Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அம்மா உணவகம், பள்ளியில் மேயர் ஆய்வு

Print PDF
தினகரன்        12.06.2013

அம்மா உணவகம், பள்ளியில் மேயர் ஆய்வு


மதுரை, : மதுரை மாநகராட்சி அம்மா உண வகம், அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மான கிரி கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆணை யாளர் நந்தகோபால் தலை மையில் மேயர் ராஜன் செல்லப்பா நேற்று ஆய்வு செய்தார்.

கீழ ஆவணி மூலவீதி யில் உள்ள அவ்வை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண் டும், நாற்காலி, டேபிள்களை தூசு இல்லாமல் துடைக்க தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும், பள்ளி க்கு தேவைப்படும் பொருட் கள் குறித்து மாநகராட்சி கல்வி அலுவலரிடம் தெரி விக்க வேண்டும் என உதவித்தலைமை ஆசிரியரிடம் கூறினார்.  

பின்னர் மேலவாசலில் உள்ள அம்மா உணவகத் தில் ஆய்வு செய்தார். தயிர், சாம்பார் சாதத்தை சாப் பிட்டு பார்த்தார். சாம்பார் சாதத்தில் காய்கறிகள் கூடுதலாக சேர்க்குமாறும், அரிசி மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவியபின் சமைக்குமாறும் கூறினார். உண வின் தரம் குறித்து பொதுமக் களிடமும் கேட்டறிந்தார்.

ஜவகர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் சிவகங்கை மெயின் ரோடு இந்திராநகர் மற்றும் பால்பண்ணை எதிரில் உள்ள மானகிரி கால்வாயில் கான்கிரீட் தடுப்பு அமைக் கும் பணியை பார்வையிட்டு, விரைவில் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது ஆணை யாளர் நந்தகோபால், நகர்நல அலுவலர் யசோதாமணி, செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், திருஞானம், அரசு, கவுன்சிலர்கள் பூமிபாலன், பாண்டியம்மாள், பொறியாளர் சே வியர், உதவி தலைமை ஆசி ரியை கல்யாணி உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

திருவண்ணாமலையில் குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு

Print PDF
தினத்தந்தி         12.06.2013

திருவண்ணாமலையில் குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு


திருவண்ணாமலையில் கோடைகாலத்தை முன் னிட்டு குடிநீர் வழங் கும் பணியை நகராட்சி தலைவர் என்.பாலச் சந்தர் ஆய்வு செய்தார்.

நீரேற்று நிலையம்

திருவண்ணாமலை நக ராட்சி பகுதிகளுக்கு சமுத்தி ரம் ஏரியில் இருந்தும் குடிநீர் கொண்டுவரப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் விநியோக பணிகளை நேற்று நகராட்சி தலைவர் என்.பாலச்சந்தர், நகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சமுத்திரம் ஏரியில் நகராட் சிக்கு குடிநீர் வழங்கும் ஆழ் துளை கிணறு மற்றும் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தலைவர் ஆய்வு

இந்த நீரேற்றும் நிலையம் மற்றும் ஆழ்துளை கிணற்றை தலைவர் என்.பாலச்சந்தர் பார்வையிட்டு அங்கிருந்து கூடுதலாக குடிநீர் வினியோ கம் செய்வது குறித்து ஆணை யாளருடன் ஆய்வு செய் தார்.

பஸ்நிலையம்

பின்னர் திருவண் ணாமலை பஸ் நிலையத்திற்கு சென்று பாவை யிட்டு ஆய்வு செய் தனர். அங்கு கடை கள் நகராட்சி விதி களின¢ படி வைக்கப் பட் டுள்ளதா என் பதை பார்வை யிட் டனர். அப் போது கடைக்கு வெளியே நடை பாதையில் வைக் கப்பட்டிருந்த கடைகளை உள்ளே வைக்குமாறு கூறி னர்.மேலும் அங் குள்ள கழிவுநீர் கால்வாய் களையும் பார்வையிட்ட னர்.

நகராட்சி என்ஜி னீயர் பாஸ்கரன், கவுன்சிலர்கள் ஜே.எஸ்.செல்வம், எம்.ஏ.பாலன், பற்குணகுமார், அ.தி.மு.க. பாசறை நகர செயலாளர் நரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
 

கோவை மாநகராட்சியில் 20 பேருக்கு பணி நியமன ஆணை மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

Print PDF
தினத்தந்தி         12.06.2013

கோவை மாநகராட்சியில் 20 பேருக்கு பணி நியமன ஆணை மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

கோவை மாநகராட்சியில் வேலை பார்த்து பணியின்போது மரணம் அடைந்தவர்களின் வாரிசுகள் 20 பேருக்கு நேற்று பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் செ.ம.வேலுசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, கோவை மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 136 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு இருந்தது. இப்போது மேலும் 20 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் மொத்தம் 156 பேர் பணி நியமன உத்தரவுகளை பெற்றுள்ளனர்.
 
கருணை அடிப்படையில் மாநகராட்சியில் பணி நியமன ஆணைபெற்றவர்கள், தங்களுடைய தாய், தந்தை எதனால் இறந்தனர் என்று உங்களுக்கு தெரியும். இதனை நினைத்து உங்களுடைய உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் லதா, துணைமேயர் லீலாவதிஉண்ணி, துணை கமிஷனர் சு.சிவராசு, மண்டல தலைவர்கள் கே.ஏ.ஆதிநாராயணன், பி.சாவித்திரி பார்த்திபன், நிலைக்குழு தலைவர் எம்.ராஜேந்திரன், கே.அர்ச்சுனன், ஆர்.சாந்தாமணி, எஸ்.தாமரை செல்வி, கவுன்சிலர் சாதிக் அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 


Page 176 of 506