Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அனுமதி பெறாத கட்டடங்களை இடிக்க உத்தரவு

Print PDF
தினமணி       05.06.2013

அனுமதி பெறாத கட்டடங்களை இடிக்க உத்தரவு


மேலூரில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா கேட்டுக் கொண்டார்.

  மேலூர் நகராட்சிப் பகுதிக்கான மக்கள் குறைகேட்புநாள் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆட்சியரிடம், 300-க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர். அவற்றின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

 இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

 கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து முதற்கட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. பின்னர் அரசு புறம்போக்கு, கண்மாய்களில் அடுóககி வைக்கப்பட்ட கற்கள் எண்ணப்பட்டு, சரியாக அளந்து மதிப்பிடப்பட்டன. இவைகளை இ-டெண்டர் மூலம் ஏலத்தில் விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 தனியார் நிலங்களில் அடுக்கி வைத்துள்ள கற்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால், அவற்றையும் கைப்பற்ற தொடர் நடவடிக்கைகள் நீதிமன்றம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 நான்குவழிச் சாலையில் விபத்துகளைத் தடுக்க, கிராமச் சாலைகள் சந்திப்பில் சோலார் விளக்குகளை ஊராட்சிகள் மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 பின்னர் மேலூர் பெரிய கடை வீதிப் பகுதியில் ஆய்வு செய்த ஆட்சியர், அனுமதி பெறாத, தெருக்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 நகராட்சியில் சில கோப்புகளை, ஆட்சியர் ஆய்வு செய்ததில் கட்டட அனுமதி அளித்தது, வரி விதிப்பில் தவறுகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, வேறு நகராட்சி அலுவலர்களை வைத்து கோப்புகளை ஆய்வு செய்து, தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

நகராட்சித் தலைவர் பங்கேற்கவில்லை:

 ஆட்சியர் பங்கேற்ற இக்குறைகேட்புக் கூட்டத்தில் நகராட்சித் தலைவர், கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

 மேலூர் நகராட்சி ஆணையர் பாஸ்கர சேதுபதி கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையராக அலாவுதீன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
 

அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF
தினமணி        05.06.2013

அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு


ஆலங்காயத்தில் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் பொ.சங்கர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

ஆலங்காயம் பேருந்து நிலையம் அருகே ரூ.5 லட்சத்தில் 5,000 லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அப்போது பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கால்வாயில் மழைக்காலங்களில் நீர் வெளியேறுவதால் தூர்வாரும் பணி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம்  பேரூராட்சித் தலைவர் மஞ்சுளா கந்தன் கோரிக்கை விடுத்தார். இப்பணி விரைவில் நடைபெறும் என ஆட்சியர் உறுதியளித்தார்.

இதையடுத்து, ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள நாயக்கனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி, காவலூரில் ரூ.1.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடம், ரூ.15.80 லட்சத்தில் அமைக்கப்படும் மந்தாரகுட்டை-ஆலங்காயம் சாலை ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், காவலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகை பதிவேடு மற்றும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது திட்ட அதிகாரி சீனிவாசன், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  பா.கருணாமூர்த்தி, உமாதேவி, பேரூராட்சி செயல் அலுவலர் வே.கோபாலன், பேரூராட்சித் துணைத் தலைவர் பாண்டியன், ஒன்றிய உதவி பொறியாளர் அரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

மாநகராட்சி நடத்தும் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர 28ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்

Print PDF
தினகரன்              04.06.2013

மாநகராட்சி நடத்தும் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர 28ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்


சென்னை, : மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் மத்திய அரசின் என்சிவிடி சான்றிதழ் உடன் கூடிய கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் (1 வருடம்) 40 இடம், எலக்ட்ரீசியன்(2 வருடம்) 21, மோட்டார் மெக்கானிக் (2 வருடம்), பிட்டர்(2 வருடம்), எலக்ட்ரானிக் மெக்கானிக்(2 வருடம்). பிளம்பர் (1 வருடம் ) 42 இடங்கள் என மொத்தம் 166 இடங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பிளம்பர் பயிற்சியில் சேர விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பயிற்சி வகுப்பில் சேருவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோர் 14 முதல் 40 வயது உடையவராக இருக்க வேண்டும்.

மாநகராட்சி பள்ளியில் படித்த மாணவர், மாநகராட்சி ஊழியர் குழந்தைகளுக்குசேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். மீதி காலியாக உள்ள இடங்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்கள் அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கப்படும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை உண்டு. முற்றிலும் இலவச பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்ப படிவம் சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி  நிலையம், நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி நகர், ஸ்கொயர் பிளாக், முத்தையா முதலி தெரு அருகில், லாயிட்ஸ் காலனி,  சென்னை&14, என்ற  முகவரியில்  இலவசமாக வழங்கப்படும்.

விவரங்களுக்கு 2847 3117 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 


Page 184 of 506