Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீரை வீணாக்கியதால் 5 வீடுகளின் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி நடவடிக்கை

Print PDF
தினகரன்                 18.06.2013 

குடிநீரை வீணாக்கியதால் 5 வீடுகளின் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி நடவடிக்கை

திருச்சி. : திருச்சி மாநகரில் குடிநீரை வீணாக்கியதால் 5 வீடு களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

திருச்சி தில்லைநகர் 7வது கிராஸ் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி நேற்று ஆய்வு செய்தார். அப் போது சாஸ்திரி ரோடு பகுதிகளில் உள்ள சில வீடுகளின் குடிநீர் இணை ப்பு தொடர்பாக ஆய்வு செய்தார். இதில் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு பிவிசி குழாய்கள் மூலம் வீட்டின் சுற்றுப்புறங்களில் பயன்படுத்தப்பட்டதும், இதனால் மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகள் சேதமானதும் தெரியவந் தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 5 வீடுகளின் குடிநீர் இணைப்பை துண் டிக்க அதிகாரிகளுக்கு கமிஷனர் தண்டபாணி உத்தரவிட் டார்.

மேலும் மாநகராட்சி பகுதிகளில் மக்களின் அத்தியாவசிய தேவைக்கான குடிநீரை வீண் செய்வது, மாநகராட்சி சொத்தை சேதப்படுத்துவது கண்டறியப்பட்டாலோ, புகார் வந் தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

 

குடிநீர் தொட்டி வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேயர் எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி                18.06.2013 

குடிநீர் தொட்டி வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேயர் எச்சரிக்கை


குடிநீர் தொட்டி வளாகத்தில், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடிநீர் தொட்டி

வேலூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை செய்வதற்காக பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டிகளை கட்டி மாநகராட்சி பராமரித்து வருகிறது. அதாவது அந்த தொட்டியில் தண்ணீரை தேக்கி வைத்து வார்டு வாரியாக சப்ளை நடைபெறுகிறது.

அந்த வகையில் வேலூர் பில்டெர்பெட் ரோட்டில், சார்பனாமேடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 8 ஏக்கர் நிலத்தில் 39 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தரை மட்ட நீர் தேக்க தொட்டி உள்ளது. அத்துடன் புதிதாக கட்டப்பட்ட 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இன்னொரு நீர்த்தேக்க தொட்டியும் உள்ளது.

அந்த வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இருந்தாலும், சிலர் சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து உள்ளே செல்கின்றனர். சிலர் காம்பவுண்டு சுவரில் துளை போட்டு உள்ளே செல்கின்றனர். அப்படிச்செல்லும் அவர்கள் அங்கு கூட்டம், கூட்டமாக அமர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேரில் ஆய்வு

எனவே இது மாதிரியான செயல்களை தடுக்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வார்டு கவுன்சிலர் சூளை. செல்வம் மாநகராட்சி கூட்டத்தில் அடிக்கடி கோரி வந்தனர். அதற்கு மேயர், கமிஷனர் ஆகியோர் அந்த பகுதியை நேரில் பார்வையிட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தனர்.

அதன்படி நேற்று காலை மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி, துணை மேயர் தருமலிங்கம், என்ஜினீயர் தேவக்குமார், மண்டலக்குழு தலைவர் குமார், கவுன்சிலர்கள் சூளை. செல்வம், அயூப் மற்றும் அலுவர்கள் குடிநீர் தொட்டி அமைந்துள்ள பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் மேயர், கமிஷனர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இங்குள்ள சுற்றுச்சுவரை துளை போட்டு மர்ம ஆசாமிகள் பகலிலும், இரவிலும் உள்ளே வந்து சமுக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த துளையை அடைத்தால், அந்த ஈரம் காய்வதற்குள் மீண்டும் சுவரை உடைத்து உள்ளே சென்று விடுகிறார்கள். அவர்களை தட்டிக்கேட்கும் மாநகராட்சி ஊழியர்களை அந்த ஆசாமிகள் தாக்குகிறார்கள். எனவே மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வேலை செய்யவே அச்சப்படுகின்றனர்.

கடும் நடவடிக்கை

எனவே இனிமேல் இதுமாதிரியான செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இதே தவறு நடக்குமானால் அதுபற்றி போலீசில் புகார் செய்யப்படும். இந்த வளாகம் மட்டுமல்லாது மாநகராட்சி சொத்தை ஆக்கிரமிப்பவர்கள், சேதப்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மேயர் கூறினார்.

பின்னர் மேயர் வேலப்பாடி சோளாபுரி அம்மன் கோவில் தெரு, தாண்டவராயன் கோவில் தெரு பகுதிகளில் போடப்பட்டு வரும் சிமெண்டு, தார் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

அனுமதியின்றி மரங்கள் வெட்டிக் கடத்தல்

Print PDF

தினமணி               18.06.2013 

அனுமதியின்றி மரங்கள் வெட்டிக் கடத்தல்

கொடைக்கானலில் அனுமதியில்லாமல் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம், கொடைக்கானல் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

 கொடைக்கானலில் பெர்ன்ஹில் ரோடு, செண்பகனூர், அட்டைக்கடி ஆகியப் பகுதிகளில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பழமையான  ரப்பர், யூக்லிப்டஸ், பைன் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 15 லட்சமாகும். இதனால் நகராட்சி நிர்வாகத்துக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட வார்டு பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொடைக்கானல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

 இது குறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சாகுல் ஹமீது கூறியதாவது: கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளான பெர்ன்ஹில் ரோட்டிலுள்ள பழமையான மரங்களை அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் வெட்டியுள்ளனர். மேலும் செண்பகனூர் பகுதிகளில் அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது குறித்து கொடைக்கானல் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 வில்பட்டி பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல்: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டப்பட்டு, கடத்தப்பட்டு வருகின்றன.  பகல் நேரங்களில் மரங்களை வெட்டி மலைச் சாலைகளில் குவித்து வைத்து, இரவு நேரங்களில் லாரி மூலம் கடத்தி வருகின்றனர். இவற்றைத் தவிர மங்களம் கொம்பு,

கடுகுதடி, தாண்டிக்குடி,பண்ணைக்காடு ஆகியப் பகுதிகளில் கொடைக்கானல்-மதுரை சாலையான ஊத்து வழியாக மரங்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

 ஏற்கனவே கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள மரங்கள் வெட்டியதாலும், பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டதாலும் மழைத் தண்ணீர் பூமிக்கடியில் செல்ல முடியாத நிலை இருக்கிறது. எனவே மரங்களை அனுமதியில்லாமல் வெட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.    இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக அந்தந்த வார்டு பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் புகார் கொடுத்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் கூறியதாவது: கடந்த சில தினங்களாக யாருக்கும் மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை, தவறு செய்தவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


Page 169 of 506