ஜினீயர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

கோவை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை உதவி ஆணையாளர்கள் கண்காணிக்க வேண்டும் ஆய்வுக் கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேச்சு

Print PDF

தினத்தந்தி               26.06.2013

கோவை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை உதவி ஆணையாளர்கள் கண்காணிக்க வேண்டும் ஆய்வுக் கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேச்சு


‘கோவை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை உதவி ஆணையாளர்கள் கண்காணிக்க வேண்டும்’ என்று ஆய்வு கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேசினார்.

ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மேயர் செ.ம.வேலுசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் லதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேசியதாவது:–

 கோவை மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரின் விருது கிடைத்தது. சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாமன்ற கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய போது கோவை மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை கட்டி காக்கின்ற பொறுப்பு மாமன்ற உறுப்பினர்களுக்கும், அலுவலர்களுக்கும் உள்ளது என்று தெரிவித்தேன். அதை காக்கின்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் அந்த பெயரை தக்க வைத்து கொள்ள முடியும்.

மாநகருக்கு தேவைகள் என்ன, மாநகரில் உள்ள பிரச்சினைகள் குறித்து உங்களுக்கு தெரிந்த விஷயங்களை தயக்கம் இல்லாமல் நட்பு ரீதியாக சொன்னால் இன்னும் சிறப்பாக மாநகராட்சி பணிகளில் கவனம் செலுத்த முடியும்.மக்களுக்கு முதன்மையாக தேவைப்படுவது குடிநீர், சாலை வசதிகள், சுகாதாரம். தெருவிளக்குகள் போன்ற அடிப்படை தேவைகளில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

உதவி ஆணையாளர்கள் அவ்வப்போது வார்டுகளுக்கு சென்று துப்புரவு பணியாளர்கள் பணிகளை சரியாக செய்கிறார்களா என்பதோடு மட்டுமில்லாமல் அவர்களை கண்காணித்து ஊக்கப்படுத்த வேண்டும். ஆந்திராவில் வராங்கல் நகரில் குப்பைகளை சேகரித்து அதில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை தனியாக விற்பனை செய்து அதில் கிடைக்க கூடிய தொகையை துப்புரவாளர் நல நிதிக்கு வழங்குகிறார்கள் அதனால் அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த முறையை இங்கேயும் கொண்டு வருவதில் மாநகராட்சி நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. அது போல கோவை மாநகரில் சாலை விரிவாக்கத்தின் போது ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. அதை ஈடு செய்யும் வகையில் கோவை மாநகரில் இருந்து புறநகர்களுக்கு செல்லும் சாலைகள் அனைத்திலும் நெடுஞ்சாலை துறையினரின் ஓத்துழைப்போடு எந்த எந்த இடங்களில் மரக்கன்றுகளை வைக்கலாம் என்பது குறித்து தலைமை பொறியாளர் திட்ட வரைவு தயாரிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டப் பணிகள் சுமார் 300 கி.மீட்டர் பணி முடிவடைந்துள்ளது. அந்த சாலைகளில் மரக்கன்றுகள் தேவையான இடங்களில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அவினாசி சாலை, திருச்சி சாலை ஆகியவற்றில் சென்டர் மிடியன் சிறப்பான முறையில் அமைப்பதற்கும் முக்கிய சாலைகளில் உள்ள பூங்காக்களை தனியார் பங்களிப்போடு சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கும் அலுவலர்கள் திட்டம் வகுக்க வேண்டும். மாநகராட்சி அலுவலர்கள் தொண்டு மனப்பான்மையோடு செயல்பட்டால் மாநகராட்சிக்கு நல்ல பெயரும், மாநகராட்சி மக்களுக்கு சேவை செய்கின்ற திருப்தியும் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையாளர், லதா பேசுகையில் ‘அவினாசி சாலை, திருச்சி சாலை உலக தரத்திற்கு அமைப்பது குறித்து மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் திட்ட அறிக்கை கேட்கப்பட்டுள்ளது அது பெறப்பட்டவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் சு.சிவராசு, பொறியாளர்கள் சுகுமார், கணேஷ்வரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

முகப்பேரில் அனுமதி இன்றி கட்டிய கட்டிடத்திற்கு சீல் சி.எம்.டி.ஏ. நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி               26.06.2013

முகப்பேரில் அனுமதி இன்றி கட்டிய கட்டிடத்திற்கு சீல் சி.எம்.டி.ஏ. நடவடிக்கை

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை பெருநகர எல்லைக்குள் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.) ஈடுபட்டு வருகிறது.
 
அந்தவகையில் சென்னை, முகப்பேர் மேற்கு, கம்பர் தெரு, மனை எண் பி.28 (ம) சி–14, என்ற விலாசத்தில் விதிமுறைகள் மீறியும், அனுமதி இன்றியும் கட்டப்பட்டுள்ள பகுதி வணிக கட்டிடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இக்கட்டிடத்தின் உரிமையாளர், அம்பத்தூர் நகராட்சியிடம் 2010–ம் ஆண்டு ஆகஸ்டு 27–ந்தேதி தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடிசை தொழில் உபயோகத்திற்கு (ஆயத்த ஆடைகள்) கட்டிடம் கட்ட திட்ட அனுமதி பெற்றுள்ளார்.
 
ஆனால் திட்ட அனுமதிக்கு முரணாக தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் மற்றும் அனுமதி இன்றி மூன்றாவது தளப்பகுதி கொண்ட வணிக கட்டிடத்தைக் கட்டியுள்ளார். எனவே கடந்த பிப்ரவரி 28–ந்தேதி பூட்டி சீல் வைத்தல் அறிவிக்கை பெற்ற பின்பும், கட்டிடத்தின் உரிமையாளர் திட்ட அனுமதியின்படி கட்டிடப்பகுதிகளை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் வணிக கட்டிடமாக கட்டியுள்ளார். எனவே இக்கட்டிடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 


Page 161 of 506