Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சுத்தமாக வைக்க உத்தரவு அம்மா உணவகத்தில் மேயர் திடீர் ஆய்வு

Print PDF
தினகரன்          11.06.2013

சுத்தமாக வைக்க உத்தரவு அம்மா உணவகத்தில் மேயர் திடீர் ஆய்வு


புழல், : புழல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் மேயர் சைதை துரைசாமி திடீரென ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி 22, 23வது வார்டுகளில் அடங்கிய புழல் திருநீலகண்ட நகர், மகாவீர் கார்டன், தமிழன் நகர், பிள்ளையார் கோயில் தெரு, காந்தி தெரு, அம்பேத்கர் தெரு, தெருவீதி அம்மன் கோயில், லட்சுமி அம்மன் கோயில் தெருக்களில் மின்கம்பம், தெருவிளக்குகள்

ஸீ88 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடக்க விழா புழலில் நடந்தது. மண்டல குழு தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி பொறியாளர் பாபு, கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரி, கண்ணதாசன், தட்சிணாமூர்த்தி, சங்கர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் மூர்த்தி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மின் விளக்குகளை இயக்கி வைத்தனர். துணை மேயர் பெஞ்சமின், முன்னாள் கவுன்சிலர்கள் கருப்புக்கொடி ஏழுமலை, எழில், அறங்காவலர் குழு தலைவர் விஜயன், மண்டல அலுவலர் கே.மணிவண்ணன், மாநகராட்சி மேற்பார்வை பொறி யாளர் ஜெயராமன், செயற்பொறியாளர் பாலசுப்பரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா மாதவரம் மண்டலத்தில் வாழும் மக்கள் நலனுக்காக இதுவரை

ஸீ120 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் சாலை, பூங்கா, தெரு விளக்குகள், மழை நீர் வடிகால் என 575 பணிகள்

ஸீ36 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 424 பணிகள்

ஸீ84 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகின்றன என்றார்.

புழல் ஆலமரம் 23வது வார்டு மலிவு விலை உணவகத்துக்கு திடீரென மேயர் துரைசாமி சென்று ஆய்வு செய்தார். உணவகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெயர்ப் பலகை வைக்க வேண்டும். பாத்திரங்களை சுத்தமாக கழுவ வேண்டும் என அறிவுறுத்தினார்.
 

மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு

Print PDF
தினமணி                11.06.2013

மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு


மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நகராட்சி அலுவலர்களுக்கு பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மழைநீர் சேகரிப்பு குறித்து சென்னையில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் மழைநீரை சேமிப்பதன் அவசியம், மழைநீர் கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கட்டமைப்புகளை பராமரித்தல் குறித்து விளக்கப்பட்டது. தற்பொழுது தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், வடகிழக்கு பருவ மழையின் போது மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல் அவசியம் என்று இந்தப் பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.

தனியார் கட்டடங்கள், அரசு கட்டடங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இதர கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இது தவிர, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொது மக்ககளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவற்கு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் வழங்குதல், மக்கள் கூடும் இடங்களில் ஃபிளக்ஸ் பேனர்கள் அமைத்தல், மழைநீர் சேமிப்பீர் மற்றும் மழைநீர் கட்டமைப்புகளை பராமரிப்பீர் ஆகிய வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், தஞ்சாவூர், வேலூர், சேலம் ஆகிய நகராட்சி மண்டலங்கள் மற்றும் மாநகராட்சியை சார்ந்த ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் நகராட்சி ஆணையரக அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

இதில் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் அஜய் யாதவ், நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் ஜெயலட்சுமி, நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் ஆர். வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

குடிநீர் இணைப்புக்கு அனுமதி பெறாதவர்கள் மீது நடவடிக்கை

Print PDF
தினகரன்         07.06.2013

குடிநீர் இணைப்புக்கு அனுமதி பெறாதவர்கள் மீது நடவடிக்கை


மரக்காணம்: மரக்காணம் பேரூராட்சியில் கழிக்குப்பம், மண்டலாய், மாரியம்மன் கோயில், சம்புவெளி, கரிப்பாளையம் உள்ளிட்ட 18 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதால், இப்பகுதி மக்களுக்கு கந்தாடு, தீர்த்த வாரி ஆகிய பகுதிகளில் இருந்து பைப்லைன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

குடிநீரை பேரூராட்சி யின் அனுமதி பெறாமல் முறைகேடாக மின்மோட்டார் வைத்து எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து பகுதி மக்களுக்கும் முறையாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கந்தாடு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு வைத்து உள்ளவர்கள் 10 நாட்களுக்குள் முறையாக அனுமதி பெற வேண்டும்.தவறினால் பேரூராட்சி நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என தலைவர் சேகர், செயல் அலுவலர் ஊமைத்துரை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 


Page 177 of 506