Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும்

Print PDF
தினகரன்         07.06.2013

மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும்


தாராபுரம்: தாராபுரத்தில் நகரமன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் கலாவதி தலைமை தாங்கினார். ஆணையர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: சுமதி (அதிமுக) : அமராவதி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை உடனே அகற்ற வேண்டும். பொது மாட்டுத் தொழுவம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தலைவர்: பொது மாட்டுத் தொழுவம் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினரின் நிதி கோரப்பட்டுள்ளது.

கதிரவன் (திமுக): குடிநீர் பிரச்னைக்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆணையர்: அமராவதி ஆற்றில் ஏற்கனவே அமைக்கப் பட்டிருந்த கிணறு மற்றும் குழாய்கள் ஆற்று வெள்ளத்தால் சேதமடைந்திருந்தது. அவைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 40 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். இது தொடர்ந்து கிடைப்பதற்காக, தலைமை நீரேற்று நிலையம் அருகே பொதுப்பணித்துறையினர் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் 40 லட்சம் லிட்டர் குடிநீர் இனி« மல் கூடுதலாக கிடைக் கும்.

மேலும் புதிதாக ரூ. 14 கோடி மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள புதிய திட்டத்தின் மூலம் 25 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக கிடைக்கும். தலைமை நீரேற்று நிலையம் அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு மூலமாகவும் பல லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது.கதிரவன் திமுக: அமரா வதி அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீரையும், வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும் அனுமதியின்றி மோட்டார்வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

ஆணையர்: அனுமதியின்றி மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது சட்டப் படி குற்றமாகும். மோட்டார் வைத்து எங்கு தண்ணீர் எடுத்தாலும் பறிமுதல் செய்யப்படுவதோடு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.  மன்றத்தில் பல உறுப்பினர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்துவது ஏற்றுக் கொள்ள கூடியதாக இருக்கிறது. முறைப்படி நகராட்சி அளவையாளர் மூலமாக ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகளை அளந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 

கட்டடத்திற்கும் "சீல்'விதிமீறல் கட்டடத்தின் மாநகராட்சி வரைபட வரைவாளர் உரிமம் ரத்து

Print PDF
தினமலர்                07.06.2013

கட்டடத்திற்கும் "சீல்'விதிமீறல் கட்டடத்தின் மாநகராட்சி வரைபட வரைவாளர் உரிமம் ரத்து


மதுரை:மதுரையில், விதிமீறல் கட்டடத்திற்கு வரைபடம் வரைந்த மாநகராட்சி வரைவாளரின் உரிமத்தை ரத்து செய்த மாநகராட்சி, சம்மந்தப்பட்ட கட்டடத்திற்கும் "சீல்' வைத்தது. மதுரையின் விதிமீறல் கட்டடங்களுக்கு, உரிமையாளர்களை போலவே, அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது. பெரும்பாலான கட்டடங்கள், "உள்ளூர் திட்டக்குழுமத்தின் அனுமதி பெறாதவை,' என்பது தான், குற்றச்சாட்டு.

"அனுமதி பெறவில்லை என்பதை விட, அந்த அனுமதியை, மாநகராட்சியே முறைகேடாக வழங்கியது,' என்பது, குற்றச்சாட்டில் மறைந்திருக்கும் உண்மை. இதுவரை கட்டட உரிமையாளர்கள் மீது மட்டுமே பாய்ந்து வந்த நடவடிக்கை, முதன்முறையாக, அதற்கு துணை போனவர்கள் மீதும், பாயத்தொடங்கியுள்ளது. மதுரை ஸ்காட்ரோடு அழகுநாதன் மற்றும் இருவருக்கு சொந்தமான வணிக வளாகத்திற்கு, தரைகீழ் தளம், தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் கட்ட, 27 ஆயிரத்து 338 சதுர அடியில், மாநகராட்சி, அனுமதி வழங்கியுள்ளது.
 
2008 ஜன.,10ல் அனுமதி பெற்றப்பட்டுள்ள நிலையில், அந்த ஆண்டில், 2,000 சதுர அடிக்கு மேல் அனுமதி வழங்க, மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிய 1 கி.மீ., உயர விதியான, 9 மீட்டரை மீறி, 12 மீட்டருக்கு அனுமதி வாங்கியுள்ளனர்.

2010 ஜன.,9க்கு பின், புதுப்பிக்கவில்லை. பெற்ற அனுமதியை விட, 46 அடி உயரத்திற்கு கட்டியிருந்தனர். இதைத்தொடர்ந்து, கமிஷனர் நந்தகோபால், நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி கமிஷனர் தேவதாஸ், உதவி நகரமைப்பு அலுவலர் நாராயணன் ஆகியோர், சம்மந்தப்பட்ட கட்டடத்திற்கு, நேற்று "சீல்' வைத்தனர்.
 
மேலும்,"விதிமீறல் கட்டடம் எனத்தெரிந்தும், அதற்கு வரைபடம் வரைந்த, மாநகராட்சி அனுமதிபெற்ற கட்டட வரைபட வரைவாளர் ஜெயசேகரின் உரிமத்தை ரத்து செய்ய,' கமிஷனர் உத்தரவிட்டார். அனுமதி வழங்கிய உதவி நகரமைப்பு அலுவலர் முருகேசன் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது."இதேபோல், விதிமீறல் கட்டடங்களுக்கு துணை போன, மாநகராட்சி அங்கீகாரம் பெற்ற வரைபட வரைவாளர்கள், இன்ஜினியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கமிஷனர் எச்சரித்துள்ளார்.
 

அடுத்த 25 மாதங்களில் 8 குடிநீர்த் திட்டங்கள் நிறைவு பெறும்

Print PDF
தினமணி         07.06.2013

அடுத்த 25 மாதங்களில் 8 குடிநீர்த் திட்டங்கள் நிறைவு பெறும்


தமிழகத்தில் அடுத்த 25 மாதங்களில் 8 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நிறைவு பெறும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அவர் மேலும்  பேசியது: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 2010-இல் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது. இதன்படி, 2012 டிசம்பருக்குள் பணிகள் முடிவடைய வேண்டும். ஆனால், அப்போது ஆட்சியிலிருந்த திமுக, திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்தவில்லை.

13 மாதங்களில் 18 சதப் பணிகளைகூட முடிக்கவில்லை. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று 16 மாதங்களில் 74 சதவீதப் பணிகளை முடித்து இப்போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 2012-இல் தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு 8 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  வேலூர் மாவட்டத்துக்கு காவிரிக் குடிநீர் வழங்கும் திட்டத்தை அறிவித்த திமுக அரசு அதைச் செயல்படுத்தாமலேயே அடிக்கல் வைத்தது.

ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இப்போது, 40 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. 12 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முடிந்து வேலூர் மாவட்டத்துக்கு காவிரி குடிநீர் வழங்கப்படும் என்றார் அவர்.
 


Page 178 of 506