Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

"சாலைகளில் அலங்கார வளைவுகள் அமைக்க அனுமதி தேவை

Print PDF
தினமணி        21.05.2013

"சாலைகளில் அலங்கார வளைவுகள் அமைக்க அனுமதி தேவை


சாலைகளின் குறுக்கே தாற்காலிக அலங்கார வளைவு வைக்க முறையான அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குடும்ப விழாக்கள், மதம் சம்மந்தமான விழாக்கள், கூட்டங்கள் கல்லூரி விழாக்கள் ஆகிய நிகழ்வுகளின்போது தாற்காலிக அலங்கார வளைவுகளை சாலைகளின் குறுக்கே வைப்பது பிரபலமாக உள்ளது.

இத்தகைய அலங்கார வளைவுகளை அமைப்பதால் பல்வேறு சமயங்களில் சட்டம், ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் தாற்காலிக அலங்கார வளைவு வைக்க அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறியது: தாற்காலிக அலங்கார வளைவு வைக்கக் கோரும் சாலை உள்ளாட்சிக்குச் சொந்தமானது எனில், சம்மந்தப்பட்ட பேரூராட்சி செயலர் அலுவலர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது நகராட்சி ஆணையர் ஆகியோரது சம்மதக் கடிதத்துடனும், நெடுஞ்சாலைக்கு சொந்தமானது எனில் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளர் ஆகியோரது சம்மத கடிதத்துடனும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிந்துரையுடன், சம்மந்தப்பட்ட டிஎஸ்பிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் என்றார்.
 

துப்புரவுப் பணியாளர் நேர்முகத் தேர்வு

Print PDF
தினமணி        21.05.2013

துப்புரவுப் பணியாளர் நேர்முகத் தேர்வு


பண்ருட்டி நகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு, மின்னாளர், குழாய் பொருத்துனர் பணி இடங்களைப்  பூர்த்தி செய்வதற்கான நேர்முகத் தேர்வு நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடந்தது.

காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நாடுனர் பட்டியல் பெறப்பட்டு, நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 22 பணியிடங்களுக்கு 115 பேர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். தேர்வை ஆணையர் (பொறுப்பு) ஆர்.ராதா நடத்தினார்.
 

சுற்றித் திரிந்த பன்றிகள் பிடிப்பு:விழுப்புரம் நகராட்சி நடவடிக்கை

Print PDF
தினமணி        19.05.2013

சுற்றித் திரிந்த பன்றிகள் பிடிப்பு:விழுப்புரம் நகராட்சி நடவடிக்கை


விழுப்புரம் நகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த பன்றிகளை செவ்வாய்க்கிழமை நகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர்.

விழுப்புரம் நகராட்சியின் பல இடங்களில் பன்றிகள் சர்வசாதாரணமாக சுற்றித் திரிந்தன. குறிப்பாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்கள், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் ஆகிய இடங்களிலும் பன்றிகள் சுற்றித் திரிந்தன.

இந் நிலையில் இது தொடர்பாக விழுப்புரம் நகராட்சி ஆணையருக்கு பல்வேறு புகார் மனுக்கள் சென்றன. இதனைத் தொடர்ந்து நகராட்சியின் சுகாதார ஊழியர்கள் பன்றிகளை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விழுப்புரம் ஏ.பி.எஸ். நகர், பாண்டியன் பூங்கா நகர் மற்றும் பாப்பான்குளம் ஆகிய இடங்களில் சுற்றித் திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டன.
 


Page 207 of 506