Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கோவையில் அனுமதியின்றி செயல்பட்ட இறைச்சி, மீன் கடைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF
தினத்தந்தி         06.06.2013

கோவையில் அனுமதியின்றி செயல்பட்ட இறைச்சி, மீன் கடைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


கோவையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த இறைச்சி மற்றும் மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை மாநகராட்சி பகுதியில் ஏராளமான ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே ரோட்டின் ஓரத்தில் அனுமதியில்லாமல் ஏராளான இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள் செயல்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் லதாவுக்கு புகார் சென்றது.

அதன்படி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குனர் டாக்டர் அசோகன் தலைமையில் அதிகாரிகள் கோவை பகுதியில் நேற்று காலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கடைகள் அகற்றம்

இதில் கோவை கவுண்டம்பாளையத்தில் ரோட்டின் ஓரத்தில் இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள் செயல்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மாநகராட்சியில் எவ்வித அனுமதியும் பெறாமல் கடைகளை நடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அனுமதியின்றி செயல்பட்ட அந்த கடைகளை அதிகாரிகள் அகற்றியதுடன், அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்து இருந்த 50 கிலோ இறைச்சிகள் மற்றும் 20 கிலோ மீன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

7 கடைகள்

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரோட்டின் ஓரத்தில் இறைச்சி கடைகள் நடத்தப்படுவதால், ரோட்டில் செல்லும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, இறைச்சிகளில் படிகிறது. அவற்றை பொதுமக்கள் வாங்கி சாப்பிடும்போது பல்வேறு கொடிய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அனுமதியின்றி ரோட்டின் ஓரத்தில் செயல்பட்டு வரும் கடைகளை அகற்ற ஆணையாளர் உத்தரவிட்டார்.

அதன்படி 4 மீன் கடைகள் மற்றும் 3 இறைச்சி கடைகள் அகற்றப்பட்டு, அந்த கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும். எனவே ரோட்டின் ஓரத்தில் அனுமதியின்றி இறைச்சி மற்றும் மீன்கடைகளை வைக்கக்கூடாது.

கடும் நடவடிக்கை

மேலும் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் இறைச்சி கடைகள் மீது பல்வேறு புகார் வந்த வண்ணம் உள்ளது. கோழி இறைச்சியை விற்பனை செய்யும் கடைகளில் கோழி இறைச்சியை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அங்கு ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது.

அதுபோன்று ஆடு இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் மாடு மற்றும் கோழி இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் ஸ்ரீராம், மேற்பார்வையாளர் சரவணன், முருகன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.
 

பரமத்திவேலூர் பேருந்து நிலையக் கடைகள் ஏலம்

Print PDF
தினமணி        06.06.2013

பரமத்திவேலூர் பேருந்து நிலையக் கடைகள் ஏலம்


பரமத்திவேலூரில் புதிய பேருந்து நிலையக் கடைகள் புதன்கிழமை  ஏலம் விடப்பட்டன. இதில் அதிகபட்சமாக ரூ.16 ஆயிரத்து 700 வரை  ஏலம் போனது.

பரமத்திவேலூர் பழைய பேருந்து நிலையம் மிகவும் சிதலமடைந்து  இடிந்து விழும் நிலையில் இருந்ததால், பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கின. 2009-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பணிகள் 2012-ஆம் ஆண்டு நிறைவு பெற்றன.

ரூ. ஒரு  கோடியே 87 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்தப் புதிய பேருந்து நிலையத்தில் 30 கடைகள் மற்றும் ஹோட்டல்கள் கட்டப்பட்டது.  30 கடைகளில் 14 கடைகளை பழைய பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 16 கடைகளில் 7 மற்றும் 11-ஆம் எண் கடைகளுக்கு நீதிமன்ற வழக்கு தொடர்பாக  ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மீதமுள்ள 14 கடைகளுக்கு புதன்கிழமை காலை பரமத்திவேலூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஏலம் நடைபெற்றது. பேரூராட்சியின் தலைவர் வேலுச்சாமி, செயல் அலுவலர் குருராஜன், காவல் துறை ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

இதில் அதிகபட்சமாக 30-ஆம் எண் கடை ரூ.16 ஆயிரத்து 700-க்கும் (மாத வாடகையாக), குறைந்தபட்சமாக 15-ஆம் எண் கடை ரூ. 5 ஆயிரத்து 700-க்கும் (மாத வாடகையாக) ஏலம் போனது. கழிவறை ரூ. ஒரு லட்சத்து 81 ஆயிரத்துக்கு (ஆண்டுக்கு) ஏலம் போனது.

கடைகள் மற்றும் கழிவறைகள் மூலம் பேரூராட்சிக்கு ஓர் ஆண்டு வாடகையாக ரூ.20 லட்சத்து 95 ஆயிரமும், கடைகளுக்கான வைப்புத் தொகை  மூலம் ரூ.29 லட்சமும் வருமானம் கிடைக்கும். ஏலத்தின்போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
 

அரசு விதிகளை மீறினால் நடவடிக்கைபள்ளிகளுக்கு நகராட்சி சேர்மன் எச்சரிக்கை

Print PDF
தினமலர்         05.06.2013

அரசு விதிகளை மீறினால் நடவடிக்கைபள்ளிகளுக்கு நகராட்சி சேர்மன் எச்சரிக்கை


கடலூர்:கடலூரில் அரசு விதிகளின்படி மாணவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தராத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சேர்மன் சுப்ரமணியன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்படவுள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என புகார் வந்துள்ளது.எனவே நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் 50 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பறையும், 200 மாணவர்களுக்கு ஒரு கழிவறை வசதி ஏற்படுத்தியிருக்க வேண்டும். மேலும் பள்ளி வகுப்பறைகள் காற்றோற்ற வசதியுடன் இருக்க வேண்டும்.

சிறுநீர் கழிக்கும் இடம், கழிவறைகளில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க வேண்டும்.பள்ளிகளின் வெளியில் சுகாதாரமற்ற உணவு பண்டங்களை விற்பதை தவிர்க்க வேண்டும். பள்ளியின் சுற்றுச் சூழல் சுகாதாரமாக இருக்க வேண்டும். அரசு விதிகளை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்காக நான், கமிஷனர் மற்றும் சுகாதார அதிகள் கொண்ட குழு பள்ளிகளை திடீர் ஆய்வு செய்யும். இவ்வாறு சேர்மன் கூறினார்.
 


Page 180 of 506