Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தாராபுரம் நகராட்சியில் கருணை அடிப்படையில் 11 பேருக்கு துப்புரவு பணியாளர் பணிநியமன ஆணை தலைவர், ஆணையாளர் வழங்கினார்கள்

Print PDF
தினத்தந்தி         16.05.2013

தாராபுரம் நகராட்சியில் கருணை அடிப்படையில் 11 பேருக்கு துப்புரவு பணியாளர் பணிநியமன ஆணை தலைவர், ஆணையாளர் வழங்கினார்கள்


தாராபுரம் நகராட்சியில் கருணை அடிப்படையில் 11 பேருக்கு துப்புரவு பணியாளர் பணிநியமன ஆணைகளை தலைவர், ஆணையாளர் வழங்கினார்கள்.

பணிநியமன ஆணை

திருப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு நகராட்சிகளில் பணியில் இருக்கும்போது மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் தங்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து அவர்களின் மனுவை பரிசீலனை செய்த தாராபுரம் நகராட்சி நிர்வாகம், 6 பெண்கள் உள்பட 11 பேருக்கு பணி வழங்கலாம் என்று திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனருக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து தாராபுரம் நகராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று 11 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து தாராபுரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை நகராட்சி தலைவர் கலாவதி, ஆணையாளர் சரவணக்குமார் ஆகியோர் 11 பேருக்கும் வழங்கினார்கள். பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட துப்புரவு பணியாளர்கள் அனைவரும் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

50 காலி இடங்கள்

தாராபுரம் நகராட்சியில் மொத்தம் 151 துப்புரவு பணியாளர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் 90 துப்புரவு பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.

தற்போது 11 பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. எனவே மீதமுள்ள 50 காலி பணிஇடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நிரப்ப நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
 

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

Print PDF
தினமணி        16.05.2013

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்


நகராட்சிப் பகுதியில் விநியோகிக்கும் குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துவிட்டது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 200 கனஅடியாக குறைந்துவிட்டதால் ஆற்றில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுத்து நகராட்சி குடிநீர் தொட்டியில் நிரப்பபட்டு, அதனை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்குமாறு நகராட்சி சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது.

பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துபோன நிலையிலும் சத்தி நகராட்சி மட்டுமே தினமும் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தண்ணீர் எடுக்கும் ஆற்றுப்பகுதி தற்போது சுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

பொருட்காட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்

Print PDF
தினகரன்         15.05.2013

பொருட்காட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்


திருச்சி, : திருச்சியில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் மாநகராட்சி அரங்கில் பிறப்பு, இறப்பு சான்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது செய்திக்குறிப்பு:

திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அரசு பொருட்காட்சி கடந்த 11ம் தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகின்றது. இதில் அரசுத்துறை, தனியார் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள் ளன. மேலும் மக்கள் பொழுதுபோக்குவதற்கு ஏற்ற வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் திருச்சி மாநகராட்சி சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதிக் குள் கடந்த 1997ம் ஆண் டுக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகளை கட்டணமின்றி இலவசமாக பெற்றுக்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. தவிர பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் சேகரித்து கொடுப்போருக்கு பரிசு கூப்பன் கள் வழங்கப்பட்டு அதிர் ஷ்ட குலுக்கல் மூலம் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி அரங்குக்கு வரும் பார்வையாளர்களுக்கு, சுகாதாரத் துறை சார்பில் ரத்த அழுத் தம், மற்றும் சர்க்கரை அளவு ஆகியன ரத்தபரிசோதனை மூலம் சோதித் துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 


Page 211 of 506