Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மெட்ரோ ரயில் நிறுவனம் மீது மாநகராட்சி புகார்

Print PDF
தினமணி          23.05.2013

மெட்ரோ ரயில் நிறுவனம் மீது மாநகராட்சி புகார்


சென்னையில் உள்ள புராதான கட்டடங்களின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் அளிக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 மாநகராட்சி மன்றக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது, துணை மேயர் பா. பெஞ்சமின்  கேள்வியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் வழித்தடத்தில் உள்ள புராதான கட்டடங்களின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்துள்ளதா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 இது குறித்து கருத்து தெரிவித்த மேயர் சைதை துரைசாமி, புராதான கட்டடங்களின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் வழங்கவேண்டும். ஆனால், இதுவரையில் புராதான கட்டடங்களின் பாதுகாப்பு குறித்த அறிக்கை அளிக்கப்படவில்லை.

 இந்த அறிக்கையை அளிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. எனவே துணை மேயர் கேட்ட கேள்விக்கு அடுத்த மன்றக் கூட்டத்தில் பதில் அளிக்கப்படும் என்றார்.
 

மழைநீர் கால்வாயில் கழிவுநீரை செலுத்தினால் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடை உரிமம் ரத்தாகும் மேயர் சைதை துரைசாமி எச்சரிக்கை

Print PDF
தினத்தந்தி        23.05.2013

மழைநீர் கால்வாயில் கழிவுநீரை செலுத்தினால் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடை உரிமம் ரத்தாகும் மேயர் சைதை துரைசாமி எச்சரிக்கை


மழைநீர் கால்வாயில் கழிவுநீரை செலுத்தினால் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று மேயர் சைதை துரைசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநகராட்சி மன்ற கூட்டம்

சென்னை மாநகராட்சியின் சாதாரண மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கட்டிடத்தில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் பென்ஞ்சமின், மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தினை மேயர் சைதை துரைசாமி திருக்குறள் வாசித்து தொடங்கிவைத்தார். பின்னர் மேயர் சைதை துரைசாமி தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

890 கழிப்பிடங்கள்

அதைத் தொடர்ந்து கேள்வி–நேரம் தொடங்கியது. கேள்வி–நேரத்தின் போது நடைபெற்ற விவாதம் வருமாறு:–

பி.வி.தமிழ்செல்வன் (காங்கிரஸ்):– சென்னை மாநகராட்சியில் கட்டண கழிப்பிடங்கள் எத்தனை? சென்னை மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பிடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மாநகராட்சியின் பணியாளர்களா? அல்லது ஒப்பந்த பணியாளர்களா?

மேயர் சைதை துரைசாமி:– சென்னை மாநகராட்சியில் மொத்தம் 890 கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றில் கட்டண கழிப்பிடங்கள் 102 ஆகும். சென்னை மாநகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பிடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததார பணியாளர்களும் பணி புரிந்து வருகின்றன

ரிப்பன் மாளிகை புதுப்பொலிவு எப்போது?

பி.சீனிவாசன் என்கிற எம்.ஜி.ஆர்.வாசன் (அ.தி.மு.க.):– சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டிடம் முதலில் எப்போது புணரமைக்கும் பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டது? தற்போது புணரமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது? எவ்வளவு நாட்களில் பணி முடிவு பெற்று புதுப்பொலிவுடன் செயல்பாட்டிற்கு வரும்?

மேயர் சைதை துரைசாமி:– ரிப்பன் மாளிகை புரணமைக்கும் பணி 16.11.2009 அன்று தொடங்கப்பட்டது. பணியின் முடிவுத்தொகை ரூ.9 கோடியே 55 லட்சமாகும். தற்சமயம் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேற்படி பணியானது வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். அதன் பின்னர் ரிப்பன் மாளிகை புதுப்பொலிவுடன் செயல்பாட்டிற்கு வரும்.

மேயர் எச்சரிக்கை

சத்திய நாராயணன் (எ) ப.சத்தியா (அ.தி.மு.க.):– மழைநீர் வடிகால்வாயில் வியாபாரிகள் தங்களது கடைகளின் கழிவுநீரை உபயோகப்படுத்துகிறார்கள். எனவே மழைநீர் வடிகால்வாய் பெரிய கால்வாயுடன் கட்டவும், அனுமதியின்றி செல்லும் கழிவுநீரை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேயர் சைதை துரைசாமி:– மழைநீர் கால்வாயில் கழிவு நீரை பயன்படுத்தும் கடைகள் கண்டறியப்பட்டால் அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்படும், வீடுகளில் மழைநீர் கால்வாயில் கழிவு நீரை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய மூலம் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கூட்டத்தில் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.
Last Updated on Thursday, 23 May 2013 08:36
 

4–வது பைப்லைன் திட்டத்துக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF
தினத்தந்தி        23.05.2013

4–வது பைப்லைன் திட்டத்துக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


தூத்துக்குடி மாநகராட்சி 4–வது பைப்லைன் திட்டத்துக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று காலை கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சசிகலாபுஷ்பா தலைமை தாங்கினார். துணை மேயர் சேவியர், ஆணையாளர் சோ.மதுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் சசிகலாபுஷ்பா பேசும் போது, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்க 4–வது பைப்லைன் திட்டத்தை தந்த முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.

ரூ.282¼ கோடி

கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.282 கோடியே 44 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் அபிவிருத்தி திட்டமான 4–வது பைப்லைன் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 6 பிரிவுகளாக பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டது. இதனை ஏற்று நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி என்ஜினீயர் ராஜகோபாலன், மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
Last Updated on Thursday, 23 May 2013 08:36
 


Page 202 of 506