Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கோவையில் மேலும் 4 கட்டிடங்களுக்கு சீல் வைப்பு

Print PDF
தினகரன்                   08.05.2013

கோவையில் மேலும் 4 கட்டிடங்களுக்கு சீல் வைப்பு


கோவை, : கோவை நகரில் விதிகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்ட மேலும் நான்கு கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

கோவையில் கடந்த ஏப்ரல் மாதம் அவிநாசி சாலை லட்சுமி மில் சந்திப்பில் தனியார் வணிகவளாகம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண் ஊழியர்கள் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பிறகு கோவை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்தின் சார்பில் விதிமீறியும், அனுமதியில்லாமலும் கட்டப்பட்டு வருகிற, ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட  கட்டடங்களின் மீது நடவடிக்கை பாய்ந்தது. மொத்தம் 201 கட்டடங்கள் மாநகரில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக உள்ளூர் திட்டக்குழுமமும், நகரமைப்பு பிரிவும் நோட்டீஸ் அளித்தன.

கடந்த ஏப்ரல் 27 முதல் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்ட கட்டடங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் நடவடிக்கையை நிறுத்தி வைத்து அதிகாரிகள் கூட்டம் நடத்தி ஆலோசித்தனர். இதன் பின்னர் மாலையில் நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள் 4 கட்டடங்களுக்கு சீல் வைத்தனர். கோவை மசக்காளிபாளையம் சாலையில் அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டு வரும் வணிகவளாகம் இரண்டிற்கும் சீல் வைத்தனர்.

முன்னதாக அங்கு பணிய £ற்றி வரும் பணியாளர்களை வெயியேற்றினர். அதேபோல் கோவை திருச்சி சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தனியார் மருந்துக்கடை செயல்பட்டு வந்தது. அதற்கு மேலே எந்த அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டு வந்த முதல் தளத் தை மூடியும் சீல் வைத்தனர். மேலும் அதே சாலையில் கட்டப்பட்டு வரும் இரண்டு மாடி கட்டடம் ஒன்றிற்கும் சீல் வைத்தனர்.

நேற்று சீல் வைத்த இந்த நான்கு கட்டடங்களையும் சேர்த்து மொத்தம் இதுவரை 56 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டனர்.
 

உரிமையாளர்களுக்கு நகராட்சி எச்சரிக்கை:கட்டடங்களுக்கு அவசரகால வழி அவசியம்

Print PDF
தினமலர்        08.05.2013

உரிமையாளர்களுக்கு நகராட்சி எச்சரிக்கை: கட்டடங்களுக்கு அவசரகால வழி அவசியம்


பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட அடுக்குமாடி கட்டடங்களில் தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு கருவிகள் முறையாக பயன்படுத்த வேண்டும், அவசர கால வழி, ஏற்படுத்த வேண்டும் என்று கட்டட உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளன. இக்கட்டடங்களில் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இவற்றிற்கு ஏற்கனவே நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் கோவையிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு நான்குபேர் இறந்தனர். இதையடுத்து, அடுக்குமாடி கட்டடங்களில் தீத்தடுப்பு சாதனங்களை பொருத்துமாறும், அவசரகால வழி ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி, பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட அடுக்குமாடி கட்டட உரிமையாளர்களை நேற்று அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது.தீ தடுப்பு பாதுகாப்பு முறை குறித்து தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் புளுகாண்டி பேசுகையில், ""தானியங்கி தீத்தடுப்பான், அறைக்கு ஏற்றாற் போல் தீ தடுப்பு சாதனங்கள், அனைத்து கட்டடங்களிலும் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஒரு கட்டடத்துக்கு இரண்டு வழி விட வேண்டும். பிரம்மாண்டமான நுழைவு வாயிலை ஏற்படுத்த வேண்டும் அவசரகாலவழியை தனியாக ஏற்படுத்தவேண்டும். அந்த வழியை எக்காரணத்தை கொண்டும் அடைக்கக்கூடாது,'' என்றார்.இதை 15 நாட்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரமைப்பு அலுவலர் சவுந்தர்ராஜன், நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் ஆகியோர் கூறினர். கூட்டத்துக்கு பொள்ளாச்சி நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
 

நான்கு வணிக வளாகங்களுக்கு "சீல்'இதுவரை சிக்கியது 56 கட்டடங்கள்

Print PDF
தினமலர்        08.05.2013

நான்கு வணிக வளாகங்களுக்கு "சீல்' இதுவரை சிக்கியது 56 கட்டடங்கள்

கோவை:விதிமீறி கட்டப்பட்ட நான்கு வணிக வளாகங்களுக்கு, மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் நேற்று "சீல்' வைத்தனர்.கோவையில் கடந்த 25ம் தேதி தனியார் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் விதிமீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களுக்கு "சீல்' வைக்கப்படுகிறது.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் இணைந்து, நேற்று முன்தினம் வரையிலும் 52 வணிக வளாகங்களுக்கு "சீல்' வைத்திருந்தனர். நேற்று மதியம் மீண்டும் "சீல்' வைக்கும் பணி துவங்கியது."சீல்' வைக்கப்பட்ட வணிக வளாகங்கள் விபரம்:

* மசக்காளிபாளையம் ரோடு, லட்சுமிபுரம் சந்திப்பில், பீளமேடு பி.ஆர்.புரம் சாஸ்திரி வீதியை சேர்ந்த உமாபதி என்பவர், தரை மற்றும் முதல் தளத்திற்கு அனுமதி பெற்று, மூன்று தளங்கள் (7500 சதுர அடி) விதிமீறி கட்டியிருந்தார். அக்கட்டத்திற்கு அதிகாரிகள் நேற்று "சீல்' வைத்தனர்.* சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில், அதே பகுதியை சேர்ந்த அகிலாண்டம் என்பவர், தரை மற்றும் முதல் தளத்திற்கு அனுமதி பெற்று, விதிமுறையை மீறி மூன்று தளங்களுடன் (10 ஆயிரம் சதுர அடி) வணிக வளாகம் கட்டியிருந்தார். அக்கட்டடத்திற்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.*    திருச்சி ரோடு ராமநாதபுரத்தில், அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், தரை மற்றும் முதல் தளத்திற்கு அனுமதி பெற்று, அனுமதியை மீறி இரண்டு தளம் (நான்காயிரம் சதுர அடி) கட்டிய கட்டடம்.*    திருச்சி ரோடு ராமநாதபுரத்தில், அதே பகுதியை சேர்ந்த மாணிக்கவள்ளி, தரை மற்றும் முதல் தளத்திற்கு அனுமதி பெற்று, அனுமதிக்கு முரணாக மூன்று தளங்கள் (மூவாயிரம் சதுர அடி) கட்டியிருந்தார். அக்கட்டடத்திற்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
 


Page 217 of 506