Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

Print PDF
தினமணி        04.06.2013

சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்


சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகள், மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (1 ஆண்டு), மின் பணியாளர் (2 ஆண்டுகள்), கம்மியர் மோட்டார் வாகனம் (2 ஆண்டுகள்), ஃபிட்டர் (2 ஆண்டுகள்), பிளம்பர் (1 ஆண்டு) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதில், பிளம்பர் பயிற்சியைத் தவிர மற்ற பயிற்சிகளில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளம்பர் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. அனைத்து படிப்புகளிலும் சேர்த்து மொத்தம் 166 இடங்கள் உள்ளன.

இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் அரசு விதிப்படி சேர்க்கப்படுவார்கள்.

பயிற்சியில் 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பயிற்சியில் சேருபவர்களுக்கு சீருடை இலவசமாக வழங்கப்படும்.

விண்ணப்பங்கள், "சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையம், நடிப்பிசை புலவர் கே.ஆர். ராமசாமி நகர், ஸ்கொயர் பிளாக், முத்தையா முதலி தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, சென்னை - 14' என்ற முகவரியில் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி ஜூன் 28. மேலும், விவரங்களுக்கு 044 28473117 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

நாமக்கல்லில் 12 ஆட்டிறைச்சி கடைகளுக்கு ரூ.7750 அபராதம்

Print PDF
தினமணி        03.06.2013

நாமக்கல்லில் 12 ஆட்டிறைச்சி கடைகளுக்கு ரூ.7750 அபராதம்


நாமக்கல்லில் உள்ள ஆட்டிறைச்சிக் கடைகளில் நகராட்சி அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட திடீர் ஆய்வில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 12 கடைகளுக்கு  7,750 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் நகரிலுள்ள இறைச்சிக் கடைகளில் திறந்த வெளியில் ஆடுகளை வெட்டுவதால் ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் உழவர் சந்தை அருகே ஆடுவதைக் கூடம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு கட்டண அடிப்படையில் ஆடுகளை மருத்துவப் பரிசோதனை செய்து சுகாதாரமான முறையில் வெட்டி முத்திரையிட்டு அளிக்கப்படுகிறது. நகரில் இறைச்சிக் கடை நடத்துவோர் ஆடுகளை இந்த ஆடுவதைக் கூடத்துக்குக் கொண்டு வந்து மருத்துவப் பரிசோதனை செய்து வெட்டி எடுத்துச் செல்ல வேண்டும் என நகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும்,  விதிமுறைகளைப் பின்பற்றாமல் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் வழக்கம்போல, திறந்த வெளியிலேயே ஆடுகளை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கமலநாதன் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர்கள் சண்முகவேல், சின்னதுரை, உதயகுமார் உள்ளிட்ட குழுவினர் நகராட்சிப் பகுதியிலுள்ள சுமார் 57 இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சேந்தமங்கலம் சாலை, கோட்டை சாலை, ஏஎஸ் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 12 கடைகளில் நகராட்சி ஆடுவதைக் கூட முத்திரை இல்லாத இறைச்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டுபிடித்த அலுவலர்கள் அந்தக் கடைகளுக்கு 7,750 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அந்தப் பகுதி கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 12 கிலோ பழைய இறைச்சியையும் அவர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

தொடர்ந்து இதேபோல் ஆடுவதைக் கூடத்துக்கு ஆடுகளை கொண்டு வராமல் தாங்களாகவே ஆடுகளை வெட்டி இறைச்சி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
 

மதுரைமாநகராட்சிபள்ளிகளில்93%மாணவர்கள்தேர்ச்சி

Print PDF
தினகரன்               01.06.2013

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 93% மாணவர்கள் தேர்ச்சி


மதுரை, :  மதுரையில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 24 உள்ளன. 10ம் வகுப்பு தேர்வில் இந்த பள்ளிகளில் சராசரியாக 93.48 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2 ஆயிரத்து 591 பேர் தேர்வு எழுதி, இவர்களில் 2 ஆயிரத்து 422 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் மாநில அளவில் மதுரை மாநகராட்சி தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

ஈவெரா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்திகா 494 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் கணிதம் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மதிப்பெண்களில் முதல் மூன்று இடங்களையும் மாணவிகள் பிடித்துள்ளனர். அதன் விவரம்:

முதலிடம்- கார்த்திகா, 494 மதிப்பெண், ஈ.வெ.ரா. மகளிர் மேல்நிலைப்பள்ளி. இவர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் சென்டம் வாங்கியுள்ளார்.

2-வது இடம்- சூரியதர்சினி, 490 மதிப்பெண், கஸ்தூரிபாய் மகளிர் மேல்நிலைப்பள்ளி. இவர் கணக்கில் சென்டமும், அறிவியல், சமூக அறிவியலில் தலா 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

3-வது இடம்- ஆசிகா, 488 மதிப்பெண், ஈ.வெ.ரா. மகளிர் மேல்நிலைப்பள்ளி.

4 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி: முனிச்சாலை (17 பேர்), அனுப்பானடி (26 பேர்) உயர்நிலைப்பள்ளிகள், சேதுபதி பாண்டித்துரை (26 பேர்) சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளி (128 பேர்) ஆகிய 4 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மற்ற பள்ளிகளில் தேர்வு எழுதியவர்கள் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை வருமாறு:

மாசாத்தியார் (பெண்கள்)- 95-க்கு 93, கஸ்தூரிபாய் காந்தி (பெ) 93-க்கு 91, மணிமேகலை (பெ)-      31-க்கு 30, பாரதியார் (ஆ)- 50-க்கு 49, பொன்முடியார் (பெ)-  150-க்கு 147, காக்கை பாடினியார்-    215-க்கு 210, வெள்ளி வீதியார் (பெ)- 194-க்கு 188, ஈ.வெ.ரா. (பெ)  - 646-க்கு 624, என்.எம்.எஸ்.எம். பள்ளி- 24-க்கு 23, இளங்கோ - 91-க்கு 87, அவ்வை (பெ) - 67-க்கு 61, கம்பர் (இருபாலர்)- 76-க்கு 69, மறைமலை அடிகளார்-  9-க்கு 8, பாண்டியன் நெடுஞ்செழியன்- 67-க்கு 59, சுந்தர்ராஜபுரம் - 128-க்கு 112, திரு.வி.க.- 325-க்கு 273, பாரதிதாசனார்- 56-க்கு 47, திருவள்ளுவர்- 32-க்கு 26, உமறுப்புலவர் (ஆ)- 13-க்கு 10, தல்லாகுளம் உயர்நிலைபள்ளி- 32-க்கு 18.
 


Page 186 of 506